எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் அருகே யோகிராம்சூரத்குமார் நினைவு இல்லம் அமைந்துள்ள சாலையில் ஆதரவற்ற நிலையில் சுமார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கடந்த சில நாட்களாக படுத்துக் கிடந்தார். அவரை உலக மக்கள் சேவை மைய நிர்வாகி மணிமாறன் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
மூதாட்டி
இதுகுறித்து அவர் கூறும்போது பசியால் மூதாட்டியால் சரியாக பேசமுடியவில்லை. அவரிடம் விசாரித்ததில் அவரது பெயர் உண்ணாமலை என்றும் போளூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கிரிவலப் பாதையில் கொண்டு வந்து அவரது குடும்பத்தினர் விட்டுச் சென்றுள்ளனர். தண்ணீர் மற்றும் உணவு இல்லாததால் அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. அந்த வழியாக சென்றபோது அவரது நிலையை கண்டு அதிர்ச்சிக்குள்ளானேன். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளேன். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறிதது தொலைபேசி மூலம் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தேன்.
அவரும் அரசு மருத்துவ கல்லூரி முதல்வரை தொடர்பு கொண்டு உரிய சிகிச்சை அளிக்குமாறு உடனடியாக கேட்டுக்கொண்டார். மூதாட்டியின் விவரம் தெரியவில்லை. போளூர் என்று கூறுவதால் அந்த பகுதியில் அவரது புகைப்படததை கொண்டு காவல்துறை மற்றும் தொண்டு உள்ளம் கொண்டவர்கள் உதவியுடன் அடையாளம் காணவேண்டும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


