எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம்கள் 6 வட்டங்களில் நாளை(30_ந் தேதி) நடைபெறுகிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-
அம்மா திட்ட முகாம்
நீலகிரி மாவட்டத்தில் 24.07.2015 முதல் அம்மா திட்டம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. இதில் முதியோர் ஓய்வூதியத்தொகை, விதவை உதவித்தொகை, நலிந்தோர் உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, புதிய உழவர் அட்டை, வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் வருமான சான்று, சாதி சான்று, விதவை சான்று மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பெயர்சேர்த்தல், நீக்குதல் போன்ற மக்கள் நல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தோட்டக்கலைத்துறை, சமூக நலத்துறை, மின்வாரியம் மற்றும் வளர்ச்சித்துறை சார்ந்த குறைகள் கேட்டு குறை நிவர்த்தி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.
5_வது வெள்ளிக்கிழமை
இத்திட்டமானது டிசம்பர் மாதம் 5_வது வெள்ளிக்கிழமையான நாளை(30_ந் தேதி) ஊட்டி வட்டத்தில் மசினகுடி சமுதாய கூடம், குன்னூர் வட்டத்தில் பழைய அருவங்காடு இந்திரா நகர் சமுதாய கூடம், கோத்தகிரி கீழ்கோத்தகிரி பஜார் சமுதாயகூடம், குந்தா வட்டத்தில் பெங்கால் மட்டம் சமுதாயகூடம், கூடலூர் வட்டத்தில் பாண்டியார் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, பந்தலூர் வட்டத்தில் கல்லிச்சால் அரசு உண்டு உறைவிடப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. எனவே இப்பகுதி மக்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் பொ.சங்கர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


