முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்கொரியாவில் இருந்து மேலும் ஒரு லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தது

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா பரிசோதனையை அதிகரிக்கும் வகையில் தென்கொரியாவில் இருந்து ஒரு லட்சம் பி.சி.ஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் படுக்கை வசதிகளையும், பரிசோதனை கருவிகளையும் அமைத்துக் கொள்ள தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி, தமிழகம் முழுவதும் மேலும் 10 லட்சம் பி.சி.ஆர். பரிசோதனை கருவிகளை வாங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்கும் வகையில் தென்கொரியாவில் இருந்து ஒரு லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தடைந்தது. புதிதாக கருவிகள் வந்திருப்பதால் பரிசோதனைகள் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 5.6 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் கையிருப்பில் உள்ளன. 

முன்னதாக சோதனையை அதிகரிக்க 10 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் வாங்க தென்கொரியாவிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.  மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கொரோனா பரிசோதனையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருப்பதாக அரசு தொடர்ச்சியாக தெரிவித்து வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து