முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாகன விபத்து வழக்கு கணினியில் பதிவேற்றம்:எஸ்.பி. பொன்னி தகவல்

புதன்கிழமை, 1 மார்ச் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் இரா.பொன்னி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுபடி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் (மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் அனைத்து தனிப்பிரிவுகள் உட்பட) முதல் தகவல் அறிக்கையானது கணினி வழியில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும் வாகன விபத்துக்களில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் அனைத்து ஆவணங்களும் கணினியில் பதிவேற்றம் செய்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி நேற்று (புதன்கிழமை) திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையம், கீழ்பென்னாத்தூர் காவல் நிலையம் வெறையூர் மற்றும் களம்பூர் ஆகிய காவல் நிலையங்களில் முதல் கட்டமாக வாகன விபத்து வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்