அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 'பியூன்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெங்களூருவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் 3 பேர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பெங்களூருவில் 3 அடிப்படைவாத அமைப்பை சேர்ந்த நபர்களை தமிழ்நாடு க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர். இம்ரான்கான், முகமது சயித், முகமது ஹனீப்கான் என்ற மூவரும் தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு, போலியாக சிம்கார்டு மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை தயாரித்து கொடுத்ததாகவும், பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. அதுமட்டுமல்லாது இந்து முன்னணி நிர்வாகி சுரேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய ஐ.எஸ். தீவிரவாத ஒருங்கிணைப்பாளரின் கும்பலுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் வாகன சோதனையின் போது சுட்டு கொல்லப்பட்டார். இந்த விவகாரத்திலும் இவர்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து, தமிழ்நாடு கியூ பிரிவு போலீசார் 10 நாட்கள் இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த அடிப்படையில் புழல் சிறையில் இருந்து இந்த 3 அடிப்படைவாத அமைப்புகளை சேர்ந்தவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி லோஸ்மின்துரை முன்பாக இது தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களையும் தமிழ்நாடு கியூ பிரிவு போலீசார் தரப்பில் முன்வைக்கப்பட்டது. அந்த அடிப்படையில் 10 நாட்கள் இவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும், உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட விவகாரத்திலும், வேறு எந்தெந்த தீவிரவாத அமைப்புகளுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறது? எப்படி எல்லாம் தொடர்பு இருக்கிறது? என்பதை பற்றி விசாரிக்கவும் அனுமதி கேட்டிருந்தனர். அந்த பெயரிலே முழு 10 நாட்களையும் விசாரிக்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 3 பேரையும் பெங்களூர், கேரளா, டெல்லி ஆகிய இடங்களுக்கு எல்லாம் அழைத்து செல்லப்பட்டு தமிழ்நாடு கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
அகத்திக்கீரை சாம்பார்![]() 2 days 6 hours ago |
ராகி அடை![]() 6 days 4 hours ago |
முருங்கைக்கீரை பொங்கல்![]() 1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 27-01-2023.
27 Jan 2023 -
ஆஸி., ஓபன் கலப்பு இரட்டையர் இறுதிச்சுற்று: சானியா - போபண்ணா ஜோடி நாளை பிரேசில் ஜோடியை எதிர்கொள்கிறது
26 Jan 2023மெல்போர்ன்: சானியா மிர்சா - ரோஹன் போபண்ணா ஜோடி பங்கேற்கும் கலப்பு இரட்டையர் இறுதிச்சுற்று நாளை நடைபெறவுள்ளது. இறுதிச்சுற்றில் பிரேசில் ஜோடியை எதிர்கொள்கிறது.
-
ஒருநாள் தொடரை போல நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் வெற்றி தொடருமா..? முதல் டி-20 போட்டியில் இன்று மோதல்
26 Jan 2023ராஞ்சி: இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்று 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று நடக்கிறது.
-
மகளிர் அண்டர்-19 டி-20 உலகக் கோப்பை: முதல் அரையிறுதியில் இன்று இந்திய-நியூசிலாந்து மோதல்
26 Jan 2023வெல்லிங்டன்: மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
-
மகளிர் ஐ.பி.எல்.: அணியின் பெயரை அறிவித்தது அதானி நிறுவனம்
26 Jan 2023பிசிசிஐ சார்பில் ஆடவருக்கு என ஐபிஎல் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இத்தொடர் உலகின் பணம் கொழிக்கும் போட்டியாக திகழ்கிறது.
-
3,900 பேரை பணி நீக்கம் செய்யும் ஐ.பி.எம். நிறுவனம்
27 Jan 2023வாஷிங்டன் : முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஐ.பி.எம் 3900 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
-
விண்ணில் சீறிப்பாய்ந்தது ஜப்பானின் ஐ.ஜி.எஸ். 7 உளவு செயற்கைக்கோள்
27 Jan 2023டோக்கியோ : ஐ.ஜி.எஸ். 7 என்ற உளவு செயற்கைக் கோளை ஜப்பான் விண்ணில் செலுத்தி உள்ளது.
-
இந்திய குடியரசு நாளை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Jan 2023இந்திய குடியரசு நாளையொட்டி கூகுள் நிறுவனம் சிறப்பு கவன ஈர்ப்பு சித்திரத்தை (டூடுல்) வெளியிட்டுள்ளது. இந்தியா கேட், டெல்லி ஆளுநர் மாளிகை உள்ளிட்டவை இடம்பெற்றன.
