எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை வானொலியின் சான்றோர் சிந்தனை நிகழ்ச்சியில் திருவில்லிபுத்தூர் ஆன்மீக சொற்பொழிவாளர் டாக்டர் கே.பி.முத்துசாமி ஆற்றிய உரையை இங்கே காண்போம்.
ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகளுக்கும் 10 ஆண்டுகள் வீதம் மனிதனுடைய பூரண ஆயுள் காலம் 120 ஆண்டுகள் என்று கணித்துள்ளார்கள். 60 வயதில் உக்ரரத சாந்தியும் 70 வயதில் பீமரத சாந்தியும் 80 வயதில் விஜயரத சாந்தியும் செய்து அந்தந்த வயதில் ஏற்படும் கண்டங்களில் இருந்து தப்பித்து வாழலாம் என்று கூறியிருக்கிறார்கள்.
ஆனால், இவ்வாறு பரிகாரம் செய்தால் மட்டுமே மனதில் மகிழ்ச்சியும் சாந்தியும் முழுமையான அளவில் கிடைக்குமா? அறுபது வயது கடந்தவர்களெல்லாம் தனக்கு முதுமை வந்து விட்டதாகக் கருதி மனதளவில் தளர்ச்சி அடைவதால் உடலும் தளர்ச்சி அடைகிறது. நமக்கு வயதாகி விட்டது. நாம் ஓய்வு பெற்றுவிட்டோம் என்ற எண்ணமே பலரை முடக்கிப் போட்டு விடுகிறது. அறுபதைக் கடந்தாலும் பொதுப்பணி, இலக்கியப் பணிகளில் ஈடுபட்டு இயங்கிக் கொண்டே இருந்தாலும் முதுமையும் பொலிவு பெறும். கவலைகள், மனச் சோர்வு, எதிர்மறைச் சிந்தனைகள், தீய எண்ணங்கள் இல்லாவிடில் முதுமை விலகி ஓடிவிடும். ஒழுக்கம், கட்டுப்பாடு, உடற்பயிற்சி, உணவுமுறை, தன்னுடன் உள்ளோரிடம் அன்பு பாசம் வளர்த்துக் கொண்டால் முதுமைக்கு விடை கொடுத்து விடலாம்.
பெரிய புராணத்தில் திருநீல கண்டருக்கும், அவர் மனைவிக்கும் வடிவுறு மூப்பு வந்தது என்று சேக்கிழார் பெருமான் கூறுகிறார். மூப்பு என்றால் முதுமை. அழகு இளமையில் இருக்கும் முதுமையில் இராது என்றுதான் நாம் எண்ணிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் சேக்கிழாரோ மூப்பில் அழகு என்றார். வாழைக்காயை விட வாழைப்பழம் அழகானது. மாங்காயை விட மாம்பழம் அழகானது. காந்தியடிகள் சிறுவயதில் உள்ள புகைப்படத்தை விட முதுமையில் பொக்கை வாயராக உள்ள படமே அழகாக உள்ளது. சில கிழங்கள் அழகாயில்லை என்றால் நன்றாகப் பழுக்கவில்லை. வெம்பல் என்று பொருள் என்று வாரியார் சுவாமிகள் கூறுவார். வழுக்கை என்றால் வயதாகிவிட்டது என்பது அர்த்தமில்லை. இளமைக்குத்தான் வழுக்கை என்று பெயர். இளமையான தேங்காயைத்தானே வழுக்கை என்று கூறுகிறோம்.
முதுமை என்பது ஒரு பருவ மாற்றம் தான்
பாலையாம் தன்மை போய்
பாலனாம் தன்மை போய்
காளையாம் தன்மை போய்
காமுறு இளமை போய்
மேலும் இவ்வியல்பினாலே
மேல் வரும் மூப்புமாகி என்று குண்டலகேசி கூறுகிறது.
