எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி - தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தேர்தல் பணி குறித்த வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் தலைமை தாங்கினார். கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் ஆகியோர் தேர்தல் பணி குறித்து ஆலோசனை வழங்கினர். கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது கடந்த முறை நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டத்தின் போது இடைத்தேர்தலுக்கான அடிப்படை பூர்வாக பணிகளை செய்வதற்காக பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை பொறுப்பாளர்களாகவும், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு கம்பம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை பொறுப்பாளர்களாகவும் நியமித்து அவர்களை பல குழுக்களாக பிரித்து அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஒவ்வொரு பூத் பகுதியிலும் மகளிர் 5 பேர், இளைஞர்கள் 10 பேர், மூத்த கழக உறுப்பினர்கள் 10 பேர் என பூத் கமிட்டி அமைக்கவும், பூத் கமிட்டியினர் அப்பகுதியிலேயே வாக்காளர்களாக இருக்கிறார்களா என்பதை சரிபார்க்கவும், பூத் கமிட்டியினர் ஒரு குடும்பத்தை சேர்ந்தவராக இல்லாதவாறு பார்த்தல் உள்ளிட்ட பணிகளை பொறுப்பாளர்கள் சரிபார்த்து சிறப்பான பணியை நூற்றுக்கு நூறு முடித்துள்ள உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கிடையில் நமது கழகம் பல்வேறு சோதனைகளை கடந்து இன்று வெற்றிநடை போட்டுக் கொண்டிருப்பதற்கு காரணம் இயக்கத்தை தோற்றுவித்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களும், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களும் நமது இயக்கத்தை ஜாதி, மத, சிறுபான்மை, பெரும்பான்மை வித்தியாசமின்றி தொண்டர்கள் இயக்கமாக நடத்தியதின் காரணமாகத்தான் நமது கழகம் தோற்றுவிக்கப்பட்டு 47 ஆண்டுகள் கடந்த பின்பும் வலுவான இயக்கமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் கழகத்தை உருவாக்கினார்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நமது இயக்கத்தை மாபெரும் இயக்கமாக, இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக நமது இயக்கத்தை நமக்காக பெற்றுத் தந்து தியாகம் செய்து புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நமக்கு தந்துவிட்டு சென்றிருக்கிறார்கள். உணர்வுபூர்வமாக நமது இயக்கத்தில் இருக்கின்ற தொண்டர்கள் முதல் மூத்த முன்னோடிகள் வரை அனைவரும் வயது வித்தியாசமின்றி ஒரே மாதிரியான செயல்பாடுகள் கொண்டவர்களாகவும், கட்டுக்கோப்புடனும் உள்ள ஒரே இயக்கம் நமது கழகம் தான் என்று உலகத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து கொண்டிருக்கிறோம். டெல்லியில் இருக்கின்ற தேசிய கட்சிகளெல்லாம் நமது இயக்கத்தைப் பார்த்து பிரமிப்பு அடைகின்ற அளவிற்கு தொண்டர்கள் கடமையுணர்வோடு செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். அந்தளவிற்கு நமது இயக்கம் ஒருங்கிணைக்கப்பட்டு செயலாற்றிக் கொண்டிருக்கின்ற நிலைக்கு புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவி அம்மா அவர்களுமே காரணம் என்றும் அவர்கள் காட்டிய அன்பான, பாசமான வழியில் நாம் நமது பயணத்தை இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றோம். அதனால்தான் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நமது இயக்கம் எனக்கு பின்னாலும் 100 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்திருக்கும், வளரும் என்றும், நமது கழகம் தான் என்றும் தமிழகத்தில் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கும் என்றும் உணர்த்தியுள்ளார். 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அடிப்படை தேர்தல் பணிகளை நாம் தற்போது முடித்திருக்கின்றோம். இந்நிலையில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வரவுள்ளது. நம் கண்முன்னால் இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளையும், நமது மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய கடமையும் நமக்கு உள்ளது. நாம் ஆண்டிபட்டி, பெரியகுளம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான அடிப்படை பணிகளை நாம் நூற்றுக்கு நூறு முடித்துள்ளோம். தற்போது இக்கூட்டத்தின் நோக்கம் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நமது மாவட்டத்தில் உள்ள மீதமிருக்கின்ற போடிநாயக்கனூர், கம்பம் சட்டமன்ற தொகுதிகளிலும் அடிப்படை பணிகளை செய்ய வேண்டிய நிலையில், கடமையாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம். அதனடிப்படையில் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு பெரியகுளம் தொகுதி நிர்வாகிகள் பொறுப்பாளர்களாகவும், கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் பொறுப்பாளர்களாகவும் இருந்து வாக்குசாவடிக்கு குழுக்களாக சென்று தேர்தலுக்கான அடிப்படை பணிகளை சிறப்பாக கையாள வேண்டும். அப்பணிகளை ஒரு வார காலத்திற்குள் முடித்து குழுக்கள் வாரியாக எப்பகுதிக்கு சென்று தேர்தலுக்கான பணிகளை செய்தனர் என்பது உள்ளிட்ட முழு விபரங்களையும் நகர, ஒன்றிய அளவில் பின்னர் சட்டமன்ற அளவில் தொகுத்து வழங்கிடும் பணியை பத்து தினங்களுக்குள் முடித்திட வேண்டும். இந்த பணிகளெல்லாம் எங்கு, எப்பொழுது, எந்த தேர்தல் வந்தாலும் நம்முடைய பணி தலையாய பணியாக கொண்டு சிறப்பாக பணியாற்றி காரணத்தினால் தான் நமது தேனி மாவட்டம் நூற்றுக்கு நூறு சதவிகிதம் வெற்றி பெறுவோம் என்ற நிலையில் இருந்திருக்கின்றோம். அதே நிலையை நாம் தற்போதும் தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களை காட்டிலும், எப்படி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சதவிகித அடிப்படையில் தமிழகத்திலேயே முதலாவது அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி என்று பெயரெடுத்தோமோ அதே போல் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதி தேனி தொகுதி என்று பெயரெடுத்து தர வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் சிறப்புரையாற்றினர். மாவட்ட பொருளாளர் செல்லமுத்து நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் முருக்கோடை ராமர், மாவட்ட இணை செயலாளர் மஞ்சுளாமுருகன், மாவட்ட துணை செயலாளர் வசந்தாநாகராஜ், ஒன்றிய கழக செயலாளர்கள் தேனி ஆர்.டி.கணேசன், பெரியகுளம் அன்னபிரகாஷ், ஆண்டிபட்டி லோகிராஜன், போடி சற்குணம், கடமலை-மயிலை கொத்தாளமுத்து, கம்பம் இளையநம்பி, உத்தமபாளையம் பி.ஆர்.பி அழகுராஜ், சின்னமனூர் விமலேஸ்வரன், நகர செயலாளர்கள் பெரியகுளம் என்.வி.ராதா, கூடலூர் சோலைராஜ், தேனி கிருஷ்ணகுமார், போடி பழனிராஜ், சின்னமனூர் ராஜேந்திரன், கம்பம் ஆர்.ஆர்.ஜெகதீஸ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ப.ரவீந்திரநாத்குமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பாண்டியராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் பாலமணிமார்பன், மாவட்ட பாசறை செயலாளர் நாராயணன், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாலசந்திரன், மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஆனந்தகுமார் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை, வார்டு கழக செயலாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...