-
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்: 11 பேர் பலி
27 Jan 2023கீவ் : உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினி நேரில் அஞ்சலி
27 Jan 2023சென்னை : திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
ஜனாதிபதி திரெளபதி முர்மு அளித்த தேநீர் விருந்தில் பிரதமர் பங்கேற்பு..!
26 Jan 2023இந்தியாவின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு தேநீர் விருந்து அளித்தார்.
-
பிரபல பழம்பெரும் முன்னணி நடிகை ஜமுனா காலமானார்
27 Jan 2023ஐதராபாத் : பிரபல பழம்பெரும் நடிகை ஜமுனா வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார்.
-
ஸ்பெயின் பிரதமருடன் ஈரான் செஸ் வீராங்கனை சந்திப்பு
27 Jan 2023மாட்ரிட் : ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள ஈரானிய வீராங்கனை சாரா, அந்நாட்டின் பிரதமர் பெட்ரோவை நேரில் சந்தித்து பேசினார்.
-
பாகிஸ்தானில் அரசு ஊழியர்கள் சம்பளத்தை குறைக்க பரிசீலனை
27 Jan 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் அரசு ஊழியர்கள் சம்பளத்தை 10 சதவீதம் குறைக்க அந்நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது.
-
புகையிலை பொருட்களுக்கான தடை ரத்து: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும்: அமைச்சர் தகவல்
27 Jan 2023திருவாரூர் : புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்த ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என அமைச்சர் மா.சுப
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அ.ம.மு.க. வேட்பாளர் அறிவிப்பு
27 Jan 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சிவ பிரசாத் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
-
தமிழில் வேத மந்திரங்கள் முழங்க 16 வருடத்திற்கு பிறகு நடந்த பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் : அரோகரா! அரோகரா! என பக்தர்கள் பரவசம்
27 Jan 2023திண்டுக்கல் : தமிழில் மந்திரங்கள் முழங்க 16 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று பழனி முருகன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
-
ஆஸ்திரேலியாவில் இந்து கோவில்கள் மீது தாக்குதல்
27 Jan 2023மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் மூன்று இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டதற்கு இந்திய துாதரகம் கடும் கண்டனம் தெரிவி
-
பட்டியலினத்தவர்களுக்கு புத்தொழில் நிதித்திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
27 Jan 2023சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாடு பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் புத்தொழில் நித
-
மார்ச் 3, 4-ம் தேதிகளில் கச்சத்தீவு திருவிழா: இலங்கை அரசு அறிவிப்பு
27 Jan 2023கொழும்பு : மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா நடைபெறும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
-
பி.பி.சி. ஆவணப்படத்தை வெளியிட சென்னை பல்கலைக்கழகம் தடை
27 Jan 2023சென்னை : குஜராத் கலவரம் குறித்து பி.பி.சி. தயாரித்துள்ள ஆவணப்படத்தை வெளியிட சென்னை பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி சரித்திரம் படைக்க வேண்டும் : ஆலோசனை கூட்டத்தில் இ.பி.எஸ்.பேச்சு
27 Jan 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி சரித்திரம் படைக்க வேண்டும் என்று ஈரோட்டில் நேற்று 2-வது நாளாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ப
-
நியாய விலைக்கடைகள் மூலம் இலவச வேஷ்டி, சேலைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
27 Jan 2023சென்னை : நியாய விலைக்கடைகள் மூலம் இலவச வேஷ்டி, சேலைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
-
மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டை கண்காணிக்க வலைதளம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
27 Jan 2023சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, முதல்வர் மு.க .ஸ்டாலின் நிதித்துறை சார்பில் தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியத்தை தொடங்கி வைத்து முதற்கட்டம
-
பிரபல திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
27 Jan 2023சென்னை : பிரபல திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.