எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர், -, அரசின் திட்டங்களை கெடுக்கும் கூட்டமாக திமுக தலைமை முதல் தொண்டர்கள்வரை உள்ளனர் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டி பேசினார்.
விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் , தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆலோசனையின் பேரில் விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் அண்ணா பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது. விருதுநகரில் நகரம் கிழக்கு மேற்கு ஒன்றிய கழகம் சார்பாக அண்ணா பிறந்த நாள்விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக விருதுநகர் மாவட்ட கழக செயலாளர், தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி,, சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்ஆர்.ராஜவர்மன், தலைமை கழக பேச்சாளர்கள் முத்து, அறந்தை முருகேசன் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசும்போது, அண்ணாவின் கனவுகளை நினைவாக்கியவர் எம்ஜிஆர். அண்ணா, எம்ஜிஆர் கண்ட கனவுகளை நினைவாக்கியவர் ஜெயலிலதா. ஏழைகளே இல்லாத தமிழகத்தை உருவாக்கியே தீருவேன் என்று திட்டங்களை செயல்படுத்தியவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் திட்டங்கள், சட்டங்கள் அனைத்தும் இன்று நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் இனைந்து தமிழகத்தில் நல்லாட்சி நடத்திக்கொண்டு இருக்கின்றனர். ஏழை மக்கள், பட்டாளி மக்கள், விவசாயிகள் பயன்படக்கூடிய வகையிலும், யாருக்கும் பாதிப்பில்லாத நல்லாட்சியை கொடுத்து வருகின்றனர். அண்ணா பிறந்த நாளை கொண்டாடும் தகுதி அதிமுகவிற்கு மட்டுமே உண்டு. ஏழை எளிய மக்கள், பட்டாளி, படைப்பாளி மக்கள் மனதில் நீங்கா நிலைத்து நிற்கும் சின்னம் இரட்டை இலை சின்னம்தான். அதிமுக எனக்கு பின்னாலும் 100 ஆண்டுகள் ஆளும் என்று ஜெயலலிதா கூறினார்கள். ஜெயலலிதாவின் வழிகாட்டுதல்படி தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. அன்னதானம் திட்டம், தங்கத்திற்கு தாலி, அம்மா உணவகம், அம்மா குடிநீர், விலையில்லா பேன், விசிறி, கிரைண்டர், ஆடுமாடுகள் வழங்கும் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் ஆட்சி 100 ஆண்டுகள் நிலைத்து நீடிக்க அண்ணா பிறந்த நாளில் நாம் சபதம் ஏற்போம். அதிமுகவில் மட்டும்தான் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத தொண்டர்கள் கூட்டம் செயல்பட்டு வருகின்றது. அரசால், கட்சியால் எந்த ஒரு திட்டத்தையும் பெறாமல் எதிர்பார்க்காமல் இரட்டை இலையை தாக்கி பிடித்து உழைக்கின்ற கூட்டம் அண்ணா திமுகவில் உண்டு. இந்த கட்சியை எந்த கொம்பனாலும் அசைத்துகூட பார்க்க முடியாது. எங்கள் எம்எல்ஏக்கள் 20பேரை தூக்கிவிடுவோம் என்று ஸ்டாலின் கூறுகின்றார். எடப்பாடியார் கண் அசைத்தால் 60 திமுக எம்எல்ஏக்களை நாங்கள் தூக்கி விடுவோம். இந்த ஆட்சியை ஸ்டாலினால் தொட்டுக்கூட பார்க்க முடியாது. வரும் 2021 லும் அதிமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் எடப்பாடியார் மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்பார். அதிமுகவிற்கு எங்கு பார்த்தாலும் மக்கள் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டே வருகின்றது. ,இது ஒரு ஆண்மீக கட்சி. அனைத்து சமுதாய மக்களும் ஏற்றுக்கொண்ட கட்சி. வெளிநாடு சென்று வந்ததிற்கு ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்கின்றார். வெள்ளரிக்காய் கூட கொடுக்க மாட்டோம் என்று கூறி விட்டோம். வெளிநாடு செல்லும் போதும் சென்று வந்த பிறகும் தமிழக முதல்வர் தெளிவாக அறிக்கை கொடுத்துள்ளார். மக்கள் எங்களை பற்றி புரிந்து கொண்டார்கள். ஸ்டாலின் கூக்குரல் இடுகின்றார். மழை வந்தாலும் வெள்ளம் வந்தாலும் மழை பெய்யாவிட்டாலும் எல்லாதிற்கும் காரணம் எடப்பாடியார்தான் என்று ஸ்டாலின் கூறி வருகின்றார். இந்த ஆட்சி மீது ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக குறையை மட்டும் கூறி வருகின்றார். 2ஏக்கர் நிலம் தருவோம் என்று கூறியது போல போலியாக வாக்குறுதிகளை கொடுத்து எம்பி தேர்தலில் திமுகவினர் வெற்றிபெற்றுவிட்டனர். கல்விக்கடன் ரத்து செய்வோம், விவசாய கடன் ரத்து செய்வோம் என்று போலியான வாக்குறுதிகளை நம்பி திமுகவிற்கு மக்கள் வாக்களித்து விட்டனர். ஆனால் வேலூர் தொகுதி மக்கள் அதிமுகவின் செல்வாக்கை நிறுபித்து வி்ட்டனர். இன்னும் நாங்கள் கொஞ்சம் சுதாரித்து பணியாற்றி இருந்தால் வேலூர் தொகுதியை கைப்பற்றி இருப்போம். துறைமுருகன் சொந்த ஊரில் அவரால் 20 வாக்குகள் மட்டுமே அதிகமாக பெற முடிந்தது. திமுகவிற்கு அரசியல் வாழ்வு முடிந்து விட்டது. ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி யோகம் கிடையாது. ஒரு கட்சி என்ற அளவில் மட்டும் திமுக இயங்க முடியும். அதிமுகவில் இளைஞர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. அதிமுகவின் வளர்ச்சி அபாரமாக இருக்கும். நாங்கள் வேண்டாம் என்று கூறியவர்கள்தான் திமுகவில் சேர்ந்துள்ளனர். மொட்டை பெட்டிசன் போடுகின்ற கூட்டமாக திமுக கட்சியினர் உள்ளனர். அரசின் திட்டங்களை கெடுக்கும் கூட்டமாக திமுக தலைமை முதல் தொண்டர்கள்வரை உள்ளனர். திமுகவில் மன்னராட்சிதான் நடைபெற்று வருகின்றது. அதிமுகவில் மட்டும்தான் சாதாரண தொண்டனும் சரித்திரித்தில் இடம் பிடிக்க முடியும். உழைக்கின்ற தொண்டர்களுக்கு மதிப்பு கொடுக்கின்ற கட்சி அதிமுக மட்டும்தான். வரும் உள்ளாட்சி தேர்தலில் விருதுநகர் மாவட்டம் அதிமுகவின் எக்கு கோட்டை என்பதை நிறுபித்து காண்பிப்போம். தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர் உட்பட அனைத்து பதவிகளையும் அதிமுகதான் கைப்பற்றும். வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் நல்லாட்சி கொடுத்து வரும் அதிமுகவிற்கு வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.
என்று பேசினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் மூக்கையா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் மச்சராஜா, முன்னாள் யூனியன் தலைவர் கலாநிதி, பொதுக்குழு உறுப்பினர்கள் பாபுராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் நல்லதம்பி, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஆரோக்கியம், மாவட்ட மகளிரணி செயலாளர் சுடர்வள்ளி, துணைத்தலைவர் சரஸ்வதிசந்திரசேகர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வக்கீல் முத்தப்பாண்டியன், மாவட்ட சிறுபாண்மையினர் நலப்பிரிவு செயலாளர் சையதுசுல்தான்இப்ராஹீம்,மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் முனீஸ்வரன், விருதுநகர் மாவட்ட பொருளாளர் தேவர்(எ)கூத்தபெருமாள், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர்கள் ராஜசேகர், காசிராஜன், ஒன்றிய செயலாளர்கள் விருதுநகர் கண்ணன், தர்மலிங்கம், நகர செயலாளர் முகமது நெய்னார், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் பலரம், புதுப்பட்டி கருப்பசாமி, வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், சாத்தூர் ஒன்றிய செயலாளர்கள் சண்முகக்கனி, தேவதுரை, வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் ராமராஜ்பாண்டியன், ராஜபாளையம் ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், குருசாமி, திருவில்லிபுத்தூர் ஒன்றிய செயலாளர் மயில்சாமி, வத்ராப் ஒன்றிய செயலாளர் சுப்புராஜ், சேதுராமலிங்கம், அருப்புக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் சங்கரலிங்கம், வெங்கடேஷ், நரிக்குடி ஒன்றிய செயலாளர்கள் பூமிநாதன், ரவிச்சந்திரன், திருச்சுழி ஒன்றிய செயலாளர்கள் பூமிநாதன், முனியாண்டி. காரியாபட்டி ஒன்றிய செயலாளர்கள் முருகன், ராமமூர்த்திராஜ், திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், ராஜபாளையம் நகர செயலாளர் பாஸ்கரன், திருவில்லிபுத்தூர் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் உட்பட கட்சியின் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை விருதுநகர் நகர செயலாளர் முகம்மதுநெய்னார் ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், தர்மலிங்கம் செய்திருந்தனர்..
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
ஒரே நாளில் தங்கம் விலை ரூ.3,000 சரிவு
28 Oct 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3,000 சரிந்து விற்பனையானது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசி பயணம்
28 Oct 2025சென்னை : அரசு நலத்திட்ட விழாவில் பங்கேற்க இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி செல்கிறார். பின்னர் நாளை பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துக்கொள்கிறார்.
-
காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்: கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் விஜய்யை நேரில் சந்தித்த பின் தகவல்
28 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோரின் காலில் விழுந்து விஜய் மன்னிப்பு கேட்டதாக விஜய்யை சந்தித்தவர்கள் கூறினர்.
