முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலத்தில் மாசான அமாவாசை முன்னிட்டு மயான கொள்ளை வைபவம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018      சேலம்

 

சேலத்தில் மாசான அம்மாவாசை எனப்படும் மயான கொள்ளையில் பக்தர்கள் காளி வேடம் அணிந்த பக்தர்கள் ஆக்ரோஷமாக ஆடு, கோழிகளை வாயில் கடித்து வந்தது பக்தர்களிடையே பரவசம் ஏறபடுத்தியது.நோய் நீங்கவும், குழந்தை பாக்கியம், பிணி நீங்க வேண்டி சுடுகாட்டில் படுத்து பக்தர்கள் நேர்த்திகடன்.

மயான கொள்ளை

கடும்கோபம் அடைந்த அம்மன் உலகில் உள்ள உயிர்களை பலி கொண்டு ஆக்ரோஷத்தில் இருந்தார். அப்போது அங்காளபரமேஸ்வரியின் கோபத்தை சாந்தப்படுத்த சிவன் ருத்ர நடனமாடி அம்மனை சங்கலியால் கட்டிப்போட்டார். அம்மனின் அடங்காத கோபத்தை கட்டுப்படுத்திய சிவன் ஆண்டுதோறும் மஹாசிவராத்திரி விழாவிற்கு அடுத்து வரும் அம்மாவசை தினத்தில் அம்மனின் கட்டு அவிழ்க்கப்பட்டு உயிர் பலி வாங்க அனுமதி அளித்தார். இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக அம்மாவசை தினத்தில் மயானகொள்ளை விழா நாடுமுழுவதும் வெகு விமர்சியாகவும், கோலாகலமாகவும், நடத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் இந்த மயான கொள்ளை நிகழ்ச்சி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வந்தாலும் சேலத்தில் பல நூறு ஆண்டுகாலமாக மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த மயான கொள்ளை நிகழச்சி மிகவும் சிறப்புவாய்ந்தது ஆகும். இந்த மயான கொள்ளைக்காக பக்தர்கள் பதினைந்து தினங்களுக்கு முன்னரே விரதம் இருந்து மஹாசிவராத்தி தினந்தில் அங்காளம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

காளி வேடம்

இதனை தொடர்ந்து மஹா சிவராத்திரியின் மறுநாள் மயான கொள்ளை நிகழ்ச்சிக்கு அம்மனுக்கு பல்வேறு விதமான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்துவரும் போது விரதம் இருக்கும் பக்தர்கள் அங்காளம்மன், பெரியண்ணன், முனியப்பன், கருப்பண்ணன் உள்ளிட்ட காவல் தெய்வங்களை சிறப்பிக்கும் வகையில் அவர்களை போல பக்தர்கள் காளி வேடமணிந்து வண்ணங்களை முகத்தில் பூசி மயில் தோகையை கட்டி, நடனமாடியபடி, சுடுகாடு நோக்கி சென்று நேர்த்திகடன் செலுத்துவர். அப்போது பக்தர்கள் உயிருடன் உள்ள கோழி ஆடுகளை வாயில் கடித்துக்கொண்டு ஓடிவருவார்கள் ரத்தம் சிந்த சிந்த வரும்போது சுடுகாட்டின் வளாகத்தில் காத்திருக்கும் பகதர்கள் அம்மன் வரும்போது வழிகள் தோறும் படுத்து கொள்ளவார்கள். இந்த நிலையில் பக்தர்களை அம்மன் தாண்டி சென்றால் நோய், பிணி, என சகலமும் நீங்கும் எனபது ஐதீகம். சேலத்தில் நேற்று காக்கையன் சுடுகாட்டில் நடந்த மயானகொள்ளை நிகழ்ச்சியி்ல் காளி வேடமனிந்தவர்கள் சுடுகாட்டில் சூறை ஆடி விரத்தை முடித்தனர் இந்த நிகழ்ச்சியை காண சேலம் மற்றும் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து மயான கொள்ளை நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர்.

இது குறித்து பக்தர்கள கூறும்போது பல ஆண்டுகாலமாக இந்த மயான கொள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளதாகவும், அம்மன் வரும்போது படுத்துக்கொண்டால் தீராத நோய் நீங்கும், என்றும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம், திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும் தெரிவித்தனர். மேலும் கூறும்போது இந்த மயான கொள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் குடும்பம் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து