முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலின் போது இடையூறு செய்த வழக்கு: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வுக்கு 3 மாத சிறை

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : தேர்தலின்போது இடையூறு செய்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ மனோஜ் குமாருக்கு 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மனோஜ் குமார், தனது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். கல்யாண்புரி பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்ற எம்.சி.டி. பள்ளியின் பிரதான வாசலில் போராட்டம் நடைபெற்றதால், வாக்காளர்களுக்கு இடையூறு ஏற்பட்டது. இந்த தேர்தலில் மனோஜ் குமார் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். ஆனால், வாக்குச்சாவடி அருகே வாக்காளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தியதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், மனோஜ் குமார் குற்றவாளி என கடந்த 11-ம் தேதி நீதிபதி தீர்ப்பளித்தார். இந்நிலையில், மனோஜ் குமாருக்கான தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. அப்போது, மனோஜ் குமாருக்கு 3 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அத்துடன், மேல்முறையீடு செய்ய ஏதுவாக அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து