முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கப்பல்களை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணையை சோதனை செய்தது இந்திய கடற்படை

வெள்ளிக்கிழமை, 23 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : எதிரி நாடுகளின் கப்பல்களை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணையை இந்திய கடற்படை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது.

நாட்டின் பாதுகாப்பிற்காக பல்வேறு ஏவுகணைகளை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) உருவாக்கி உள்ளது. லடாக் எல்லையில் சீனாவுடன் தொடர்ந்து பதற்றம் நிலவும் நிலையில், கடந்த 2 மாதமாக இந்தியா பல்வேறு ஏவுகணைகளை சோதனை நடத்தி வருகிறது. அதில் தாக்குதல் தூரம் நீட்டிக்கப்பட்ட பிரம்மோஸ், பிருத்வி-2, ருத்ரம்-1, சவுர்யா, நாக் உள்ளிட்ட ஏவுகணைகளும் அடங்கும். 

இந்நிலையில் கப்பல்களை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணையை இந்திய கடற்படை நேற்று பயிற்சியின் போது சோதனை செய்தது. அரபிக் கடலில் நிறுத்தப்பட்டிருந்த ஐ.என்.எஸ். பிரபால் கப்பலில் இருந்து இந்த ஏவுகணை செலுத்தப்பட்டது. 

அதில், ஏவுகணை கடலில் மற்றொரு இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிறிய கப்பலைத் துல்லியமாக தாக்கி அழித்துள்ளது. ஏவுகணை செலுத்தப்பட்டபோது எடுத்த வீடியோவை கடற்படை வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து