எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சேதமடைந்த 1,225 குடிசைகளுக்கு தலா ரூ. 4,100 மற்றும் முழுமையாக சேதமடைந்த 296 குடிசைகளுக்கு தலா ரூ. 5,000 உடனடியாக நிவாரணம் வழங்கவும், முழுமையாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு மாற்றாக பசுமை வீடுகள் திட்டத்தில் புதிய வீடுகள் கட்டித் தர முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை பெய்த கனமழையின் காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டதையடுத்து உடனடியாக மீட்பு மற்றும் நிவராணப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டேன். நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் கோரிக்கையின் அடிப்படையில், கூடுதலாக மாநிலப் பேரிடர் மீட்புக் குழுக்கள், தேசியப் பேரிடர் மீட்புக் குழுக்கள், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, அனைத்துத் துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் மற்றும் 66 ராணுவ வீரர்கள் உட்பட மொத்தம் 456 நபர்கள் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், 400 நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களும், 720 தூய்மைக் காவலர்களும், 160 மின்துறை ஊழியர்களும் ஆக மொத்தம் 1280 பேர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். 60 ஜே.சி.பி. இயந்திரங்கள், முப்பது 108 ஆம்புலன்சுகள், 16 ஜெனேரேட்டர்கள் மற்றும் 70 மரம் அறுப்பான்கள் பயன்படுத்தப்பட்டு மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன.
எனது உத்தரவின் பேரில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிருவாக ஆணையர் முனைவர் சத்யகோபால் ஆகியோர் உடனடியாக நீலகிரி மாவட்டத்திற்குச் சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தினர். மேலும், 13-ம் தேதி அன்று துணை முதல்வர் மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டு அப்பணிகளை துரிதப்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எனது தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு கீழ்க்கண்ட உத்தரவுகள் வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 6910 நபர்கள் மீட்கப்பட்டு 67 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு பால் பவுடர் வழங்கப்பட வேண்டும். வயது முதிர்ந்தோர் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ வசதி செய்து தரப்பட வேண்டும். தொற்று நோய்கள் ஏதும் பரவாமல் தடுக்க பாதிக்கப்பட்ட பகுதிகளில், கிருமி நாசினி மற்றும் குளோரின் ஆகியவை தெளிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நிவாரண முகாம்களில் இதுவரை 23 நிரந்தர மருத்துவ முகாம்கள் மற்றும் 13 நடமாடும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு 9,333 நபர்கள் பயனடைந்துள்ளனர். மேலும் தேவைக்கேற்ப இம்முகாம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்கு அவர்களது குடும்பச் சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டு தலா 10 லட்சம் ரூபாய் எனது உத்தரவின் பேரில் வழங்கப்பட்டது. அதே போல் காட்டுக்குப்பை, நஞ்சநாட்டை சேர்ந்த வேலாயுதம் என்பவரின் மகன் சஜீவ் என்ற நபரின் குடும்பத்தினருக்கும் 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்த 11 நபர்களுக்கும் மற்றும் 2 கால்நடைகள் இழப்பிற்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உரிய நிவாரணம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். பகுதியாக சேதமடைந்த 1,225 குடிசைகளுக்கு தலா ரூ. 4,100 மற்றும் முழுமையாக சேதமடைந்த 296 குடிசைகளுக்கு தலா ரூ. 5,000 உடனடியாக நிவாரணம் வழங்கவும் முழுமையாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு மாற்றாக பசுமை வீடுகள் திட்டத்தில் புதிய வீடுகள் கட்டித் தர உத்தரவிட்டுள்ளேன். சேதமடைந்த தோட்டக்கலைப் பயிர்கள் தொடர்பான கணக்கெடுப்பு பணியினை 16-ம் தேதிக்குள் முடித்து, வேளாண் பெருமக்களுக்கு இடுபொருள் மானியம் வழங்கிட உரிய முன்மொழிவுகளை அரசுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளேன்.
சேதமடைந்த 153.34 கி.மீ. நீளமுள்ள சாலைகளில் போக்குவரத்து தற்காலிகமாக சீர் செய்யப்பட்ட நிலையில் அவற்றை முழுமையாக சீரமைக்கவும், சேதமடைந்த 185 சிறுபாலங்கள், 115 மின் கம்பங்கள், 3.5 கி.மீ நீளமுள்ள மின் கம்பிகள் மற்றும் 6 மின் மாற்றிகள் ஆகியவற்றை உடனடியாக மறுசீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட 55 இடங்களில், 31 இடங்கள் முழுவதுமாக சீரமைக்கப்பட்டு, மீண்டும் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒருவழிப்போக்குவரத்திற்கு ஏதுவாக சீரமைக்கப்பட்ட 24 சாலைகளில், இருவழிப் போக்குவரத்திற்கு ஏற்ப சீரமைக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேதமடைந்த உட்கட்டமைப்புகளை நிரந்தரமாக சீரமைக்க தேவைப்படும் நிதி தொடர்பான முன்மொழிவுகளை விரைந்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க சம்மந்தப்பட்ட துறைகள் நடவடிக்கைகள் எடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன். மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு உடனடி நிவாரணத்திற்காக ரூபாய் முப்பது கோடி மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்ய நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்று 9-ம் ஆண்டு நினைவு நாள்: ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
04 Dec 2025சென்னை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று மெரினா கடற்கரையில் 'உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அ.தி.மு.க.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் விண்ணப்பித்த 28 லட்சம் பேருக்கு கூடுதலாக மகளிர் உரிமை தொகை திட்டம் வரும் 12-ம் தேி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
04 Dec 2025சென்னை, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் விண்ணப்பித்த 28 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் டிச.12ம் தேதி முதல்வர் மு
-
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி
04 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது.