-
நீடாமங்கலத்தில் மத்தியக் குழு ஆய்வு: நெல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துமாறு விவசாயிகள் கோரிக்கை
28 Oct 2025நீடாமங்கலம் : நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லில் ஈரப்பதம் குறித்து மத்தியக் குழுவினர் நேற்று (அக்.
-
த.வெ.க. புதிய நிர்வாகக்குழு அறிவிப்பு
28 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்திற்கு புதிய நிர்வாகக் குழுவை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
6 நாட்களுக்குப் பிறகு ஒகேனக்கலில் குளிக்க, பரிசல் இயக்க அனுமதி
28 Oct 2025தருமபுரி : காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக சரிந்துள்ளதால், 6 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் பய
-
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் ஆய்வு
28 Oct 2025சென்னை : சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
-
களப்பணியில் வெல்ல வேண்டிய தருணம் இது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
28 Oct 2025சென்னை : களப்பணியில் தி.மு.க. தொண்டர்களை வெல்ல எவரும் இல்லை எனக் காட்ட வேண்டிய தருணம் இது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நெல் கொள்முதல் விவகாரம்: தமிழக அரசுக்கு விஜய் கேள்வி
28 Oct 2025சென்னை : உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாதது ஏன்? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள த.வெ.க.
-
ஓரணியில் நின்று வாக்குரிமை பறிப்பை நாம் தடுப்போம் : துணை முதல்வர் உதயநிதி பதிவு
28 Oct 2025சென்னை : வரும் 2026 தேர்தலில் 68,000 வாக்குச்சாவடியிலும் வெற்றி என்ற புதிய வரலாறு படைப்போம் என தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஓரணியில் நின்று அநியாய வாக்
-
தே.ஜ. கூட்டணி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தல்
28 Oct 2025பாட்னா : பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிக்க வேண்டும் என்று தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
-
இரு மாநிலங்களில் வாக்காளர் அட்டை: பிரசாந்த் கிஷோருக்கு நோட்டீஸ்
28 Oct 2025பாட்னா : இரு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருக்கும் விவகாரத்தில் பிரசாந்த் கிஷோர் பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
-
தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: கவனிக்க வேண்டிய 6 முக்கிய அம்சங்கள்
28 Oct 2025சென்னை : தமிழகத்தில் ‘எஸ்.ஐ.ஆர்.’ என்று சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்குவதால் 6 முக்கிய அம்சங்களை கவனிக்க வேண்டி உள்ளது.
-
சென்னையில் இன்று முதல் மழை குறையும்
28 Oct 2025சென்னை : சென்னையில் இன்று முதல் மழை குறைந்துள்ளதாக வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்தார்.
-
திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ.வின் தாயார் மறைவு; முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
28 Oct 2025சென்னை : திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ.வின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
-
முன்னாள் நீதிபதி தலைமையில் 8-வது ஊதியக்குழு அமைப்பு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
28 Oct 2025புதுதில்லி : சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8-வது ஊதியக் குழு அமைக்கப்படுவது மற்றும் பரிந்துரை விதிமுறைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி த
-
மோந்தா புயல் ஆந்திராவுக்கு 50 கி.மீ. தொலைவில் நெருங்கியது
28 Oct 2025சென்னை : மோந்தா புயல் ஆந்திராவுக்கு 50 கி.மீ. தொலைவில் நெருங்கியது.
-
வடகிழக்கு பருவமழை எதிரொலி: 6 நாட்களில் 4.12 லட்சம் பேருக்கு உணவு: தமிழ்நாடு அரசு தகவல்
28 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை எதிரொலி காரணமாக 6 நாட்களில் 4.12 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
6.1 ரிக்டர் அளவில் துருக்கியில் நிலநடுக்கம்
28 Oct 2025அங்காரா : துருக்கி நாட்டில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், மேற்கு மாகாணங்களில் உள்ள முக்கிய நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
-
தகவல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
28 Oct 2025புதுடெல்லி : தகவல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
குகேஷ் தரமான பதிலடி
28 Oct 2025அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் கிளட்ச் செஸ் சாம்பியன்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
-
விவசாயம் மற்றும் தொழில்துறை நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம் : துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
28 Oct 2025கோவை : விவசாயம், தொழில்துறை இரண்டும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம் என்று தெரிவித்துள்ள துணை ஜனாதிபதி சி.பி.
-
பீகாரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இன்டியா கூட்டணி : குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை
28 Oct 2025பாட்னா : பீகாரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இன்டியா கூட்டணி வெளியிட்டுள்ளது.
-
உடான் திட்டத்தின்கீழ் இந்தியாவில் சிறிய ரக பயணிகள் விமானங்களை தயாரிக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம்
28 Oct 2025மாஸ்கோ : இந்தியாவில் சிறிய ரக பயணிகள் விமானம் தயாரிக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
-
பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை: ஷ்ரேயாஸ் ஐயர் உடல் நலம் குறித்து சூர்யகுமார் தகவல்
28 Oct 2025சிட்னி : ஷ்ரேயாஸ் ஐயர் உடல் நலம் குறித்து பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்றும் தற்போது உடல் நிலை சீராக உள்ளதாக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்