அதனால் இளமைக்காலத்திலேயே அடுத்து வரும் முதுமைக் காலத்திற்காக திட்டமிட்டு, திட்டமிட்டபடி உழைத்தால் அது நமது முதுமையின் சோர்வை விரட்டி விடும். கழுகு தன் அலகாலும், நகத்தாலும் மாமிசத்தைக் கிழித்து உண்பதால் அதன் அலகும், நகமும் பலவீனமடைந்து விடும். கழுகு தன் 40 வயதில் ஏதாவது மலை உச்சிக்குச் சென்று அமர்ந்து தனது அலகால் கால் நகங்களை வெட்டி எடுக்கும். பின்பு தன் அலகை கல்லில் மோதி உடைக்கும். 5 மாதம் மலை உச்சியில் இருந்து அதன் நகம், அலகு இவை மீண்டும் வளர்ந்தவுடன் புதிய பொலிவோடு, வலிவோடு இரைதேடி அடுத்து 30 ஆண்டுகள் வாழும். ஒரு பறவையே தன் வாழ்க்கையை இரண்டாகப் பிரித்து திட்டமிட்டு வாழும் போது, ஆறறிவு படைத்த மனிதன் தன் இளமைக்காலத்தில் அதைவிட சிறப்பாகத் திட்டமிட்டு வாழ வேண்டாமா? அப்படித் திட்டமிட்டு வாழ்க்கை நடத்தினால் முதுமை என்னும் சோர்வு நோயைத் துரத்தி அடிக்கலாம் தானே.
ராக்பெல்லர் தனது முதுமைக்காலத்தில் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது அருகில் உள்ள வாலிபன் நீங்கள் வேண்டிய அளவு சம்பாதித்து விட்டீர்கள். இந்த முதுமையில் ஓய்வு எடுக்காமல் இன்னும் ஏன் பறந்து பறந்து சம்பாதிக்கிறீர்கள் என்று கேட்டான். அப்போது ராக்பெல்லர் இந்த விமானம் மேலே பறக்க ஆரம்பித்து விட்டதே, இதன் இஞ்சினை நிறுத்திவிடலாமா என்றார். முடியாது என்றான் வாலிபன். அதுபோல் நாம் உழைப்பதை வாழ்க்கையின் எந்த உயரத்துக்கு போனாலும் எந்த வயதிலும் நிறுத்தமுடியாது. நிறுத்தவும் கூடாது என்றார்.
உதடு பிரிந்தால் ஓசை
இமை பிரிந்தால் பார்வை
கரு பிரிந்தால் உயிர்
பணியிலிருந்து பிரிந்தால் ஓய்வு ஓய்வு என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல.
அது ஒரு அலுவலக பயணத்தின் பணி நிறைவு மட்டுமே. அதற்குப்பின் வாழ்க்கையின் அடுத்த பக்கத்தின் ஆரம்பம். கிரிக்கெட் விளையாட்டில் இரண்டாவது இன்னிங்ஸ் ஆடுவதைப் போல. இங்கிலாந்தில் 65 ஆண்டுகளாக மகாராணியாக உள்ள இரண்டாம் எலிசபெத் தன்னுடைய 91-வது பிறந்த நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்கள்.
அங்கே வயதின் முதுமை தெரியவில்லை. மனதின் இளமைதான் தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
போப் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
09 May 2025புதுடில்லி, புனித போப் பதினான்காம் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-05-2025
09 May 2025 -
பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்
09 May 2025ஸ்ரீநகர், பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார்.
-
இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய மாட்டோம் : துணை அதிபர் ஜெ.டி.வான்ஸ் தகவல்
09 May 2025வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் போருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய மாட்டோம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜெ. டி. வான்ஸ் தெரிவித்திருக்கிறார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று பேரணி
09 May 2025சென்னை, பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இன்று (மே.10) சென்னையில் தனது தலைமையில்
-
பாகிஸ்தானுக்கு 3 நாடுகள் ஆதரவு: பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்
09 May 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானுக்கு சீனா, துருக்கி, அஜர்பைஜான் தெளிவான ஆதரவை வழங்க முன்வந்துள்ளன என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
-
விமானநிலையங்கள் பாதுகாப்பு: அமித்ஷா தலைமையில் ஆய்வுக்கூட்டம்
09 May 2025புதுடெல்லி, இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிவரும் ராணுவ மோதல்களுக்கு மத்தியில், நாட்டிலுள்ள விமானநிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் பாதுகாப்பு நிலைமை குறித்து உள்துறை
-
24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
09 May 2025சென்னை, தமிழகத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி, பஞ்சப்பூரில் ரூ. 408.36 கோடியில் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
09 May 2025திருச்சி, திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் 40 ஏக்கரில் ரூ.408.36 கோடியில் அதிநவீன வசதிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்
-
திருச்சியில் ரூ.276.95 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
09 May 2025திருச்சி, திருச்சியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில், 50 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்திடுங்கள்: கட்சியினருக்கு இ.பி.எஸ். வேண்டுகோள்
09 May 2025சென்னை, எதிர்வரும் எனது பிறந்த நாளை முன்னிட்டு, கட்சியினர் என்னை நேரில் வந்து சந்திப்பதையும், எந்தவிதமான கொண்டாட்டங்களையும் தவிர்த்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
-
போர்ப் பதற்றம் எதிரொலி: பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுரை
09 May 2025புதுடில்லி, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் மக்கள், ஆன்லைன் மற்றும் சமூக வலைதளங்களில் என்ன செய்யலாம்?
