எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி - தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தேர்தல் பணி குறித்த வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் தலைமை தாங்கினார். கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் ஆகியோர் தேர்தல் பணி குறித்து ஆலோசனை வழங்கினர். கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது கடந்த முறை நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டத்தின் போது இடைத்தேர்தலுக்கான அடிப்படை பூர்வாக பணிகளை செய்வதற்காக பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை பொறுப்பாளர்களாகவும், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு கம்பம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை பொறுப்பாளர்களாகவும் நியமித்து அவர்களை பல குழுக்களாக பிரித்து அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஒவ்வொரு பூத் பகுதியிலும் மகளிர் 5 பேர், இளைஞர்கள் 10 பேர், மூத்த கழக உறுப்பினர்கள் 10 பேர் என பூத் கமிட்டி அமைக்கவும், பூத் கமிட்டியினர் அப்பகுதியிலேயே வாக்காளர்களாக இருக்கிறார்களா என்பதை சரிபார்க்கவும், பூத் கமிட்டியினர் ஒரு குடும்பத்தை சேர்ந்தவராக இல்லாதவாறு பார்த்தல் உள்ளிட்ட பணிகளை பொறுப்பாளர்கள் சரிபார்த்து சிறப்பான பணியை நூற்றுக்கு நூறு முடித்துள்ள உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கிடையில் நமது கழகம் பல்வேறு சோதனைகளை கடந்து இன்று வெற்றிநடை போட்டுக் கொண்டிருப்பதற்கு காரணம் இயக்கத்தை தோற்றுவித்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களும், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களும் நமது இயக்கத்தை ஜாதி, மத, சிறுபான்மை, பெரும்பான்மை வித்தியாசமின்றி தொண்டர்கள் இயக்கமாக நடத்தியதின் காரணமாகத்தான் நமது கழகம் தோற்றுவிக்கப்பட்டு 47 ஆண்டுகள் கடந்த பின்பும் வலுவான இயக்கமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் கழகத்தை உருவாக்கினார்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நமது இயக்கத்தை மாபெரும் இயக்கமாக, இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக நமது இயக்கத்தை நமக்காக பெற்றுத் தந்து தியாகம் செய்து புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நமக்கு தந்துவிட்டு சென்றிருக்கிறார்கள். உணர்வுபூர்வமாக நமது இயக்கத்தில் இருக்கின்ற தொண்டர்கள் முதல் மூத்த முன்னோடிகள் வரை அனைவரும் வயது வித்தியாசமின்றி ஒரே மாதிரியான செயல்பாடுகள் கொண்டவர்களாகவும், கட்டுக்கோப்புடனும் உள்ள ஒரே இயக்கம் நமது கழகம் தான் என்று உலகத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து கொண்டிருக்கிறோம். டெல்லியில் இருக்கின்ற தேசிய கட்சிகளெல்லாம் நமது இயக்கத்தைப் பார்த்து பிரமிப்பு அடைகின்ற அளவிற்கு தொண்டர்கள் கடமையுணர்வோடு செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். அந்தளவிற்கு நமது இயக்கம் ஒருங்கிணைக்கப்பட்டு செயலாற்றிக் கொண்டிருக்கின்ற நிலைக்கு புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவி அம்மா அவர்களுமே காரணம் என்றும் அவர்கள் காட்டிய அன்பான, பாசமான வழியில் நாம் நமது பயணத்தை இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றோம். அதனால்தான் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நமது இயக்கம் எனக்கு பின்னாலும் 100 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்திருக்கும், வளரும் என்றும், நமது கழகம் தான் என்றும் தமிழகத்தில் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கும் என்றும் உணர்த்தியுள்ளார். 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அடிப்படை தேர்தல் பணிகளை நாம் தற்போது முடித்திருக்கின்றோம். இந்நிலையில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வரவுள்ளது. நம் கண்முன்னால் இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளையும், நமது மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய கடமையும் நமக்கு உள்ளது. நாம் ஆண்டிபட்டி, பெரியகுளம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான அடிப்படை பணிகளை நாம் நூற்றுக்கு நூறு முடித்துள்ளோம். தற்போது இக்கூட்டத்தின் நோக்கம் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நமது மாவட்டத்தில் உள்ள மீதமிருக்கின்ற போடிநாயக்கனூர், கம்பம் சட்டமன்ற தொகுதிகளிலும் அடிப்படை பணிகளை செய்ய வேண்டிய