-
எக்ஸ் தளத்தில் கார்த்திகை தீபம் வாழ்த்து பதிவை நீக்கி மீண்டும் பதிவிட்ட செங்கோட்டையன்
04 Dec 2025கோபிசெட்டிபாளையம், எக்ஸ் தளத்தில் கார்த்திகை தீபம் வாழ்த்து பதிவை நீக்கிய நிலையில் செங்கோட்டையன் மீண்டும் அதே பதிவை பதிவிட்டுள்ளார்.
-
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானப்பணிக்கு தடை நீட்டித்து ஐகோர்ட் உத்தரவு
04 Dec 2025சென்னை, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானப் பணிக்கு தடை நீட்டிக்கப்பட்டதாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க.விற்கு பா.ம.க. அழைப்பு
04 Dec 2025சென்னை, பா.ம.க. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க.விற்கு அழைப்பு விடுத்துள்ளது.
-
ஏ.வி.எம்.சரவணனின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி: எல்லோரிடமும் அன்பாக பழகியவர் என புகழஞ்சலி
04 Dec 2025சென்னை, ஏ.வி.எம். நிறுவனத்தின் உரிமையாளரும், பிரபல சினிமா பட தயாரிப்பாளருமான ஏ.வி.எம்.
-
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவை - தமிழ்நாடு அரசு வாதம்
04 Dec 2025திருப்பரங்குன்றம், தனி நீதிபதி ஆணையால் திருப்பரங்குன்றத்தில் சமூக நல்லிணக்கம், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
வாக்காளர்கள் பட்டியலில் இருந்து தமிழகத்தில் 77.52 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்பு
04 Dec 2025சென்னை, தற்போது நடத்தப்பட்ட சிறப்பு திருத்த பணிகள் மூலம் 77 லட்சத்து 52 ஆயிரத்து 529 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மையை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்: பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தல்
04 Dec 2025புது தில்லி, ‘தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை முயற்சிகளைக் கண்டு வியப்படைந்தேன்.
-
கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரை உள்பட 9 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு
04 Dec 2025சென்னை, தூயமல்லி அரிசி மற்றும் கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரை உள்ளிட்ட 9 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
04 Dec 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 5,141 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,619 கன அடியாக சரிந்துள்ளது.
-
டெல்லி காற்றுமாசு விவகாரம்: பார்லி., வளாகத்தில் முகக்கவசம் அணிந்து எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
04 Dec 2025டெல்லி, டெல்லி காற்று மாசுபாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பாராளுமன்ற வளாகத்தில் நேற்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
வரும் 9-ம் தேதி புதுச்சேரியில் விஜய் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கோரி த.வெ.க. மனு
04 Dec 2025புதுச்சேரி, ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், டிச.9-ல் புதுச்சேரியில் விஜய் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரி எஸ்எஸ்பியிடம் த.வெ.க.வினர் நேற்று மனு அளித்துள்ள
-
ராமேஸ்வரம்-காசி இலவச ஆன்மிக பயணம் துவக்கம்
04 Dec 2025ராமேசுவரம், நாகை, மயிலாடுதுறையில் இருந்து ஆன்மிக பயணத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.;
-
கவின் ஆணவப்படுகொலை வழக்கு: கைதான சப்-இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
04 Dec 2025மதுரை, கவின் ஆணவப்படுகொலை வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது.
-
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி விவகாரம்: பிரதமர் நரேந்திரமோடி விளக்கமளிக்க மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்
04 Dec 2025புதுடெல்லி, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
-
சபரிமலையில் 15 லட்சத்தை கடந்த பக்தர்களின் வருகை
04 Dec 2025பத்தனம்திட்டா, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
பா.ம.க.வின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து
04 Dec 2025டெல்லி, அங்கீகரிக்கப்படாத கட்சியின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என பா.ம.க. வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் பிரதமர் மோடி நேரில் வரவேற்பு
04 Dec 2025புதுடெல்லி, 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின். அவரை விமான நிலையத்திற்கு சென்று பிரதமர் மோடி நேரில் வரவேற்றார்.
-
டெல்லி காற்று மாசுபாடு விவகாரம்: நடவடிக்கை எடுப்பது அரசின் பொறுப்பு: சோனியா காந்தி
04 Dec 2025புதுடெல்லி, டெல்லி காற்று மாசுபாடு விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது அரசின் பொறுப்பு என சோனியா காந்தி கூறினார்.
-
அமைச்சரவை கூட்டத்தில் தூங்கி வழிந்த அதிபர் ட்ரம்ப்: வீடியோ இணையத்தில் வைரல்
04 Dec 2025வாஷிங்டன், அமைச்சரவை கூட்டத்தில் தூங்கிய ட்ரம்ப் வீடியோ இணையத்தில் வைரல்லானது.
-
மதீனா-ஐதராபாத் விமானத்திற்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்
04 Dec 2025காந்திநகர், மதீனா - ஐதராபாத் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க மறுப்பு: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு
04 Dec 2025புதுடெல்லி, வெளிநாட்டு தலைவர்கள் யார் வந்தாலும் அவர்களை எதிர்க்கட்சி தலைவர் வந்திப்பது வழக்கம் என்று தெரிவித்துள ராகுல் காந்தி ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க அனுமதி மறுக்க
-
அடுத்தடுத்த இரு போட்டிகளில் சதம் விளாசிய வீரர்களில் விராட் கோலி முதலிடம்
04 Dec 2025ராய்ப்பூர், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அடுத்தடுத்த இரு போட்டிகளில் சதம் விளாசிய வீரர்களில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.


