முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெஜ்ரிவால் மீது அதிருப்தி பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ராஜினாமா

புதன்கிழமை, 16 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

சண்டிகர் : பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. பல்தேவ் சிங், கட்சியில் இருந்து விலகியதுடன், கெஜ்ரிவால் மீது சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஜெய்டோ சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. மாஸ்டர் பல்தேவ் சிங். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த இவர், கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்தார். இந்நிலையில் எம்.எல்.ஏ. பல்தேவ் சிங், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி உள்ளார். இது தொடர்பாக கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிaவாலுக்கு அவர் கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில், கட்சி தலைமை தனது அடிப்படை சித்தாந்தம் மற்றும் கொள்கைகளை முற்றிலும் விட்டுக் கொடுத்து விட்டதால் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். மேலும், பஞ்சாப் நதி நீர் பிரச்சனையில் கெஜ்ரிவால் இரட்டை நிலைப்பாடு கொண்டிருப்பதாகவும், அவர் தலித் மக்களுக்கு விரோதமானவர் என்றும் அவர் குற்றம்சாட்டி உள்ளார். மேலும், கெஜ்ரிவாலின் சர்வாதிகார நடவடிக்கைகளால் தேசிய மற்றும் மாநில அளவிலான தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறியதாகவும் பல்தேவ் சிங் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து