எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊட்டி ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவிலில் தை பெருவிழா நடைபெற உள்ளது.
தேர்பவனி
ஊட்டி பிங்கர்போஸ்ட் பெரியார் நகர் கேம்ப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் சித்தர் பீடத்தில் தை பெருவிழா இன்று (20_ந் தேதி)தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. அதனையொட்டி இன்று பகல் 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் தேர்பவனி நடைபெறுகிறது. தொடர்ந்து ஸ்ரீ மசினியம்மன் கோயிலிலிருந்து அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வரப்படுகிறது. பகல் 1 மணிக்கு அன்னதானம், 3 மணிக்கு சௌந்தயரிய லஹாரி பூஜையும் மண்டலி பூஜையின் சிறப்பு வழிபாடும் நடக்கிறது.
சிறப்பு பூஜை அன்னதானம்
21_ந் தேதி முற்பகல் 11 மணிக்கு அருள்மிகு பிரத்தியங்கராதேவிக்கு நிகும்பல மாகா யாகமும், 12 மணிக்கு அபிஷேகமும், 1 மணிக்கு அன்னதானமும், மாலை 3 மணிக்கு பராசக்தி மன்றத்தினரின் சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது. 22_ந் தேதி காலை 10.30 மணிக்கு அன்னையின் திருக்கரகம் தீச்சட்டி ஏந்தி சித்தர் வரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து பக்தர்கள் தங்கள் திருக்கரங்களால் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சியும், பகல் 1 மணிக்கு அன்னதானமும் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தேவி கருமாரியம்மன் சித்தர் பீட நிர்வாகி தவத்திரு சிவாசாமி அடிகளார் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


