எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூர் மஞ்சக்குப்பம் செயின் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 86 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் வே.ப.தண்டபாணி, முன்னிலையில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்ததாவது.
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா நல்லாசியோடு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 43,200 நபர்களுக்கு 1,03,000 வேலைவாய்ப்பினை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2017-2018 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 4,312 படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்றனர். இதில் 72 முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்குபெற்று பல்வேறு பணியிடங்களுக்கு 798 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 2017-2018 ஆம் ஆண்டில் ப்ல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதில் கூடுதலாக 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் திறன் மேம்பாடு குறித்த பயிற்சி அளிப்பதற்கு தம்pழக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 92 நிறுவனங்கள் பங்கு பெற்றுள்ளனர். இந்நிறுவனங்கள் மூலம் 9 ஆயிரம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி தருவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தை சார்ந்த ஐந்தாம் வகுப்பு முதல் பொறியியல் பட்டப்படிப்பு வரையிலான கல்வித்தகுதி உடைய வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெற்றுள்ளனர். சென்னையில் உள்ள பிரபல தனியார் முன்னணி நிறுவவனங்களான அசோக் லேலாண்ட், யமஹா மோட்டர்ஸ், பிரேக்ஸ் இந்தியா லிமிட்டெட், சாம்சங், விப்ரோ, அப்பல்லோ. யுரேகா ஃபோர்ப்ஸ், ஆம்வே இந்தியா போன்ற நிறுவனங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஐடிஐ, டிப்ளமா மற்றும் பி.இ படித்த இளைஞர்கள் தேர்வு செய்துள்ளார்கள்.கடலூர் சிப்காட்டில் உள்ள நிறுவனங்களும், இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று, பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்துள்ளார்கள். டைலரிங் முடித்தவர்கள், கெமிக்கல் இன்ஜினியரிங் (டிப்ளமாஃபி.இ) மற்றும் வேதியியல் பாடப் பிரிவில் பி.எஸ்ஸி மற்றும் எம்.எஸ்ஸி முடித்துள்ளோருக்கு முகாமில் பணி கிடைத்துள்ளன.மேலும், கடலூரில் உள்ள டிவிசி எலக்ட்ரானிக்ஸ், ஏபிடி மாருதி, விஸ்டி மோட்டார்ஸ், ஜே.கே.ஆர் டெக்ஸ்டைல்ஸ் போன்ற நிறுவனங்கள் விற்பனையாளர், கணக்கர், மற்றும் கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு முதல் பட்டதாரி கல்வித் தகுதிகளை உடைய மனுதாரர்கள், இம்முகாமில் தேர்வு செய்துள்ளனர்.கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள இளங்கலை, முதுகலை ஆசிரியர் மற்றும் குழந்தை காப்பாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் இம்முகாமில் தேர்வு செய்துள்ளார்கள். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் நடத்தப்படும் பல்வேறு இலவச பயிற்சிகளுக்கான பதிவும் இம்முகாமில் நடைபெறுகிறது.கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2இ78இ346 வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்துள்ளார்கள். 2017-ம் ஆண்டில் 32இ316 மனுதாரர்கள் தங்கள் பதிவினை புதுப்பித்துள்ளார்கள். மேலும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட சிறப்பு புதுப்பித்தல் சலுகையின் கீழ், 1153 மனுதாரர்கள் தங்களது பதிவினை புதுப்பித்துள்ளனர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு பணிகளை பெறுவதற்கு ஏதுவாக, பல்வேறு போட்டித் தேர்வுகளுக்காக இலவச பயிற்சி வகுப்புகள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக நடத்தப்படுகின்றன. கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் 2017-18-ம் நிதியாண்டில், இத்திட்டத்தின்கீழ் 2077 வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் 849 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,89,19,800ஃ- உதவித் தொகையாகப் பெற்று வழங்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால், இம்மாவட்டத்தை சார்ந்த இளைஞர்களின் வேலைபெறும் திறனை அதிகரிக்கும் விதமாக பல்வேறு திறன் பயிற்சிகள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் பயிற்சி பெறும் மனுதாரர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.100ஃ- போக்குவரத்து படியாக பெற்று வழங்கப்படுகிறது என தெரிவித்தார். மேலும் இன்றைய தினம் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ஆண்கள் 1490 நபர்களும், பெண்கள் 1361 நபர்களும் ஆக மொத்தம் 2,831 நபர்கள் பங்குபெற்று இவர்களில் ஆண்கள் 427 நபர்களுக்கும், பெண்கள் 304 நபர்களுக்கும் ஆக மொத்தம் 731 நபர்களுக்கு இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு வருகைபுரிந்த அனைவரையும் உதவி இயக்குநர் (வேலைவாய்பு) எம்.கருணாகரன் வரவேற்று பேசினார்.இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சரவணன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் ம.தனலட்சுமி, கே.லாவண்யா, துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.ஜவஹர்லால், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் லட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஜி.பீட்டர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மு.முரளிதரன் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ஈரோட்டில் இன்று த.வெ.க. பிரச்சாரம் நடைபெறும் இடத்தில் எஸ்.பி. ஆய்வு
17 Dec 2025ஈரோடு, விஜய் பிரச்சார கூட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் கூடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று நேரில் ஆய்வு நடத்
-
100 நாள் வேலை திட்ட விவகாரம்: இ.பி.எஸ்.க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
17 Dec 2025சென்னை, 100 நாள் வேலை திட்ட விவகாரத்தில் இ.பி.எஸ்.க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
கனிமொழி எம்.பி தலைமையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு
17 Dec 2025சென்னை, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தலைமையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.
