எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் குடிசை வீடுகளே இல்லாத உன்னத இலக்கை அடைகின்ற வகையில் அனைவருக்கும் வீடுகள் கட்டும் திட்டத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்புறவளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பெருமிதம்
வீடு கட்டும் திட்ட பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோயம்புத்தூர் மண்டலத்தைச் சேர்ந்த 10மாவட்டங்களைச் சேர்ந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய துறைகளின் மூலம் குடிசை மாற்று வாரியம் மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் வீடில்லாத அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தில் மேற்கொள்ளபபட்டு வரும் பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் தமிழ்நாடு வீட்டுவசதித்துறை மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை செயலாளர் தர்மேந்திரபிரதாப் யாதவ் மற்றும் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்றுவாரிய முதன்மை செயலாளர், மேலாண்மை இயக்குநர் ஷம்புகல்லோலிகர் ஆகியோர் தலைமையில் மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன் முன்னிலையில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புதிட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மாவட்ட வாரியாக அலுவலர்களிடம் அனைவருக்கும் வீடுகள் கட்டும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு மேலும், ஆலோசனையினையும் வழங்கி தெரிவித்ததாவது,
தமிழகத்தில் குடிசைகளே முற்றிலும் இல்லாத மாநிலம்
இந்த ஆய்வுக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில்,
அம்மா அவர்களின் கனவுத்திட்டமான அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் துவக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து அம்மா அவர்களின் நல்லாசியுடன் இத்திட்டம் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அம்மா இத்திட்டத்தை துவக்கி வைக்கும்பொழுது, முதல்கட்டமாக 10லட்சம் வீடுகள் பயனாளிகளுக்கு கட்டி வழங்கப்படும் அதற்காக ஒவ்வொரு வீட்டிற்கும், ரூ.2.10லட்சம் முழு மான்யம் வழங்கப்படும் என அறிவித்து துவ்க்கி வைத்தார்கள். அதற்கேற்ப இன்றும் அம்மா வழியில் நடைபெற்று வரும் தமிழக அரசு தமிழக முதல்வர் அவர்களின் ஆலோசனைப்படி, இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் முக்கிய நோக்கம் தமிழகத்தில் குடிசைகளே முற்றிலும் இல்லாத மாநிலமாகவும், மற்றும் ஓட்டு வீடு, சிமெண்ட் சீட் வீடு ஆகியவை அப்புறப்படுத்தப்பட்டு அனைத்துப்பகுதிகளிலும் காண்கீரீட் வீடு அமைத்துக் கொடுக்கவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். அதன்படி, குடிசை மாற்று வாரியம் மூலம் 2,46,000 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருவதுடன் இதில் 1,00,000வீடுகள் பணி முடிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு அதிகளவு வீடுகட்டி கொடுத்த மாநிலமாக தமிழகம், முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகின்றது என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.
வீடில்லா குடும்பங்களுக்கு
கோவை மாவட்டத்தை பொருத்தவரை, 10,000த்திற்கும் மேற்பட்ட வீடுகள் மாநில அரசின் நிதியுதவித்திட்டத்தின் கீழும் மற்றும் மத்திய அரசு நிதியுதவித்திட்டத்தின் கீழும் கட்டப்பட்டு வழங்கப்பட்டதுடன் மாவட்டத்தில் அனைத்துப்பகுதிகளிலும், பசுமை வீடு திட்டத்தில் ரூ.2.10லட்சம் மதிப்பீட்டில் முழு மான்யத்துடன் வீடு கட்ட பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படுகிறது. வீட்டுமனை இடமிருந்தால் போதும், உடனடியாக வீடுகட்ட உரிய ஆணை வழங்கப்படும் அதுமட்டுமின்றி வீடு கட்டவோர்க்கு எளிய வகையில் மான்ய விலையில் அம்மா சிமெண்ட் வழங்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி ஒரு குடும்பத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் திருமணமாகியிருந்தால் அவர்களுக்கு வீடு இல்லாத நிலையை கருத்தில் கொண்டு வசிக்கும் வீட்டின் மாடியிலே வீடு கட்ட அதற்கும் ரூ.2.10லட்சத்திற்கான ஆணை வழங்கப்படுகிறது. அதேபோல், சிலப்பகுதிகளில் இடம் இல்லாத நிலையை கருத்தில்கொண்டு தொகுப்பு வீடுகள் கட்டவும், பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதேபோல், அரசு மான்ய தொகையை விட கூடுதலாக செலவுசெய்து வீடு கட்டுவோர்களுக்கு, ரூ.6.00லட்சம் வரை குறைந்த வட்டியில் மான்ய கடனும் வழங்க்பட்டு வருகின்றது. இதுபோல் ஏழை எளிய வீடில்லாத குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கான திட்டங்கள் முழுமையாக அம்மா அவர்களின் அரசு செயல்படுத்தி வருகிறது. அதை நல்ல முறையில் பயன்படுத்தி பயன்பெற்றுக்கொள்ள வேண்டுமென நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாhர்.