-
எதிரிகளால் பேரிழப்பு: உலக வங்கியிடம் கூடுதல் கடன் கோரிய பாகிஸ்தான்
09 May 2025பாகிஸ்தான் : உலக வங்கயிடம் இருந்து பாகிஸ்தான் அரசு கூடுதல் கடன் கோரியுள்ளது.
-
ஜூன் 15ம் தேதி முதல் புதிய மினி பேருந்து திட்டம்
09 May 2025சென்னை : புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஜூன் 15ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.
-
மேலும் அதிகரிக்கும் போர் பதற்றம்: பாதுகாப்பு வளையத்துக்குள் டெல்லி - தீவிர கண்காணிப்பு
09 May 2025புதுடெல்லி, மேலும் அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக தலைநகர் டெல்லி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
-
இந்தியா-பாக் போர்ப்பதற்றம் எதிரொலி: ஐ.பி.எல். போட்டிகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தம் : பி.சி.சி.ஐ. அதிகாரபூர்வ அறிவிப்பு
09 May 2025மும்பை : இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வருவதை அடுத்து ஐ.பி.எல்.
-
மதுரை மீனாட்சியம்மன் கோவில் திருத்தேரோட்டம் கோலாகலம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு
09 May 2025மதுரை : மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழாவின் திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து 11ஆம் நாள் நிகழ்வாகத் திருத்தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஹர ஹர சிவா என்ற பக்த
-
வீரர்களை அழைத்துவர சிறப்பு ரயில்
09 May 2025இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தர்மசாலா திடலில் பஞ்சாப் கிங்ஸ் - டில்லி கேபிடல்ஸ் இடையிலான போட்டி வியாழக்கிழமை இரவு பாதியி
-
புதிய போப் குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
09 May 2025வாடிகன் : கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் 26-ம் தேதி ரோம் நகரில் அடக்கம் செய்யப்பட்டது.
-
ஜம்மு - காஷ்மீரில் கல்வி பயிலும் தமிழக மாணவர்களை மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை
09 May 2025சென்னை, ஜம்மு காஷ்மீரில் தற்போதைய நிலைமை சீரானவுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயின்று வரும் 52 தமிழக மாணவர்களை மீண்டும் தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கான உரிய நடவடிக்கை
-
தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
09 May 2025புதுடெல்லி, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த உத்தரவிட கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 8-ம் தேதி கடைசி நாள்
09 May 2025சென்னை : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு நேற்றுமுன்தினம் (மே 9) தொடங்கிய
-
இனிமேல் நம்முடைய பாதை சிங்கப்பாதையாக இருக்கும் திருச்சி அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
09 May 2025திருச்சி, இனிமேல் நாம் செல்லும் பாதை சிங்கப்பாதையாக இருக்கும். மேலும், நாட்டிலேயே தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது என்று திருச்சி அரசு விழாவில் முதல்வர் மு.க.
-
மத்திய அரசின் கனவு தமிழகத்தில் என்றைக்கும் பலிக்காது: த.வெ.க.
09 May 2025சென்னை : தேசியக் கல்விக் கொள்கையைத் திணிக்கும் மத்திய அரசின் கனவு, தமிழகத்தில் என்றைக்கும் பலிக்காது என்று தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.
-
விமான நிலையத்துக்கு இணையாக திருச்சியில் பேருந்து முனையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
09 May 2025திருச்சி, திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக நேற்று திறந்து வைத்துப் பேசிய முதல்வர் ஸ்டலின், விமான நிலையத்துக்கு