-
ஆஷஸ் 3-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா 326 ரன்கள் குவிப்பு
17 Dec 2025அடிலெய்டு, இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 3-வது டெஸ்ட் போட்டியில் உஸ்மான் குவாஜா, அலெக்ஸ் கேரியின பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 326 ரன்கள் குவித்துள்ளது.
-
சுமார் ரூ.10.91 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை மெஸ்ஸிக்கு பரிசளித்தார் ஆனந்த் அம்பானி
17 Dec 2025புதுடெல்லி, சுமார் ரூ.10.91 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்தார்.
14 ஆண்டுக்கு பிறகு...
-
சென்னை நங்கநல்லூரில் 2-வது ஹஜ் இல்லம் கட்டப்படுகிறதா? தமிழ்நாடு அரசு விளக்கம்
17 Dec 2025சென்னை, சென்னை சூளையில் ஹஜ் இல்லம் 2-வது இல்லம் எதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
இனி அன்புமணி ராமதாஸ் அல்ல.... அன்புமணி மட்டுமே: ராமதாஸ்
17 Dec 2025விழுப்புரம், இனி அன்புமணி ராமதாஸ் அல்ல அன்புமணி மட்டுமே என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
டி-20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் புதிய சாதனை: அதிக புள்ளிகள் பெற்ற முதல் இந்திய வீரர் வருண் சக்ரவர்த்தி
17 Dec 2025துபாய், ஆடவருக்கான தரவரிசை பட்டியலை சிறிய மாற்றத்துடன் ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.
-
45 ஆயிரம் வாக்காளர் நீக்கம்: மம்தா தொகுதியில் வீடு வீடாக ஆய்வு செய்ய தி.காங்., திட்டம்
17 Dec 2025கொல்கத்தா, 45 ஆயிரம் வாக்காளர் நீக்கம்ப்பட்டதை அடுத்து மம்தா பானர்ஜி தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
-
10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகான தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை தீவிரம்
17 Dec 2025சென்னை, 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.
-
தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் டிச. 23-ல் தமிழகம் வருகை: நயினார்
17 Dec 2025சென்னை, தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வரும் 23-ம் தேதி தமிழகம் வருகிறார் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
பிரதமருக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது: இந்தியாவின் அந்தஸ்து உயர்கிறது: அமைச்சர் அமித்ஷா பெருமிதம்
17 Dec 2025புதுடெல்லி, பிரதமருக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கியதுக்கு இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்துள்ளது என்று அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-12-2025.
18 Dec 2025 -
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது: வெள்ளி விலை புதிய உச்சம்
18 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று மீண்டும் அதிகரித்து விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.12,440-க்கும், சவரன் ரூ.99,520-க்கும் விற்பனையானது.
-
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
18 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வில் கடந்த 5 நாட்கள் நடந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்புக்காக த
-
தமிழகத்தில் டிச. 22-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
18 Dec 2025தமிழகத்தில் டிச. 22-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
-
காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாள் 125 நாட்கள் என்பது ஏமாற்று வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
18 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாள் 125 நாட்கள் என்பது ஏமாற்று வேலையே என தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசை குளிர்விக்க ஏழைகள்
-
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே விபி-ஜி ராம்ஜி மசோதா பார்லி., மக்களவையில் நிறைவேற்றம்
18 Dec 2025புதுடெல்லி, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றான விபி-ஜி ராம்ஜி மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 
-
நேரு கடிதங்களை திருப்பி அளிக்க வேண்டும்: சோனியா காந்திக்கு மத்திய அரசு கடிதம்
18 Dec 2025புதுடெல்லி, கடந்த 2008-ம் ஆண்டு பெற்ற முன்னாள் பிரதமர் நேருவின் கடிதங்களை சோனியா காந்தி திருப்பி அளிக்க வேண்டும் என மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள
-
காந்தியின் பெயர் நீக்கத்திற்கு எதிர்ப்பு: பார்லி. வளாகத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
18 Dec 2025புதுடெல்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை திட்டத்தில் இருந்து நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள
-
அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
18 Dec 2025நியூயார்க், அமெரிக்காவின் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக தலா ரூ. 1.60 லட்சம் வழங்கப்படும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
ஈரோட்டில் பிரச்சாரத்தின் போது கம்பத்தில் ஏறிய ரசிகரை கண்டித்த விஜய்
18 Dec 2025ஈரோடு, த.வெ.க. தலைவர் விஜய் பேசிக் கொண்டிருந்தபோது கம்பத்தில் ஏறிய தொண்டரை, பேச்சை நிறுத்திவிட்டு அவர் கண்டித்தார்.
-
ஈக்வடார் நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் 9 ஆயிரத்திற்கும் அதிகமான கொலை சம்பவங்கள்..!
18 Dec 2025பார்சிலோனா, ஈக்வடாரில் இந்தாண்டு மட்டும் 9,000க்கும் அதிகமான கொலைகள் நடைபெற்றுள்ளதாக அந்நாட்டின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 26 இந்தியர்கள் பலி: மத்திய அரசு
18 Dec 2025புதுடெல்லி, உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட ரஷ்ய ராணுவத்தில், 202 இந்தியர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
பயமில்லை பயமில்லை என்று சொல்லும் எதிரிகள் த.வெ.க.வை கண்டு கதறுகிறார்கள்: ஈரோடு பிரச்சாரத்தில் விஜய் பரபரப்பு பேச்சு
18 Dec 2025ஈரோடு, பயமில்லை பயமில்லை என்று சொல்லும் எதிரிகள் த.வெ.க.வை கண்டு கதறுகிறார்கள் என ஈரோடு பிரச்சாரத்தில் விஜய் பேசினார். மேலும், களத்தில் இருக்கும் எதிரிகளை மட்டுமே


