எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேனி - தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தேர்தல் பணி குறித்த வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் தலைமை தாங்கினார். கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் ஆகியோர் தேர்தல் பணி குறித்து ஆலோசனை வழங்கினர். கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது கடந்த முறை நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டத்தின் போது இடைத்தேர்தலுக்கான அடிப்படை பூர்வாக பணிகளை செய்வதற்காக பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை பொறுப்பாளர்களாகவும், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு கம்பம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை பொறுப்பாளர்களாகவும் நியமித்து அவர்களை பல குழுக்களாக பிரித்து அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஒவ்வொரு பூத் பகுதியிலும் மகளிர் 5 பேர், இளைஞர்கள் 10 பேர், மூத்த கழக உறுப்பினர்கள் 10 பேர் என பூத் கமிட்டி அமைக்கவும், பூத் கமிட்டியினர் அப்பகுதியிலேயே வாக்காளர்களாக இருக்கிறார்களா என்பதை சரிபார்க்கவும், பூத் கமிட்டியினர் ஒரு குடும்பத்தை சேர்ந்தவராக இல்லாதவாறு பார்த்தல் உள்ளிட்ட பணிகளை பொறுப்பாளர்கள் சரிபார்த்து சிறப்பான பணியை நூற்றுக்கு நூறு முடித்துள்ள உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கிடையில் நமது கழகம் பல்வேறு சோதனைகளை கடந்து இன்று வெற்றிநடை போட்டுக் கொண்டிருப்பதற்கு காரணம் இயக்கத்தை தோற்றுவித்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களும், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களும் நமது இயக்கத்தை ஜாதி, மத, சிறுபான்மை, பெரும்பான்மை வித்தியாசமின்றி தொண்டர்கள் இயக்கமாக நடத்தியதின் காரணமாகத்தான் நமது கழகம் தோற்றுவிக்கப்பட்டு 47 ஆண்டுகள் கடந்த பின்பும் வலுவான இயக்கமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் கழகத்தை உருவாக்கினார்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நமது இயக்கத்தை மாபெரும் இயக்கமாக, இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக நமது இயக்கத்தை நமக்காக பெற்றுத் தந்து தியாகம் செய்து புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நமக்கு தந்துவிட்டு சென்றிருக்கிறார்கள். உணர்வுபூர்வமாக நமது இயக்கத்தில் இருக்கின்ற தொண்டர்கள் முதல் மூத்த முன்னோடிகள் வரை அனைவரும் வயது வித்தியாசமின்றி ஒரே மாதிரியான செயல்பாடுகள் கொண்டவர்களாகவும், கட்டுக்கோப்புடனும் உள்ள ஒரே இயக்கம் நமது கழகம் தான் என்று உலகத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து கொண்டிருக்கிறோம். டெல்லியில் இருக்கின்ற தேசிய கட்சிகளெல்லாம் நமது இயக்கத்தைப் பார்த்து பிரமிப்பு அடைகின்ற அளவிற்கு தொண்டர்கள் கடமையுணர்வோடு செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். அந்தளவிற்கு நமது இயக்கம் ஒருங்கிணைக்கப்பட்டு செயலாற்றிக் கொண்டிருக்கின்ற நிலைக்கு புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவி அம்மா அவர்களுமே காரணம் என்றும் அவர்கள் காட்டிய அன்பான, பாசமான வழியில் நாம் நமது பயணத்தை இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றோம். அதனால்தான் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நமது இயக்கம் எனக்கு பின்னாலும் 100 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்திருக்கும், வளரும் என்றும், நமது கழகம் தான் என்றும் தமிழகத்தில் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கும் என்றும் உணர்த்தியுள்ளார். 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அடிப்படை தேர்தல் பணிகளை நாம் தற்போது முடித்திருக்கின்றோம். இந்நிலையில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வரவுள்ளது. நம் கண்முன்னால் இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளையும், நமது மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய கடமையும் நமக்கு உள்ளது. நாம் ஆண்டிபட்டி, பெரியகுளம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான அடிப்படை பணிகளை நாம் நூற்றுக்கு நூறு முடித்துள்ளோம். தற்போது இக்கூட்டத்தின் நோக்கம் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நமது மாவட்டத்தில் உள்ள மீதமிருக்கின்ற போடிநாயக்கனூர், கம்பம் சட்டமன்ற