நிலையில், கடமையாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம். அதனடிப்படையில் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு பெரியகுளம் தொகுதி நிர்வாகிகள் பொறுப்பாளர்களாகவும், கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் பொறுப்பாளர்களாகவும் இருந்து வாக்குசாவடிக்கு குழுக்களாக சென்று தேர்தலுக்கான அடிப்படை பணிகளை சிறப்பாக கையாள வேண்டும். அப்பணிகளை ஒரு வார காலத்திற்குள் முடித்து குழுக்கள் வாரியாக எப்பகுதிக்கு சென்று தேர்தலுக்கான பணிகளை செய்தனர் என்பது உள்ளிட்ட முழு விபரங்களையும் நகர, ஒன்றிய அளவில் பின்னர் சட்டமன்ற அளவில் தொகுத்து வழங்கிடும் பணியை பத்து தினங்களுக்குள் முடித்திட வேண்டும். இந்த பணிகளெல்லாம் எங்கு, எப்பொழுது, எந்த தேர்தல் வந்தாலும் நம்முடைய பணி தலையாய பணியாக கொண்டு சிறப்பாக பணியாற்றி காரணத்தினால் தான் நமது தேனி மாவட்டம் நூற்றுக்கு நூறு சதவிகிதம் வெற்றி பெறுவோம் என்ற நிலையில் இருந்திருக்கின்றோம். அதே நிலையை நாம் தற்போதும் தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களை காட்டிலும், எப்படி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சதவிகித அடிப்படையில் தமிழகத்திலேயே முதலாவது அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி என்று பெயரெடுத்தோமோ அதே போல் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதி தேனி தொகுதி என்று பெயரெடுத்து தர வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் சிறப்புரையாற்றினர். மாவட்ட பொருளாளர் செல்லமுத்து நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் முருக்கோடை ராமர், மாவட்ட இணை செயலாளர் மஞ்சுளாமுருகன், மாவட்ட துணை செயலாளர் வசந்தாநாகராஜ், ஒன்றிய கழக செயலாளர்கள் தேனி ஆர்.டி.கணேசன், பெரியகுளம் அன்னபிரகாஷ், ஆண்டிபட்டி லோகிராஜன், போடி சற்குணம், கடமலை-மயிலை கொத்தாளமுத்து, கம்பம் இளையநம்பி, உத்தமபாளையம் பி.ஆர்.பி அழகுராஜ், சின்னமனூர் விமலேஸ்வரன், நகர செயலாளர்கள் பெரியகுளம் என்.வி.ராதா, கூடலூர் சோலைராஜ், தேனி கிருஷ்ணகுமார், போடி பழனிராஜ், சின்னமனூர் ராஜேந்திரன், கம்பம் ஆர்.ஆர்.ஜெகதீஸ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ப.ரவீந்திரநாத்குமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பாண்டியராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் பாலமணிமார்பன், மாவட்ட பாசறை செயலாளர் நாராயணன், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாலசந்திரன், மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஆனந்தகுமார் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை, வார்டு கழக செயலாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: தர்காவுக்கு சொந்தமான இடத்தில் தூண் உள்ளது : ஐகோர்ட் கிளையில் வக்பு வாரியம் வாதம்
16 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் தூண் உள்ளது என்று ஐகோர்ட்டில் வக்பு வாரியம் வாதம் முன் வைத்தது.
-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை முடக்க முயற்சி மத்திய அரசு மீது அமைச்சர் குற்றச்சாட்டு
16 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை முடக்க மத்தி அரசு முயற்சிக்கிறது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
-
எதிர்க்கட்சித் தலைவர்களை பழிவாங்குவதற்காக மத்திய முகமைகளை தவறாக பயன்படுத்துவது அம்பலம்: மத்திய பா.ஜ.க. அரசுக்கு மீது முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
16 Dec 2025சென்னை, நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லி
-
தங்கம் விலை சவரனுக்கு 1,320 ரூபாய் குறைந்தது
16 Dec 2025சென்னை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது.
-
அங்கன்வாடி பணியாளர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும்: சோனியா காந்தி
16 Dec 2025புதுடெல்லி, அங்கன்வாடி பணியாளர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும் என்று சோனியா காந்தி தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025 -
இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்தம்: ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்து
16 Dec 2025மாஸ்கோ, இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்து
-
வரும் ஜனவரி முதல் வாரம் தமிழக சட்டசபை கூடுகிறது: பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்
16 Dec 2025சென்னை, தமிழக சட்டசபை ஒவ்வொரு ஆண்டும் முதல் முறையாக கூடும்போது, அதில் கவர்னர் உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது.
