எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடலூர் மஞ்சக்குப்பம் செயின் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 86 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் வே.ப.தண்டபாணி, முன்னிலையில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்ததாவது.
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா நல்லாசியோடு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 43,200 நபர்களுக்கு 1,03,000 வேலைவாய்ப்பினை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2017-2018 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 4,312 படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்றனர். இதில் 72 முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்குபெற்று பல்வேறு பணியிடங்களுக்கு 798 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 2017-2018 ஆம் ஆண்டில் ப்ல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதில் கூடுதலாக 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் திறன் மேம்பாடு குறித்த பயிற்சி அளிப்பதற்கு தம்pழக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 92 நிறுவனங்கள் பங்கு பெற்றுள்ளனர். இந்நிறுவனங்கள் மூலம் 9 ஆயிரம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி தருவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தை சார்ந்த ஐந்தாம் வகுப்பு முதல் பொறியியல் பட்டப்படிப்பு வரையிலான கல்வித்தகுதி உடைய வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெற்றுள்ளனர். சென்னையில் உள்ள பிரபல தனியார் முன்னணி நிறுவவனங்களான அசோக் லேலாண்ட், யமஹா மோட்டர்ஸ், பிரேக்ஸ் இந்தியா லிமிட்டெட், சாம்சங், விப்ரோ, அப்பல்லோ. யுரேகா ஃபோர்ப்ஸ், ஆம்வே இந்தியா போன்ற நிறுவனங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஐடிஐ, டிப்ளமா மற்றும் பி.இ படித்த இளைஞர்கள் தேர்வு செய்துள்ளார்கள்.கடலூர் சிப்காட்டில் உள்ள நிறுவனங்களும், இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று, பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்துள்ளார்கள். டைலரிங் முடித்தவர்கள், கெமிக்கல் இன்ஜினியரிங் (டிப்ளமாஃபி.இ) மற்றும் வேதியியல் பாடப் பிரிவில் பி.எஸ்ஸி மற்றும் எம்.எஸ்ஸி முடித்துள்ளோருக்கு முகாமில் பணி கிடைத்துள்ளன.மேலும், கடலூரில் உள்ள டிவிசி எலக்ட்ரானிக்ஸ், ஏபிடி மாருதி, விஸ்டி மோட்டார்ஸ், ஜே.கே.ஆர் டெக்ஸ்டைல்ஸ் போன்ற நிறுவனங்கள் விற்பனையாளர், கணக்கர், மற்றும் கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு முதல் பட்டதாரி கல்வித் தகுதிகளை உடைய மனுதாரர்கள், இம்முகாமில் தேர்வு செய்துள்ளனர்.கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள இளங்கலை, முதுகலை ஆசிரியர் மற்றும் குழந்தை காப்பாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் இம்முகாமில் தேர்வு செய்துள்ளார்கள். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் நடத்தப்படும் பல்வேறு இலவச பயிற்சிகளுக்கான பதிவும் இம்முகாமில் நடைபெறுகிறது.கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2இ78இ346 வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்துள்ளார்கள். 2017-ம் ஆண்டில் 32இ316 மனுதாரர்கள் தங்கள் பதிவினை புதுப்பித்துள்ளார்கள். மேலும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட சிறப்பு புதுப்பித்தல் சலுகையின் கீழ், 1153 மனுதாரர்கள் தங்களது பதிவினை புதுப்பித்துள்ளனர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு பணிகளை பெறுவதற்கு ஏதுவாக, பல்வேறு போட்டித் தேர்வுகளுக்காக இலவச பயிற்சி வகுப்புகள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக நடத்தப்படுகின்றன. கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் 2017-18-ம் நிதியாண்டில், இத்திட்டத்தின்கீழ் 2077 வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் 849 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,89,19,800ஃ- உதவித் தொகையாகப் பெற்று வழங்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால், இம்மாவட்டத்தை சார்ந்த இளைஞர்களின் வேலைபெறும் திறனை அதிகரிக்கும் விதமாக பல்வேறு திறன் பயிற்சிகள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் பயிற்சி பெறும் மனுதாரர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.100ஃ- போக்குவரத்து படியாக பெற்று வழங்கப்படுகிறது என தெரிவித்தார். மேலும் இன்றைய தினம் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ஆண்கள் 1490 நபர்களும், பெண்கள் 1361 நபர்களும் ஆக மொத்தம் 2,831 நபர்கள் பங்குபெற்று இவர்களில் ஆண்கள் 427 நபர்களுக்கும், பெண்கள் 304 நபர்களுக்கும் ஆக மொத்தம் 731 நபர்களுக்கு இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு வருகைபுரிந்த அனைவரையும் உதவி இயக்குநர் (வேலைவாய்பு) எம்.கருணாகரன் வரவேற்று பேசினார்.இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சரவணன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் ம.தனலட்சுமி, கே.லாவண்யா, துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.ஜவஹர்லால், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் லட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஜி.பீட்டர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மு.முரளிதரன் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 hour ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: சூப்பர் 4 சுற்றுக்கு பாக்., தகுதி
18 Sep 2025துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்று ஏ பிரிவில் இருந்து 2-வது அணியாக சூப்பர் 4 ச
-
பாகிஸ்தான் கேப்டன், மேனேஜரிடம் மன்னிப்பு கேட்டார் ஐ.சி.சி. நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட்
