கோவில்பட்டி
கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் கீழ் கழிவுகளை அகற்றுவதற்காக துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.18 லட்ச செலவில் வாங்கப்பட்ட 100 குப்பை தள்ளுவண்டிகளை துப்புரவு தொழிலாளர்களிடம் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் முருகேசன், பொறியாளர் சுப்புலெட்சுமி, சுகாதார அலுவலர் ஸ்டாலின்குமார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.