முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூமி உள்ள வரை மறைந்த முதல்வர் ஜெயலலிதா புகழ் நிலைத்து நிற்கும் பாண்டியன் எம்.எல்.ஏ. புகழாரம்

புதன்கிழமை, 1 மார்ச் 2017      கடலூர்
Image Unavailable

சிதம்பரம்,

கழக பொதுச்செயலாளர் மதிப்பிறகுரிய சின்னம்மா அவர்களின் மேலான ஆணைக்கிணங்க அ இ அ தி மு கழகத்தின் வாழ்நாள் பொதுச் செயலாளர் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 69 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கடலூர் மேற்கு மாவட்டம் குமராட்சி ஒன்றிய கழகத்தின் சார்பில் அண்ணாமலைநகரில் குமராட்சி ஒன்றிய கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன்  தலைமையில் நடைபெற்றது. அண்ணாமலைநகர் கழக செயலாளர் முத்தையன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் முருகையன், அண்னாமலைநகர கழக நிர்வாகிகள் இளங்கோ, ஆறுமுகம், ராஜரத்தினம், சசிக்குமார், தங்க கோபால், தலமை கழக பேச்சாளர்கள் செல்வம், சேகர், கலியமூர்த்தி, மணிபாரதி, ராமு, செலவராஜ், கருணாகரன், அன்புகாந்தி, ரகுநாத், முத்துராமன், வாசுதேவன், உத்திராபதி, கணபதி, திருமூர்த்தி, ஷண்முகசுந்திரம், ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமராட்சி ஒன்றிய கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன்  தலைமை உரையில்: மறைந்த   புரட்சித்தலைவர் அம்மா  மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்து மறைந்தவர். அவரின் திட்டங்கள் யாவும் ஏழை எளிய மக்களின் துயர்களை போக்குகின்ற திட்டங்கள் என்றால் அது மிகை ஆகாது. கடந்த சட்டமன்ற தேர்தலில் சொன்ன வாக்குறுதிகள் மட்டுமன்றி சொல்லாத பல சாதனை திட்டங்களை தந்தவர் நமது புரட்சித்தலைவி அம்மா . இன்றைக்கு அவர் நம்மிடத்தில் இல்லை என்றாலும் அவரின் திட்டங்கள் யாவும் பூமி உள்ள வரை மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும். புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு பிறகு கழகத்தினை ரானுவ கட்டுப்பாட்டோடு வழி நடத்தி அம்மா அவர்களின் கனவுகளை நினைவாக்கி கொண்டு வர பாடுபட்டுக் கொண்டு இருப்பவர் நம் தியாகத் தலைவி மாண்புமிகு சின்னம்மா . அவரின் மேலான அலோசனையின் பேரில் இன்று கழகத்தின் ஆட்சி தமிழக மக்களின் வளர்ச்சிக்கு அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக் கொண்டு இருக்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினை எவராலும் வீழ்த்தி விட முடியாது. அப்படி வீழ்த்த நினைத்தவர்கள் வீழ்ந்ததாக தான் சரித்திரம் உண்டு. கழகத்தின் 11/2 கோடி தொண்டர்களும் மாண்புமிகு சின்னம்மா அவர்களின் தலைமையின் கீழ் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மரியாதைக்குறிய டி.டி.வி.தினகரன் அவர்களின் மேலான வழிகாட்டுதலின் படி ஒன்று பட்டு செயலாற்றி எதிர் வருகின்ற உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் கழகம் மிக சிறப்பான வெற்றியினை பெற்று அம்மா அவர்களின் மக்கள் நலப் பணிகளை தொடர்ந்து தமிழக மக்களுக்கு செயலாற்றி வரும் என்றார்.கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்வி இராமஜெயம், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் மாரிமுத்து, மாவட்ட கழக அவைத்தலைவர் எம்.எஸ்.என்.குமார், சிதம்பரம் நகர கழக செயலாளர் செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் பா.மில்லர், ஒன்றிய கழக நிர்வாகிகள் சுந்திரமூர்த்தி, வழக்கறிஞர் செல்வகணபதி, கோவிந்தராசு, உமாமாயகிருஷ்ணன், ராஜகுமாரி, சாந்திமுருகேசன், குருசாமி, ஒன்றிய பேரவை செயலாளர் ஜெயமணி, மாவட்ட பேரவை துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், கீழவண்ணியூர் செல்வம், ஒன்றிய பாசறை செயலாளர் சந்திரமோகன், பரங்கிப்பேட்டை ஒன்றிய கழக அவைத்தலைவர் கோவி.ராசாங்கம், மு.ஒன்றிய கழக பொருளாளர் முத்துக்குமரன், கிளை செயலாளர் பிரபு, செல்வம், கார்த்திகேயன், ஜே.கெ.முத்து மர்றும் ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் கிளை கழக நிர்வாகிகள் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்