தொகுதிகளிலும் அடிப்படை பணிகளை செய்ய வேண்டிய நிலையில், கடமையாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம். அதனடிப்படையில் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு பெரியகுளம் தொகுதி நிர்வாகிகள் பொறுப்பாளர்களாகவும், கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் பொறுப்பாளர்களாகவும் இருந்து வாக்குசாவடிக்கு குழுக்களாக சென்று தேர்தலுக்கான அடிப்படை பணிகளை சிறப்பாக கையாள வேண்டும். அப்பணிகளை ஒரு வார காலத்திற்குள் முடித்து குழுக்கள் வாரியாக எப்பகுதிக்கு சென்று தேர்தலுக்கான பணிகளை செய்தனர் என்பது உள்ளிட்ட முழு விபரங்களையும் நகர, ஒன்றிய அளவில் பின்னர் சட்டமன்ற அளவில் தொகுத்து வழங்கிடும் பணியை பத்து தினங்களுக்குள் முடித்திட வேண்டும். இந்த பணிகளெல்லாம் எங்கு, எப்பொழுது, எந்த தேர்தல் வந்தாலும் நம்முடைய பணி தலையாய பணியாக கொண்டு சிறப்பாக பணியாற்றி காரணத்தினால் தான் நமது தேனி மாவட்டம் நூற்றுக்கு நூறு சதவிகிதம் வெற்றி பெறுவோம் என்ற நிலையில் இருந்திருக்கின்றோம். அதே நிலையை நாம் தற்போதும் தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களை காட்டிலும், எப்படி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சதவிகித அடிப்படையில் தமிழகத்திலேயே முதலாவது அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி என்று பெயரெடுத்தோமோ அதே போல் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதி தேனி தொகுதி என்று பெயரெடுத்து தர வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் சிறப்புரையாற்றினர். மாவட்ட பொருளாளர் செல்லமுத்து நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் முருக்கோடை ராமர், மாவட்ட இணை செயலாளர் மஞ்சுளாமுருகன், மாவட்ட துணை செயலாளர் வசந்தாநாகராஜ், ஒன்றிய கழக செயலாளர்கள் தேனி ஆர்.டி.கணேசன், பெரியகுளம் அன்னபிரகாஷ், ஆண்டிபட்டி லோகிராஜன், போடி சற்குணம், கடமலை-மயிலை கொத்தாளமுத்து, கம்பம் இளையநம்பி, உத்தமபாளையம் பி.ஆர்.பி அழகுராஜ், சின்னமனூர் விமலேஸ்வரன், நகர செயலாளர்கள் பெரியகுளம் என்.வி.ராதா, கூடலூர் சோலைராஜ், தேனி கிருஷ்ணகுமார், போடி பழனிராஜ், சின்னமனூர் ராஜேந்திரன், கம்பம் ஆர்.ஆர்.ஜெகதீஸ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ப.ரவீந்திரநாத்குமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பாண்டியராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் பாலமணிமார்பன், மாவட்ட பாசறை செயலாளர் நாராயணன், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாலசந்திரன், மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஆனந்தகுமார் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை, வார்டு கழக செயலாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 4 days ago |
-
காவலாளி அஜித் குமார் மரணம்: நீதி விசாரணைக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
01 Jul 2025மதுரை : திருப்புவனம் காவலாளி அஜித் குமார் மரண வழக்கில், மதுரை மாவட்ட நீதிபதி ஜான் கந்தர்லால் சுரேஷ் தலைமையில், நீதி விசாரணைக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்
-
அரசின் மானியம் இல்லாவிட்டால்... எலான் மஸ்க்கை எச்சரித்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
01 Jul 2025வாஷிங்டன் : அரசின் மானியங்கள் இல்லாவிட்டால் டெஸ்லா சி.இ.ஓ., எலான் மஸ்க், அநேகமாக தென்னாப்பிரிக்கா திரும்பி விடுவார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
-
இளைஞர் மரண வழக்கில் கைதான 5 காவலர்கள் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு
01 Jul 2025சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
-
மாற்றுத்திறனாளிகளுக்கான நியமன கவுன்சிலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் : தமிழக அரசு அறிவிப்பு
01 Jul 2025சென்னை : தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன கவுன்சிலர் பதவிக்கு வரும் 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவி
-
வீடு, வீடாக சென்று பிரசாரம் ஏன்? அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
01 Jul 2025சென்னை, டிரெண்ட் மாறியதால் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரசாரம் மூலம் மக்களை வீடு, வீடாக சென்று சந்திக்க உள்ளோம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறி உள்ளார்.
