எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை வானொலியின் சான்றோர் சிந்தனை நிகழ்ச்சியில் திருவில்லிபுத்தூர் ஆன்மீக சொற்பொழிவாளர் டாக்டர் கே.பி.முத்துசாமி ஆற்றிய உரையை இங்கே காண்போம்.
ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகளுக்கும் 10 ஆண்டுகள் வீதம் மனிதனுடைய பூரண ஆயுள் காலம் 120 ஆண்டுகள் என்று கணித்துள்ளார்கள். 60 வயதில் உக்ரரத சாந்தியும் 70 வயதில் பீமரத சாந்தியும் 80 வயதில் விஜயரத சாந்தியும் செய்து அந்தந்த வயதில் ஏற்படும் கண்டங்களில் இருந்து தப்பித்து வாழலாம் என்று கூறியிருக்கிறார்கள்.
ஆனால், இவ்வாறு பரிகாரம் செய்தால் மட்டுமே மனதில் மகிழ்ச்சியும் சாந்தியும் முழுமையான அளவில் கிடைக்குமா? அறுபது வயது கடந்தவர்களெல்லாம் தனக்கு முதுமை வந்து விட்டதாகக் கருதி மனதளவில் தளர்ச்சி அடைவதால் உடலும் தளர்ச்சி அடைகிறது. நமக்கு வயதாகி விட்டது. நாம் ஓய்வு பெற்றுவிட்டோம் என்ற எண்ணமே பலரை முடக்கிப் போட்டு விடுகிறது. அறுபதைக் கடந்தாலும் பொதுப்பணி, இலக்கியப் பணிகளில் ஈடுபட்டு இயங்கிக் கொண்டே இருந்தாலும் முதுமையும் பொலிவு பெறும். கவலைகள், மனச் சோர்வு, எதிர்மறைச் சிந்தனைகள், தீய எண்ணங்கள் இல்லாவிடில் முதுமை விலகி ஓடிவிடும். ஒழுக்கம், கட்டுப்பாடு, உடற்பயிற்சி, உணவுமுறை, தன்னுடன் உள்ளோரிடம் அன்பு பாசம் வளர்த்துக் கொண்டால் முதுமைக்கு விடை கொடுத்து விடலாம்.
பெரிய புராணத்தில் திருநீல கண்டருக்கும், அவர் மனைவிக்கும் வடிவுறு மூப்பு வந்தது என்று சேக்கிழார் பெருமான் கூறுகிறார். மூப்பு என்றால் முதுமை. அழகு இளமையில் இருக்கும் முதுமையில் இராது என்றுதான் நாம் எண்ணிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் சேக்கிழாரோ மூப்பில் அழகு என்றார். வாழைக்காயை விட வாழைப்பழம் அழகானது. மாங்காயை விட மாம்பழம் அழகானது. காந்தியடிகள் சிறுவயதில் உள்ள புகைப்படத்தை விட முதுமையில் பொக்கை வாயராக உள்ள படமே அழகாக உள்ளது. சில கிழங்கள் அழகாயில்லை என்றால் நன்றாகப் பழுக்கவில்லை. வெம்பல் என்று பொருள் என்று வாரியார் சுவாமிகள் கூறுவார். வழுக்கை என்றால் வயதாகிவிட்டது என்பது அர்த்தமில்லை. இளமைக்குத்தான் வழுக்கை என்று பெயர். இளமையான தேங்காயைத்தானே வழுக்கை என்று கூறுகிறோம்.
முதுமை என்பது ஒரு பருவ மாற்றம் தான்
பாலையாம் தன்மை போய்
பாலனாம் தன்மை போய்
காளையாம் தன்மை போய்
காமுறு இளமை போய்
மேலும் இவ்வியல்பினாலே
மேல் வரும் மூப்புமாகி என்று குண்டலகேசி கூறுகிறது.
