எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நகராட்சி பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், என்.சி.சி, என்.எஸ்.எஸ் மாணவ, மாணவியர்கள், ரோட்டரி கிளப், லையன்ஸ் கிளப், ரெட்கிராஸ், தன்னார்வ அமைப்புகள் மூலம் 1000-க்கும் மேற்ப்பட்டவர்களை பல்வேறு குழுக்களாக ஒருங்கிணைத்து திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் காய்ச்சல் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் மாபெரும் விழிப்புணர்வு தூய்மைப்பணி நேற்று (29.10.2017) துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கு நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் , திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர்கள் ஆய்வு
இந்நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா ஆகியோர் கலந்துக்கொண்டு திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் மாபெரும் விழிப்புணர்வு தூய்மைப்பணியினை துவக்கி வைத்து, டெங்கு காய்ச்சல் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி, கடந்த ஒருமாத காலத்திற்கு மேலாக டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பணிகளின் ஒரு பகுதியாக நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி துவக்கி வைக்கப்பட்டு நாமக்கல் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும் தற்போது நாமக்கல் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் மாபெரும் விழிப்புணர்வு தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்காக நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி பணியாளர்கள், என்.சி.சி, என்.எஸ்.எஸ் மாணவ, மாணவியர்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியோரைக் கொண்டு தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழக அரசின் தொடர் நடவடிக்கைகளால் நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. மேலும் இதுகுறித்து விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக நகராட்சி பகுதிகள் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் மாபெரும் விழிப்புணர்வு தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இராசிபுரம், நாமக்கல் ஆகிய நகராட்சிகளை தொடர்ந்து இன்றைய தினம் திருச்செங்கோடு நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் மாபெரும் விழிப்புணர்வு தூய்மைப்பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 1200-க்கும் மேற்ப்பட்ட நபர்கள் ஈடுபடுத்தப்பட்டு, திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மாபெரும் விழிப்புணர்வு தூய்மைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மக்கள் இதுகுறித்த விழிப்புணர்வை முழுமையாக பெறவேண்டும். மேலும் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டினையும், சுற்றுபுறங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இம்மாபெரும் தூய்மைப்பணியில் 25 நபர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு திருச்செங்கோடு நகராட்சி முழுவதுமுள்ள அனைத்து வார்டுகளிலும் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள், கட்டிடங்கள், சாக்கடைகள், கால்வாய்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணிகளை மேற்கொள்ளப்படுகின்றது. நீர் தேங்கும் வகையில் உள்ள தேவையற்ற பொருட்களை சேகரிப்பதற்கு லாரிகளும், சாக்கடைகள் மற்றும் நீர் போகும் பகுதிகளில் ஏதேனும் அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டால் அவற்றை சரி செய்வதற்கு பொக்லைன் இயந்திரங்களை கொண்டு சுத்தம் செய்யப்படுகின்றது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களும், தூய்மைப்பணியில் ஈடுபடும் நகராட்சி பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டு நகராட்சி முழுவதும் மாபெரும் விழிப்புணர்வு தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இராமசாமி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் டாக்டர் கோ.ரமேஷ்குமார், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் பாஸ்கரன், திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர்(பொ) கே.சுகுமார், திருச்செங்கோடு வருவாய் வட்டாட்சியர் பூவராகவன், திருச்செங்கோடு நகராட்சி, மருத்துவத்துறை, பொதுசுகாதாரத்துறை கொசு ஒழிப்பு பணியாளர்கள், என்.சி.சி, என்.எஸ்.எஸ் மாணவ, மாணவியர்கள், தன்னார்வ அமைப்புகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை
28 Dec 2025பல்லடம், பல்லடத்தில் இன்று தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது. இதில் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். தி.மு.க.
-
தர்மத்துக்கு சிரமம் ஏற்பட்டாலும் இறுதியில் அறம்தான் வெல்லும்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து
28 Dec 2025மதுரை, தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் ஏற்படும் போரில், தர்மத்துக்கு சிரமம் ஏற்படத்தான் செய்யும், இறுதியில் அறம்தான் வெல்லும் என்ற செய்தியை சொல்வதுதான் கம்பராமாயணம் தேர
-
விஜயகாந்த் 2-ம் ஆண்டு நினைவு தினம்: பிரேமலதா தலைமையில் தே.மு.தி.க.வினர் பேரணி
28 Dec 2025சென்னை, தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க.வினர் பேரணி நடத்தினர்.
-
கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்துக்கு சி.சுப்பிரமணியத்தின் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
28 Dec 2025சென்னை, கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம் பெயர் சூட்டப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின
-
பெங்களூரு வீடுகள் இடிப்பு விவகாரம்: முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் அறிவுரை
28 Dec 2025பெங்களூரு, பெங்களூருவின் பயெலஹங்கா அருகே உள்ள கோகிலு பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.
-
கேப்டன் விஜயகாந்த் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன்: எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி
28 Dec 2025சென்னை, கலைத்துறையிலும், பொதுவாழ்விலும் கேப்டன் விஜயகாந்த் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன் என்று அவரது நினைவு நாளில் அ.தி.மு.க.
