எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விருதுநகர், -, அரசின் திட்டங்களை கெடுக்கும் கூட்டமாக திமுக தலைமை முதல் தொண்டர்கள்வரை உள்ளனர் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டி பேசினார்.
விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் , தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆலோசனையின் பேரில் விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் அண்ணா பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது. விருதுநகரில் நகரம் கிழக்கு மேற்கு ஒன்றிய கழகம் சார்பாக அண்ணா பிறந்த நாள்விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக விருதுநகர் மாவட்ட கழக செயலாளர், தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி,, சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்ஆர்.ராஜவர்மன், தலைமை கழக பேச்சாளர்கள் முத்து, அறந்தை முருகேசன் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசும்போது, அண்ணாவின் கனவுகளை நினைவாக்கியவர் எம்ஜிஆர். அண்ணா, எம்ஜிஆர் கண்ட கனவுகளை நினைவாக்கியவர் ஜெயலிலதா. ஏழைகளே இல்லாத தமிழகத்தை உருவாக்கியே தீருவேன் என்று திட்டங்களை செயல்படுத்தியவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் திட்டங்கள், சட்டங்கள் அனைத்தும் இன்று நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் இனைந்து தமிழகத்தில் நல்லாட்சி நடத்திக்கொண்டு இருக்கின்றனர். ஏழை மக்கள், பட்டாளி மக்கள், விவசாயிகள் பயன்படக்கூடிய வகையிலும், யாருக்கும் பாதிப்பில்லாத நல்லாட்சியை கொடுத்து வருகின்றனர். அண்ணா பிறந்த நாளை கொண்டாடும் தகுதி அதிமுகவிற்கு மட்டுமே உண்டு. ஏழை எளிய மக்கள், பட்டாளி, படைப்பாளி மக்கள் மனதில் நீங்கா நிலைத்து நிற்கும் சின்னம் இரட்டை இலை சின்னம்தான். அதிமுக எனக்கு பின்னாலும் 100 ஆண்டுகள் ஆளும் என்று ஜெயலலிதா கூறினார்கள். ஜெயலலிதாவின் வழிகாட்டுதல்படி தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. அன்னதானம் திட்டம், தங்கத்திற்கு தாலி, அம்மா உணவகம், அம்மா குடிநீர், விலையில்லா பேன், விசிறி, கிரைண்டர், ஆடுமாடுகள் வழங்கும் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் ஆட்சி 100 ஆண்டுகள் நிலைத்து நீடிக்க அண்ணா பிறந்த நாளில் நாம் சபதம் ஏற்போம். அதிமுகவில் மட்டும்தான் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத தொண்டர்கள் கூட்டம் செயல்பட்டு வருகின்றது. அரசால், கட்சியால் எந்த ஒரு திட்டத்தையும் பெறாமல் எதிர்பார்க்காமல் இரட்டை இலையை தாக்கி பிடித்து உழைக்கின்ற கூட்டம் அண்ணா திமுகவில் உண்டு. இந்த கட்சியை எந்த கொம்பனாலும் அசைத்துகூட பார்க்க முடியாது. எங்கள் எம்எல்ஏக்கள் 20பேரை தூக்கிவிடுவோம் என்று ஸ்டாலின் கூறுகின்றார். எடப்பாடியார் கண் அசைத்தால் 60 திமுக எம்எல்ஏக்களை நாங்கள் தூக்கி விடுவோம். இந்த ஆட்சியை ஸ்டாலினால் தொட்டுக்கூட பார்க்க முடியாது. வரும் 2021 லும் அதிமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் எடப்பாடியார் மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்பார். அதிமுகவிற்கு எங்கு பார்த்தாலும் மக்கள் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டே வருகின்றது. ,இது ஒரு ஆண்மீக கட்சி. அனைத்து சமுதாய மக்களும் ஏற்றுக்கொண்ட கட்சி. வெளிநாடு சென்று வந்ததிற்கு ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்கின்றார். வெள்ளரிக்காய் கூட கொடுக்க மாட்டோம் என்று கூறி விட்டோம். வெளிநாடு செல்லும் போதும் சென்று வந்த பிறகும் தமிழக முதல்வர் தெளிவாக அறிக்கை கொடுத்துள்ளார். மக்கள் எங்களை பற்றி புரிந்து கொண்டார்கள். ஸ்டாலின் கூக்குரல் இடுகின்றார். மழை வந்தாலும் வெள்ளம் வந்தாலும் மழை பெய்யாவிட்டாலும் எல்லாதிற்கும் காரணம் எடப்பாடியார்தான் என்று ஸ்டாலின் கூறி வருகின்றார். இந்த ஆட்சி மீது ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக குறையை மட்டும் கூறி வருகின்றார். 