முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாண் மசோதாவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: பினராய் விஜயன் பேட்டி

வியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராய் விஜயன் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்றத்தில் வேளாண் மசோதாவை எதிர்த்த 8 எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த மசோதா அமலுக்கு வந்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.  கடந்த 6 ஆண்டுகளில் 60 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 10,281 விவசாயிகள் இறந்துள்ளனர்.  வேளாண் மசோதா குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்தோம். இது குறித்து சட்டநிபுணர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டது.  அதன்அடிப்படையில் வேளாண் மசோதாவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவது பற்றி முடிவு செய்வோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து