முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமரிக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சனிக்கிழமை, 7 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புளளதாகவும், குமரி கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கடலோர மாவட்டங்களின் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக நாகையில் 6 செ.மீ., திருப்பூண்டி, திருத்துறைப்பூண்டியில் தலா 5 செ.மீ., காரைக்கால், புதுக்கோட்டையில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழை பெய்வது குறைந்து தற்போது வறண்ட வானிலை நிலவி வருகிறது. இருப்பினும் குமரிக் கடல் பகுதியல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு காற்று சுழற்சியால் சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று 60 கி.மீ வேகத்தில் வீசக் கூடும் என்பதால் அப்பகுதிளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து