-
ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கிறது இஸ்ரோ
28 Dec 2025ஸ்ரீஹரிகோட்டா, ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.
-
5 ஆண்டுகளுக்கு பிறகு மியான்மரில் பொதுத்தேர்தல்
28 Dec 2025மியான்மர், மியான்மரில் உள்நாட்டுப் போர் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் 5 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் பொதுத்தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தொடங்கி நடைபெற
-
மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்திற்கு புகழஞ்சலி: த.வெ.க. தலைவர் விஜய் பதிவு
28 Dec 2025சென்னை, மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்திற்கு என் புகழஞ்சலி என்று த.வெ.க. தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.
-
தயவுசெய்து மீண்டும் நடியுங்கள்: விஜய்க்கு நடிகர் நாசர் கோரிக்கை
28 Dec 2025சென்னை, நடிகர் விஜய் மீண்டும் நடிக்க வேண்டும் எனவும், அப்படி நடித்தால் யாரும் அவரை குறை சொல்ல மாட்டார்கள் என்றும் நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.
-
சம வேலைக்கு சம ஊதியம் கோரி மூன்றாவது நாளாக போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் கைது
28 Dec 2025சென்னை, 3-வது நாளாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் நேற்று கைது செய்யப்ப
-
அன்புமணி பின்னால் சென்றவர்கள் மீண்டும் ராமதாஸ் பக்கம் வருவார்கள்: ஜி.கே.மணி பேட்டி
28 Dec 2025சேலம், சேலத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ.
-
விஜய்யின் அரசியல் பயணம்: இலங்கை முன்னாள் அதிபரின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்து
28 Dec 2025கொழும்பு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் பயணம் வெற்றிக்கரமாக அமைய இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்து தெரிவித்
-
சேலத்தில் ராமதாஸ் தரப்பில் இன்று பொதுக்குழுக் கூட்டம்
28 Dec 2025சென்னை, சேலத்தில் இன்று ராமதாஸ் தரப்பில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
-
மகாத்மா காந்தியின் பெயரை வரலாற்றிலிருந்து நீக்க முடியுமா? கர்நாடகா துணை முதல்வர் கேள்வி
28 Dec 2025பெங்களூரு, மகாத்மா காந்தியின் பெயரை வரலாற்றிலிருந்து நீக்க முடியுமா? கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
கோவையில் சர்வதேச ஹாக்கி மைதானம்: துணை முதல்வர் உதயநிதி நாளை திறந்து வைக்கிறார்
28 Dec 2025கோவை, கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.9.67 கோடியில் கட்டப்பட்ட ஹாக்கி மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை (30-ம் தேதி) திறந்து வைக்கிறார்.
-
கர்நாடகா: மலையேற்றத்தின்போது தவறி விழுந்த பிரான்ஸ் சுற்றுலா பயணி மீட்பு
28 Dec 2025பெங்களூரு, கர்நாடகாவில் மலையேற்றத்தின்போது தவறி விழுந்த பிரான்ஸ் சுற்றுலா பயணி உயிருடன் மீட்கப்பட்டார்.
-
துணை துணை ஜனாதிபதி இன்று புதுச்சேரி வருகை: மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு
28 Dec 2025புதுச்சேரி, புதுச்சேரியில் இன்று முக்கிய நிகழ்வுகளில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். இதற்காக மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
சென்னையில் கைலாசநாதர் - படவேட்டம்மன் கோவில் திருப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு
28 Dec 2025சென்னை, சென்னையில் கைலாசநாதர் - படவேட்டம்மன் கோவில்களில் நடைபெற்று வரும் திருப்பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார்.
-
த.வெ.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்
28 Dec 2025சென்னை, த.வெ.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.வை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
-
2-ம் ஆண்டு குருபூஜை: விஜயகாந்த் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மரியாதை
28 Dec 2025சென்னை, மறைந்த தே.மு.தி.க.
-
நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்தார் ஜனாதிபதி முர்மு
28 Dec 2025பெங்களூரு, கல்வாரி வகையை சேர்ந்த நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ்.
-
அரசியலில் துணிவோடு செயல்பட்டவர்: விஜயகாந்திற்கு கனிமொழி புகழஞ்சலி
28 Dec 2025சென்னை, அரசியலில் துணிவோடு செயல்பட்டவர் என்று விஜயகாந்திற்கு கனிமொழி எம்.பி. புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
இலங்கை கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 3 பேர் கைது
28 Dec 2025ராமநாதபுரம், எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
-
ரயில் 2 வினாடிகளில் 700 கி.மீ. வேகம் சீன ஆராய்சியாளர்கள் புதிய உலக சாதனை..!
28 Dec 2025பெய்ஜிங், சீன ஆராய்சியாளர்கள் 2 நொடியில் மணிக்கு 700 கிலோ மீட்டர் வேகம் எட்டக்கூடிய சோதனை வாகனத்தை இயக்கி உலக சாதனை படைத்துள்ளனர்.