2ஏக்கர் நிலம் தருவோம் என்று கூறியது போல போலியாக வாக்குறுதிகளை கொடுத்து எம்பி தேர்தலில் திமுகவினர் வெற்றிபெற்றுவிட்டனர். கல்விக்கடன் ரத்து செய்வோம், விவசாய கடன் ரத்து செய்வோம் என்று போலியான வாக்குறுதிகளை நம்பி திமுகவிற்கு மக்கள் வாக்களித்து விட்டனர். ஆனால் வேலூர் தொகுதி மக்கள் அதிமுகவின் செல்வாக்கை நிறுபித்து வி்ட்டனர். இன்னும் நாங்கள் கொஞ்சம் சுதாரித்து பணியாற்றி இருந்தால் வேலூர் தொகுதியை கைப்பற்றி இருப்போம். துறைமுருகன் சொந்த ஊரில் அவரால் 20 வாக்குகள் மட்டுமே அதிகமாக பெற முடிந்தது. திமுகவிற்கு அரசியல் வாழ்வு முடிந்து விட்டது. ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி யோகம் கிடையாது. ஒரு கட்சி என்ற அளவில் மட்டும் திமுக இயங்க முடியும். அதிமுகவில் இளைஞர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. அதிமுகவின் வளர்ச்சி அபாரமாக இருக்கும். நாங்கள் வேண்டாம் என்று கூறியவர்கள்தான் திமுகவில் சேர்ந்துள்ளனர். மொட்டை பெட்டிசன் போடுகின்ற கூட்டமாக திமுக கட்சியினர் உள்ளனர். அரசின் திட்டங்களை கெடுக்கும் கூட்டமாக திமுக தலைமை முதல் தொண்டர்கள்வரை உள்ளனர். திமுகவில் மன்னராட்சிதான் நடைபெற்று வருகின்றது. அதிமுகவில் மட்டும்தான் சாதாரண தொண்டனும் சரித்திரித்தில் இடம் பிடிக்க முடியும். உழைக்கின்ற தொண்டர்களுக்கு மதிப்பு கொடுக்கின்ற கட்சி அதிமுக மட்டும்தான். வரும் உள்ளாட்சி தேர்தலில் விருதுநகர் மாவட்டம் அதிமுகவின் எக்கு கோட்டை என்பதை நிறுபித்து காண்பிப்போம். தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர் உட்பட அனைத்து பதவிகளையும் அதிமுகதான் கைப்பற்றும். வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் நல்லாட்சி கொடுத்து வரும் அதிமுகவிற்கு வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.
என்று பேசினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் மூக்கையா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் மச்சராஜா, முன்னாள் யூனியன் தலைவர் கலாநிதி, பொதுக்குழு உறுப்பினர்கள் பாபுராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் நல்லதம்பி, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஆரோக்கியம், மாவட்ட மகளிரணி செயலாளர் சுடர்வள்ளி, துணைத்தலைவர் சரஸ்வதிசந்திரசேகர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வக்கீல் முத்தப்பாண்டியன், மாவட்ட சிறுபாண்மையினர் நலப்பிரிவு செயலாளர் சையதுசுல்தான்இப்ராஹீம்,மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் முனீஸ்வரன், விருதுநகர் மாவட்ட பொருளாளர் தேவர்(எ)கூத்தபெருமாள், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர்கள் ராஜசேகர், காசிராஜன், ஒன்றிய செயலாளர்கள் விருதுநகர் கண்ணன், தர்மலிங்கம், நகர செயலாளர் முகமது நெய்னார், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் பலரம், புதுப்பட்டி கருப்பசாமி, வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், சாத்தூர் ஒன்றிய செயலாளர்கள் சண்முகக்கனி, தேவதுரை, வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் ராமராஜ்பாண்டியன், ராஜபாளையம் ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், குருசாமி, திருவில்லிபுத்தூர் ஒன்றிய செயலாளர் மயில்சாமி, வத்ராப் ஒன்றிய செயலாளர் சுப்புராஜ், சேதுராமலிங்கம், அருப்புக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் சங்கரலிங்கம், வெங்கடேஷ், நரிக்குடி ஒன்றிய செயலாளர்கள் பூமிநாதன், ரவிச்சந்திரன், திருச்சுழி ஒன்றிய செயலாளர்கள் பூமிநாதன், முனியாண்டி. காரியாபட்டி ஒன்றிய செயலாளர்கள் முருகன், ராமமூர்த்திராஜ், திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், ராஜபாளையம் நகர செயலாளர் பாஸ்கரன், திருவில்லிபுத்தூர் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் உட்பட கட்சியின் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை விருதுநகர் நகர செயலாளர் முகம்மதுநெய்னார் ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், தர்மலிங்கம் செய்திருந்தனர்..
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி உடல்நலக்குறைவால் காலமானார்
14 Jul 2025பெங்களூரு : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் நேற்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87.