தொடர்ந்து வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசுகையில்,
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், அடித்தட்டு குடிசை வாழ் மக்களின் குறைகளை களைந்து அவர்களுக்கு நல்வாழ்வு அளிப்பதில் நாட்டிலேயே முன்னோடி நிறுவனமாக விளங்குகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா அறிவித்த தொலைநோக்கு திட்டம் - 2023-ன் படி தமிழ்நாட்டை குடிசைப்பகுதிகளில்லா மாநிலமாக 2023-க்குள் மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு “பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம்” என்ற புதிய திட்டத்தை ஜீன் 2015-ல் அறிவித்தது. அதன்படி நாட்டிலுள்ள வீட்டற்ற ஏழை மக்கள் அனைவருக்கும் 2022-ம் ஆண்டிற்குள் வீடுகள் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக மத்திய அரசு வெளியிட்டுள்ள மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி கீழ்க்கண்ட நான்கு வகைப்பாடுகளில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1. குடிசைப்பகுதிகள் அமைந்துள்ள இடத்திலேயே மறுமேம்பாட்டு திட்டம் (மத்திய அரசு மானியம் - ரூ.1.00 இலட்சம்) 2. வீடு கட்ட / வாங்க பெறப்படும் கடனில் வட்டி சலுகை திட்டம் (3மூஇ4மூ ரூ 6.5மூ வட்டி சலுகை) 3. மக்களின் சக்திகேற்ப வீடு கட்டும் திட்டம் (மத்திய அரசு மானியம்- ரூ.1.50 இலட்சம், மாநில அரசு மானியம் ரூ.5.00 இலட்சம் வரை) 4. பயனாளிகள் தாங்களாகவே வீடு கட்டும் திட்டம் (மத்திய அரசு மானியம் - ரூ1.50 இலட்சம், மாநில அரசு மானியம் - ரூ.0.60 இலட்சம்).
அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம்
அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்த தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தை மாநில ஒருங்கிணைப்பாளராக அரசு நியமித்து உள்ளது. வழிகாட்டுதல் நெறி முறைகளில் குறிப்பிட்டுள்ளபடி தமிழ்நாட்டில் வீட்டு வசதி தேவைகள் கணக்கெடுக்கும் பணி மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் முடிவுற்றுள்ளது. கணக்கெடுப்பின்படியும் இணையதளத்தின் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களின்படியும் 9,73,434 குடும்பங்களுக்கு வீடுகள் தேவை என கண்டறியப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழுமத்திடமிருந்து அதிக அளவில் திட்டங்களுக்கு ஓப்புதல் பெறுவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இதுவரை ரூ.8660.06 கோடி மதிப்பீட்டில் 2,46,268 வீடுகள் கட்ட ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை செம்மையாக செயல்படுத்தும் வகையில் சம்மந்தப்பட்ட துறைகளின் மாவட்டங்கள் அளவிலான அதிகாரிகள் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் மண்டல அளவில் கலந்தாய்வு செய்ய தீர்மானிக்கப்பட்டது. அதன்படி மதுரை, திருச்சிராப்பள்ளி மண்டலங்களில் ஏற்கணவே கலந்தாய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் கலந்தாய்வுக்கூட்டங்கள் நடத்தப்படும்.
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய கோயம்புத்தூர் சரகத்தின் மூலம் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இம்மாவட்டங்களில் அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக வீடுகள் தேவையென கண்டறியப்பட்டு இதுவரை ரூ.2766.58கோடி மதிப்பீட்டில் 77,517 வீடுகள் கட்ட திட்டபிரேரணைகளுக்கு ஒப்புதல் பெறப்பட்ட பணிகள் நடைபெறுகின்றன. இத்திட்டத்திற்கு தேவையான நிதியொதுக்கீட்டை தமிழ்நாடு அரசு செய்துள்ளது. இத்திட்டத்தினை பொதுமக்களும் அதிகளவில் பண்படுத்தி பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என வீட்டுவசதி மற்றும் நகர்புறவளர்ச்சித் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏ.கே.செல்வராஜ், ஏ.பி.நாகராஜன், சி.மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன்கே.அர்ச்சுணன், ஆறுகுட்டி, எட்டிமடை சண்முகம், ஆர்.கணகராஜ், கஸ்தூரிவாசு, குணசேகரன், முருகன், சந்திரசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன், குடிசை மாற்று வாரியம் கண்கானிப்பு பொறியாளர் சுப்பிரமணியன், செயற்பொறியாளர் ராஜசேகரன், மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் சக்திவேல், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி? 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
05 Jul 2025சென்னை, பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
மொஹரம் பண்டிகை: வரும் 7-ம் தேதி அரசு விடுமுறை என பரவும் தகவலுக்கு மறுப்பு
05 Jul 2025சென்னை, மொஹரம் பண்டிகை ஜூலை 6-ம் தேதிதான் என்றும், இந்தப் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழக அரசின் உண்மை ச
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-07-2025.
05 Jul 2025 -
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
05 Jul 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
இந்தித் திணிப்புக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாடு மீண்டும் கற்பிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
05 Jul 2025சென்னை, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்துவரும் துரோகத்துக்கு பா.ஜ.க. பரிகாரம் தேட வேண்டும்.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
புத்தமத தலைவர் தலாய் லாமா 40 ஆண்டுகள் வாழ விருப்பம்
05 Jul 2025தர்மசாலா : சீனாவின் புத்தமத தலைவர் தலாய் லாமா இன்னும் 40 ஆணடுகளுக்கு மேல் வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
கன்னடம் குறித்து கருத்து தெரிவிக்க கமலுக்கு தடை
05 Jul 2025பெங்களூரு, கன்னட மொழி குறித்து கருத்து தெரிவிக்க நடிகர் கமலுக்கு பெங்களூரு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
-
தொடர் மழை, வெள்ளம்: அமெரிக்காவில் 13 பேர் பலி
05 Jul 2025நியூயார்க் : அமெரிக்காவில் தொடர் மழை வெள்ளத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.