18 Sep 2025அபுதாபி: ஆசியக் கோப்பையின் சர்ச்சை நாயகனான ஜிம்பாப்வே முன்னாள் வீரரும் ஆசியக் கோப்பை ஐ.சி.சி.
-
ஆஸி. மகளிரணி மோசமான சாதனை
18 Sep 2025சண்டீகர்: ஆஸ்திரேலிய மகளிரணி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது மிக மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.
292 ரன்கள் குவிப்பு...
-
உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்க வாய்ப்பை இழந்து வெளியேறிய நீரஜ் சோப்ரா
18 Sep 2025டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்து நீரஜ் சோப்ரா வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
காலிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி
18 Sep 2025மே.தீவுகள் அணி அறிவிப்பு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-09-2025.
19 Sep 2025 -
பாதுகாப்பை மீறி த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்: போலீஸ் விசாரணையில் புதிய தகவல்
19 Sep 2025சென்னை, பாதுகாப்பை மீறி நடிகர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
-
தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
19 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை
19 Sep 2025காபூல், ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
-
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் எதிரிகளுக்கு நமது வலிமையை காட்டினோம்: ராஜ்நாத்சிங் பேச்சு
19 Sep 2025டெல்லி, ஆபரேஷன் சிந்தூரின்போது நமது பதிலடியின் வலிமையை எதிரிகளுக்கு காட்டினோம் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
-
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் புதின் விரும்பவில்லை; இங்கி., உளவுத்துறை தலைவர்
19 Sep 2025இஸ்தான்புல், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர புதின் விரும்பவில்லை என்று இங்கிலாந்து உளவுத்துறை தலைவர் ரிச்சர்ட் மோரி தெரிவித்துள்ளார்.
-
குஜராத் விமான விபத்து: முழு தரவுகளை வெளியிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக வழக்கு
19 Sep 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமான விபத்தின் முழு தரவுகளை வெளியிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
தொழிலாளர்கள் சாக்கடையை சுத்தப்படுத்திய விவகாரம்: டெல்லி பொதுப்பணித்துறைக்கு சுப்ரீம் கோர்ட் ரூ.5 லட்சம் அபராதம்
19 Sep 2025புதுடெல்லி, சாக்கடையை சுத்தப்படுத்த பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இன்றி தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தியதற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
19 Sep 2025சென்னை : போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.
-
புதிய குடியேற்ற விதியின்படி இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட முதல் இந்தியர்
19 Sep 2025லண்டன், இங்கிலாந்தில் புதிய குடியேற்ற விதிகளை கொண்ட ‘ஒன்-இன், ஒன்-அவுட்’ என்ற ஒப்பந்தம் ஆகஸ்டு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையல், தற்போது முதல்முறையாக இங்கிலான்தில்
-
ரோபோ சங்கருக்கு நடிகர் விஜய் புகழஞ்சலி
19 Sep 2025சென்னை : தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ரோபோ சங்கர் என்று தவெக தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தி
-
வாக்குத்திருட்டு நடப்பது எப்படி? - ராகுல் காந்தி பதிவால் பரபரப்பு
19 Sep 2025டெல்லி : வாக்குத் திருட்டு எப்படி நடக்கிறது என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்: குற்றவாளியை பிடிக்க சென்ற 3 போலீசார் சுட்டுக்கொலை..!
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் குற்றவாளியை பிடிக்க சென்ற 3 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
இன்று பம்பையில் நடைபெறும் அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
19 Sep 2025திருவனந்தபுரம், பம்பையில் இன்று நடைபெறவுள்ள அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் சேகர் பாபு, பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார்கள்.
-
பாக்.கில் 2 வெடிகுண்டு தாக்குதல் - 11 பேர் பலி
19 Sep 2025லாகூர் : பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது ஏன்..? அதிபர் ட்ரம்ப் விளக்கம்
19 Sep 2025லண்டன், இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது ஏன் என்று அதிபர் ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.
-
மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி, கமல்ஹாசன் நேரில் அஞ்சலி
19 Sep 2025மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
உடல் நலக்குறைவால் காலமான நடிகர் ரோபோ சங்கர் உடல் தகனம்
19 Sep 2025சென்னை, நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 46.
-
7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
19 Sep 2025மாஸ்கோ, 7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது : அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
19 Sep 2025தஞ்சாவூா் : வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.