முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர முயற்சி - மத்திய அமைச்சர் பிரதான் தகவல்

திங்கட்கிழமை, 22 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

உஜ்ஜைன் : பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜி.எஸ்.டி கவுன்சில் இதற்கு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்றும் நம்புகிறோம். - அமைச்சர் தர்மேந்திர பிரதான்

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதுதான் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை இப்போது உயர்ந்துள்ளதற்குக் காரணம். பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜி.எஸ்.டி கவுன்சில் இதற்கு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்றும் நம்புகிறோம். அதே நேரத்தில் மாநில அரசுகளும் பெட்ரோலியப் பொருள்களுக்கு விதிக்கும் வரியைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து