எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்தில் தமிழ்நாடு சமரச தீர்வு மையத்தின் 13வது ஆண்டு விழாவையொட்டி மாவட்ட சமரச மையத்தின் சார்பில் மாற்றுமுறைத் தீர்வு மையம் நாகப்பட்டினம் மாவட்ட நீதிபதி ஆர்.பத்மனாபன் தலைமையில் முனைவர்.சீ.சுரேஷ்குமார்,, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய்,ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
சமரச தீர்வு மையம்
இந்நிகழ்வின் போது மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது,தமிழ்நாடு சமரச தீர்வு மையத்தின் 13வது ஆண்டு நிறைவு விழா நாகப்பட்டினம் மாவட்ட சமரச மையத்தின் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. தமிழ்நாடு சமரச மையம் சென்னை உயர்நீதிமன்றத்தால் ஏற்படுத்தப்பட்டு செயல்படுகிறது. வழக்குத் தரப்பினர்கள், தம் எதிர்ப்பினருடன் பேசி சமரசம் செய்து கொள்ள ஏதுவாய் நீதிமன்றம் இங்கு வழக்குகளை அனுப்புகிறது.
இங்கு நன்கு பயிற்சியளிக்கப்பட்ட சமரசர்கள் வழக்குத் தரப்பினர்கள் சுமூகமாக வழக்கை முடித்துக் கொள்ள உதவுவர். நீதிமன்றம் வழங்கும் இந்த சேவைக்கு வழக்குத் தரப்பினர்கள் எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. தனிப்பட்ட முறையில் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்த தனியறைகள், காத்திருக்க இடவசதி முதலியவை சமரச மைத்தில் உள்ளன. நீதிமன்றத்தில் அனைத்து வேலைநாட்களிலும், நாள் முழுவதும் இந்த சமரச மையம் இயங்கும். மாவட்ட சமரச தீர்வு மையத்தின் மூலம் முறையான பயிற்சி அளிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் இரு தரப்பினர்களையும் அழைத்துப் பேசி வழக்கு பிரச்சனைக்கு சமரசமான முறையில் தீர்வு எட்டப்படும்.
சகோதர சகோதரிகளுக்கிடையேயான சொத்து பாகப்பிரிவினை வழக்குகள். கணவன் மனைவி மற்றும் குழந்தைகளுக்கிடையேயான ஜீவனாம்ச வழக்குகள். விவாகரத்து வழக்குகள். இதர குடும்பம் சார்ந்த பிரச்சனை சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை சம்பந்தப்பட்ட வழக்குகள். இதர உரிமையியல் வழக்குகள் அனைத்திலும் வழக்காடிகள் தங்களது பிரச்சனைகளை மேற்படி மாவட்ட சமரச தீர்வு மையத்தில் ஆநனயைவழச எனப்படும் நடுவர் முன்பாக ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி தங்களுக்குள்ளாகவே தங்களது பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள முடியும." என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நாகப்பட்டினம் சார் கலெக்டர் திரு,கே.பி.கார்த்திகேயன்,, மாவட்ட வருவாய் அலுவலர் வ.முருகேசன், நாகப்பட்டினம் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ஜி.ராஜா, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளர் கே.ரவி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
- ரூ.1536.31 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட மதுரையில் ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம்: தி.மு.க. இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்: மதுரை தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ஆப்கானிஸ்தான் எல்லையில் பாக்., நடத்திய தாக்குதலில் உயிரிழப்பு 80 ஆக உயர்வு
23 Feb 2026இஸ்லாமாபாத், ஆப்கனிஸ்தானுக்கு உட்பட்ட எல்லைப் பகுதிகள் மீது பாகிஸ்தான் விமானப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80-க்கும் மேலாக அதிகரி
-
தங்கம் விலை உயர்வு
23 Feb 2026தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,18,880-க்கு விற்பனையானது.
-
நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பலி
23 Feb 2026காத்மாண்டு, நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகினர்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
23 Feb 2026- திருச்செந்தூர் முருகன் தங்க முத்துகிடா வாகனம், அம்பாள் வெள்ளி அன்னவாகனம்.
- மதுரை கூடலழகர் கஜேந்திர மோட்சம், இரவு சேசவாகனம்.
- காரமடை ரெங்கநாதர் விழா தெடக்கம்,
-
இன்றைய நாள் எப்படி?
23 Feb 2026