அதனால் இளமைக்காலத்திலேயே அடுத்து வரும் முதுமைக் காலத்திற்காக திட்டமிட்டு, திட்டமிட்டபடி உழைத்தால் அது நமது முதுமையின் சோர்வை விரட்டி விடும். கழுகு தன் அலகாலும், நகத்தாலும் மாமிசத்தைக் கிழித்து உண்பதால் அதன் அலகும், நகமும் பலவீனமடைந்து விடும். கழுகு தன் 40 வயதில் ஏதாவது மலை உச்சிக்குச் சென்று அமர்ந்து தனது அலகால் கால் நகங்களை வெட்டி எடுக்கும். பின்பு தன் அலகை கல்லில் மோதி உடைக்கும். 5 மாதம் மலை உச்சியில் இருந்து அதன் நகம், அலகு இவை மீண்டும் வளர்ந்தவுடன் புதிய பொலிவோடு, வலிவோடு இரைதேடி அடுத்து 30 ஆண்டுகள் வாழும். ஒரு பறவையே தன் வாழ்க்கையை இரண்டாகப் பிரித்து திட்டமிட்டு வாழும் போது, ஆறறிவு படைத்த மனிதன் தன் இளமைக்காலத்தில் அதைவிட சிறப்பாகத் திட்டமிட்டு வாழ வேண்டாமா? அப்படித் திட்டமிட்டு வாழ்க்கை நடத்தினால் முதுமை என்னும் சோர்வு நோயைத் துரத்தி அடிக்கலாம் தானே.
ராக்பெல்லர் தனது முதுமைக்காலத்தில் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது அருகில் உள்ள வாலிபன் நீங்கள் வேண்டிய அளவு சம்பாதித்து விட்டீர்கள். இந்த முதுமையில் ஓய்வு எடுக்காமல் இன்னும் ஏன் பறந்து பறந்து சம்பாதிக்கிறீர்கள் என்று கேட்டான். அப்போது ராக்பெல்லர் இந்த விமானம் மேலே பறக்க ஆரம்பித்து விட்டதே, இதன் இஞ்சினை நிறுத்திவிடலாமா என்றார். முடியாது என்றான் வாலிபன். அதுபோல் நாம் உழைப்பதை வாழ்க்கையின் எந்த உயரத்துக்கு போனாலும் எந்த வயதிலும் நிறுத்தமுடியாது. நிறுத்தவும் கூடாது என்றார்.
உதடு பிரிந்தால் ஓசை
இமை பிரிந்தால் பார்வை
கரு பிரிந்தால் உயிர்
பணியிலிருந்து பிரிந்தால் ஓய்வு ஓய்வு என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல.
அது ஒரு அலுவலக பயணத்தின் பணி நிறைவு மட்டுமே. அதற்குப்பின் வாழ்க்கையின் அடுத்த பக்கத்தின் ஆரம்பம். கிரிக்கெட் விளையாட்டில் இரண்டாவது இன்னிங்ஸ் ஆடுவதைப் போல. இங்கிலாந்தில் 65 ஆண்டுகளாக மகாராணியாக உள்ள இரண்டாம் எலிசபெத் தன்னுடைய 91-வது பிறந்த நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்கள்.
அங்கே வயதின் முதுமை தெரியவில்லை. மனதின் இளமைதான் தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-09-2025.
17 Sep 2025 -
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: மீண்டும் ஒரு உரிமைப் போரை நடத்தி நாட்டை பாதுகாப்போம் கரூர் தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
17 Sep 2025கரூர்: தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று தெரிவித்துள்ள தி.மு.க.
-
மயிலாடுதுறை ஆணவக்கொலை: பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
17 Sep 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆணவக் கொலை வழக்கில் பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது: துணை பிரதமர்
17 Sep 2025தோஹா: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது என்றும் இருதரப்பு விவகாரங்களில் 3-ம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும்
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ரஜினி அதிரடி பதில்
17 Sep 2025சென்னை: திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி பதில் அளித்துள்ளார்.
-
2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்
17 Sep 2025அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி அரசு முடிவு
17 Sep 2025டெல்லி: எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு
17 Sep 2025சென்னை: விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
அறிவுச்சூரியன் தந்தை பெரியார்: துணை முதல்வர் உதயநிதி புகழாரம்
17 Sep 2025சென்னை: உலகம் முழுவதற்குமான கொள்கைகளை வகுத்தளித்த அறிவுச்சூரியன் தந்தை பெரியார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.