முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.2 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார்

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      வேலூர்

வேலூர் கலெக்டர் அலுவலகத்திலுள்ள காயிதே மில்லத் அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிலப்பட்டா புதிய குடும்ப அட்டை, பட்டாமாறுதல் வேலைவாய்ப்பு கடனுதவி நிதியுதவி இலவச வீட்டுமனைப்பட்டா மாற்றுதிறனாளிகளுக்கு உதவி முதியோர் உதவித் தொகை காவல்துறை பாதுகாப்பு மின் இணைப்பு மற்றும் பொதுநல மனுக்கள் என 373 மனுக்களை வழங்கினர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர்  சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.இம்மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000ஃ- வீதம் 4 குடும்பங்களுக்கு ரூ.2 இலட்சத்திற்கான காசோலைகளை கலெக்டர் சி.அ.ராமன்,  வழங்கினார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.மணிவண்ணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பரமேஸ்வரி,; சமூக பாதுகாப்புத் துறை அலுவலர் செல்வராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி, மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்