-
நடுவானில் கட்டுப்பாட்டை இழந்த ஏர் இந்தியா விமானம்
01 Jul 2025புதுடில்லி : அகமதாபாத் விமான விபத்தில் 270 பேர் உயிரிழந்த அடுத்த ஓரிரு நாட்களில் டில்லியில் இருந்து வியன்னா சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டு இருந
-
படித்த வேலையில்லாத இளைஞர்களுக்காக வெற்றி நிச்சயம் திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார் : ரூ.12 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்க ஏற்பாடு
01 Jul 2025சென்னை : சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற "நான் முதல்வன்" திட்டத்தின் மூன்றாண்டு வெற்றி விழாவில் உலகத்தரம் வாய்ந்த முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மற்
-
சென்னை உயர்நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு விசாரணை : ஆதவ் அர்ஜூனா வலியுறுத்தல்
01 Jul 2025சென்னை : அஜித்குமார் 'கஸ்டடி' மரணம் தொடர்பான வழக்கை, உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, விரைந்து விசாரணை நடத்தி நீதியை நில
-
இந்தியா-அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ தகவல்
01 Jul 2025வாஷங்டன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளார் என்றும் இந்தியா - அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் குறித்த அறி
-
ராமநாதபுரம் வரை தேசிய நெடுஞ்சாலையை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
01 Jul 2025புதுடில்லி : மதுரையில் இருந்து பரமக்குடி வரையிலுள்ள தேசிய நெடுஞ்சாலை 87-ஐ ராமநாதபுரம் வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
தமிழகத்தில் பெரிய வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயர்வு : அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
01 Jul 2025சென்னை : பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 3.16 சதவீதத்திற்கு மிகாமல், மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர்&n
-
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 7 பேர் கைது
01 Jul 2025இராமேசுவரம் : தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
த.வெ.க. கொடி பயன்படுத்த தடை விதிக்க கோரி வழக்கு: ஜூலை 3-ம் தேதி தீர்ப்பு
01 Jul 2025சென்னை : த.வெ.க.
-
10-வது ஆண்டில் டிஜிட்டல் இந்தியா; அதிகாரமளித்தலின் புதிய சகாப்தம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
01 Jul 2025புதுடில்லி : டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆனதை நினைவு கூறும் வகையில், அதிகாரமளித்தலின் புதிய சகாப்தத்திற்கு வழிவகுத்த ஒரு பயணத்திற்கு நாம் சாட்சியாக நி
-
பிறந்தநாளை முன்னிட்டு வெங்கையா நாயுடு, அகிலேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
01 Jul 2025சென்னை : முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் இருவருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து த
-
2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்: இங்கி.க்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?
01 Jul 2025பர்மிங்காம் : 2-வது டெஸ்ட் இன்று தொடங்கவுள்ள நிலைியல் வெற்றியே பெறாத மைதானத்தில் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி? என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசி
-
தொலைபேசி அழைப்பு கசிவு: தாய்லாந்து பிரதமர் ஷினவத்ராவை இடைநீக்கம் செய்தது நீதிமன்றம்
01 Jul 2025பேங்காக், கம்போடிய செனட் தலைவர் ஹன் சென் உடனான தொலைபேசி உரையாடல் கசிந்த விவகாரம் தொடர்பாக தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்நாட்டு நீதிமன்றம் இடைநீக்கம் செய
-
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.58 குறைப்பு
01 Jul 2025புதுடில்லி : வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.58 குறைக்கப்பட்டுள்ளது.
-
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை: இ.பி.எஸ்.
01 Jul 2025சென்னை, “திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்ற வேண்டும் என அ.தி.மு.க.
-
இஸ்ரேல் பிரதமர் அமெரிக்க பயணம்
01 Jul 2025டெல்அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரும் ஜூலை 7 ஆம் தேதியன்று அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்லை நிர்ணய விவகாரங்களில் இந்தியாவுடன் பேச தயார்: சீனா
01 Jul 2025பெய்ஜிங் : இந்தியாவுடன் எல்லை பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.
-
தேசிய மருத்துவர்கள் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
01 Jul 2025சென்னை : மருத்துவர்கள் போற்றுதலுக்குரியவர்கள் என்று தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலில் 74 பொதுமக்கள் பலி
01 Jul 2025காசாமுனை : காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் 74 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.
-
இ.பி.எஸ். வீட்டிற்கு செல்வீர்களா? - முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்
01 Jul 2025சென்னை : இ.பி.எஸ். வீட்டிற்குச் செல்வீர்களா? என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலினிடம் அளித்த பதிலளித்துள்ளார்.