முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.விற்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது - அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.விற்கு தேர்தல் ஜூரம் வந்துவிட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராக இருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் குற்றத்தை எங்கள் மீது சுமத்த மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார். உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு கோரி 2016 - ல் நீதிமன்றத்தில் வழக்கு போட்டது தி.மு.க.தான். மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என தேர்தல் அறிவித்தால், தி.மு.க.விற்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் தி.மு.க.வின் இரட்டை வேடம் அம்பலமாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து