-
40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்: டி.ஜி.பி. சங்கர் ஜிவால்
14 Jul 2025சென்னை, டி.எஸ்.பி., உதவி ஆணையர் பொறுப்பிலுள்ள 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்த சிங்கப்பூர் மந்திரி
14 Jul 2025பழனி : பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்தார் சிங்கப்பூர் மந்திரி சண்முகம்.
-
கோவா, அரியானா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்
14 Jul 2025புதுடெல்லி, கோவா உள்பட 3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம் செய்து ஜனாதிபதி திரெளபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் மீது 45 நாளில் தீர்வு : கூடுதல் தலைமை செயலாளர் உறுதி
14 Jul 2025சென்னை : ''உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும் என அரசு கூடுதல் தலைமை செயலாளரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா தெரிவித்
-
அமர்நாத்தில் பனி லிங்கத்தை 2 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்
14 Jul 2025ஸ்ரீநகர், அமர்நாத் யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை 2 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
-
அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
14 Jul 2025திருச்சி : 'அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம்' என தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசுகையில் தெரிவித்தார்.
-
தமிழக எம்.பி, எம்.எல்.ஏ.-க்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வழங்க உத்தரவிடக்கோரி த.வெ.க. மனு
14 Jul 2025சென்னை : தமிழகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்கு குறித்த விவரங்களை வெளியிட மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உயர்
-
சரோஜா தேவி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
14 Jul 2025புதுடெல்லி : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
விமான விபத்துக்கு பராமரிப்பு பிரச்சினைகள் காரணமில்லை : ஏர் இந்தியா சி.இ.ஓ. தகவல்
14 Jul 2025புதுடெல்லி : அகமதாபாத் விமான விபத்துக்கு இயந்திரவியல் (மெக்கானிக்கல்), பராமரிப்பு சார்ந்த (மெயின்டனன்ஸ்) பிரச்சினைகள் காரணமாக இருக்கவில்லை என ஏர் இந்தியா சி.இ.ஓ.
-
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் : லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
14 Jul 2025மதுரை : முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று (ஜூலை 14) அதிகாலை 5.31 மணியளவில் கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபி
-
நடிகை சரோஜாதேவி மறைவு: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்
14 Jul 2025சென்னை, நடிகை சரோஜாதேவி மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.;
-
நான் துரோகியா? - மல்லை சத்யா ஆவேசம்
14 Jul 2025சென்னை : ம.தி.மு.க.விற்கு நான் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் நான் துரோகி அல்ல என்று மல்லை சத்யா கூறினார்.
-
ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கு: குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு
14 Jul 2025திருப்பத்தூர் : ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்: இ.பி.எஸ். மீண்டும் திட்டவட்டம்
14 Jul 2025சேலம், 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
ஆய்வுக்கு பயந்து விருதுநகரில் 200-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் மூடல்
14 Jul 2025விருதுநகர் : விருதுநகரில் நேற்று 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன.
-
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
14 Jul 2025காபுல் : ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் பதிவானது.
-
புதின் அழகாக பேசுகிறார்; ஆனால் குண்டுகளையும் வீசி விடுகிறார்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாக்கு
14 Jul 2025வாஷிங்டன், புதின் அழகாக பேசுகிறார் . ஆனால் அனைவர் மீதும் குண்டுகளை போடுகிறார் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
உள்ளே செல்ல அனுமதி மறுப்பு: தியாகிகள் கல்லறைக்கு சுவர் ஏறி சென்று முதல்வர் உமர் அஞ்சலி
14 Jul 2025ஸ்ரீநகர் : தியாகிகளின் கல்லறைக்குச் செல்ல முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர் சுவர் ஏறி குறித்துச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருந்தால் நடவடிக்கை; தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
14 Jul 2025புதுடெல்லி : பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
-
நடத்தை விதிகளை மீறல்: சிராஜுக்கு ஐ.சி.சி.அபராதம்
14 Jul 2025லார்ட்ஸ் : 2-வது இன்னிங்சின் போது பென் டக்கெட் விக்கெட்டை வீழ்த்திய சிராஜ், ஆக்ரோஷமாக கொண்டாடினார். டக்கெட் முகத்திற்கு முன்பு வந்து முறைத்தப்படி சென்றார்.
-
பயணத்தை தொடங்கியது டிராகன்: சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் இன்று பூமிக்கு திரும்புகின்றனர்
14 Jul 2025நியூயார்க், சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேருடன் பூமியை நோக்கி தனது பயணத்தை டிராகன் விண்கலம் தொடங்கியது. இன்று மாலை அவர்கள் பூமிக்கு திரும்புகின்றனர் .
-
காசாவில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உயிரிழப்பு
14 Jul 2025காசா முனை : காசாவில் நடந்த ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலியாகினர். இதற்கு தொழில்நுட்ப தவறு என இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.
-
சாய்னா நேவாலின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது
14 Jul 2025ஐதராபாத் : 7 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும், கணவர் காஷ்யப்பை பிரிவதாகவும் சாய்னா நேவால் அறிவித்துள்ளார்.
-
இந்தியா - சீனா இடையேயான கருத்து பரிமாற்றம் முக்கியம் : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
14 Jul 2025பெய்ஜிங் : இந்தியா - சீனா உறவை தொடர்ந்து இயல்புநிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையேயான கருத்து பரிமாற்றம் மிகவும் முக்கியம் என்றும் வெளியுறவு