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் நானோ தொழில்நுட்ப மாநாடு: போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு
16 Dec 2025வேலூர், வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப மாநாட்டில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஆகிய
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் நீக்கப்பட்ட 58 லட்சம் பேர் விவரங்கள் வெளியீடு: ஜன.15 வரை திருத்தங்களைக் கோர அவகாசம்
16 Dec 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக மேற்கு வங்கத்தில் நீக்கப்பட்ட 58 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர், விவரங்களை தேர்தல்
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் வைகோ, சண்முகம் சந்திப்பு
16 Dec 2025சென்னை, சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் சண்முகம் சந்தித்து பேசினர்.
-
மகாத்மா காந்தி மீதான வெறுப்பால் 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கிறார் பிரதமர் மோடி ராகுல் காந்தி குற்றச்சாட்டு
16 Dec 2025டெல்லி, மகாத்மா காந்தி மீதான வெறுப்பால் 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கிறார் பிரதமர் மோடி என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
-
ஈரோட்டில் விஜய் பிரசார பொதுகூட்டம்: மைதானம் சீரமைக்கும் பணிகள் தீவிரம்
16 Dec 2025ஈரோடு, ஈரோட்டில் விஜய் பிரசார பொதுகூட்டம் மைதானம் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
இஸ்லாமியர்கள் பயன்பெறும் வகையில் சென்னை அருகில் ரூ.39.20 கோடி மதிப்பில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
16 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (16.12.2025) பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சென்னையில் நடைபெ
-
ஆஷஸ் 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
16 Dec 2025அடிலெய்டு, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் 3-வது டெஸ்ட் அடிலெய்டில் இன்று தொடங்குகிறது.
ஆஸ்திரேலியா வெற்றி....
-
100 நாள் வேலைத்திட்ட பெயரை மாற்ற பார்லி., மக்களவையில் புதிய மசோதா அறிமுகம்: திரும்பப்பெற தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
16 Dec 2025புதுடெல்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை ‘விபி-ஜி ஆர்.ஏ.எம்.ஜி’ என மாற்றும் மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
-
ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் ஏதும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
16 Dec 2025சென்னை, ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
-
‘பெண்டானில்’ ஒரு பேரழிவு ஆயுதம்: முக்கிய உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்து
16 Dec 2025வாஷிங்டன், பெண்டானிலை ஒரு பேரழிவு ஆயுதமாக வகைப்படுத்தும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
-
ஜோர்டான் முதலீட்டாளர்களுக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு
16 Dec 2025அம்மான், ஜோர்டான் முதலீட்டாளர்களுக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
-
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு எதிரான குற்றப்பத்திரிகை ஏற்க மறுப்பு : விசாரணையை தொடர டெல்லி நீதிமன்றம் அறிவுறுத்தல்
16 Dec 2025புது டெல்லி, நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை
-
ஜோர்டான் பட்டத்து இளவரசருடன் காரில் பயணம் செய்த பிரதமர் மோடி
16 Dec 2025புதுடெல்லி, ஜோர்டான் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பட்டத்து இளவரசர் பின் அல் ஹுசைன் இரண்டாம் அப்துல்லா அருட்காட்சியகத்திற்கு ஒரே காரில் அழைத்து சென்றார்.
-
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவரை நேரில் சென்று விசாரித்தார் ஆஸி., பிரதமர் அப்பனீஸ்
16 Dec 2025சிட்னி, சிட்னியில் யூதர்கள் நிகழ்வில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரிடமிருந்து துப்பாக்கியை பிடுங்கியபோது குண்டடிப்பட்ட அகமத்-அல்-அகமதுவை மருத்துவமனையில் சந்தித்து அந்நாட்ட
-
2014 முதல் இந்தியாவிற்குள் ஊடுருவிய 23,926 பேர் கைது: பார்லி.யில் மத்திய அரசு தகவல்
16 Dec 2025புதுடெல்லி, இந்தியாவில் 2014-ம் ஆண்டு முதல் ஊடுருவிய 23,926 பேரை கைது செய்துள்ளதாக மத்தி அரசு தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-12-2025.
17 Dec 2025 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
16 Dec 2025- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலி நரசிம்மர் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
- திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிசேகம்.



