முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழும் இசையும் வேறல்ல இரண்டும் ஒன்றுதான் கலெக்டர் த.அன்பழகன் பேச்சு

வியாழக்கிழமை, 29 மார்ச் 2018      கரூர்
Image Unavailable

 

கரூர்நாரதகானசபாவில் மண்டலக் கலைபண்பாட்டுமையம்,மாவட்டஅரசு இசைப்பள்ளி, மாவட்ட சவகர் சிறுவர் மன்றம் சார்பாக நடைபெற்ற தமிழிசை விழா மற்றும் ஆண்டு விழாவில் மாவட்ட அட்சித்தலைவர் த.அன்பழகன்,, கலந்துகொண்டு அரச இசைப்பள்ளியில் சிறப்பாக பயின்ற மாணவ,மாணவியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி இசை கலைஞங்கர்களை கௌரவித்தார்.

கலெக்டர் பேச்சு

இவ்விழாவில் மாவட்டகலெக்டர்பேசும்போது கரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி 1998ஆம் ஆண்டு துவக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது .இதில் பயிலும் மாணவர்களுக்குஆண்டுக்குரூ.4000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.தமிழகத்தில் 4 இசைகல்லூரிகளும்,17 அரசு இசைபள்ளிகளும் செயல் பட்டுவருகிறது.தமிழும் இசையும் வேறல்ல இரண்டும் ஒன்றுதான் அதற்கு தாலாட்டு சிறந்த உதாரணம்.

வாழ்வே ஓரு இசைபயணம் தான் இன்றைய வாட்சாப் காலத்தில் நல்ல இசைகளை கேட்டு மன அழுத்தத்தை போக்கி கொள்ளவேண்டும். கரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளிக்கு இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இவ்விழாவில மண்டலக் கலைபண்பாட்டுமைய இணை இயக்குநர் இரா.குணசேகரன், வருவாய் கோட்டாச்சியர் சரவணமூர்த்தி, வட்டாச்சியர் அருள், அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் நா.ரேவதி, நாரதகானசபா நிர்வாகிகள் சூர்யநாராயணன், வித்யாசாகர், ராமநாதன்உட்படபலர்கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து