எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர்களாக ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ். போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அமைப்புச் செயலாளர்கள் சி.பொன்னையன், முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நேற்று முறைப்படி அறிவித்தனர்.
அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் 5 ஆண்டுக்கு ஓருமுறை நடத்தப்பட வேண்டும். ஜெயலலிதா இருந்த போது 2014-ம் ஆண்டு கட்சி தேர்தல் நடந்தது. அதன்பிறகு 2019-ம் ஆண்டு தேர்தலை நடத்தி இருக்க வேண்டும். அந்த காலகட்டத்தில் கொரோனா பரவல் அதிகம் இருந்ததால் கட்சி தேர்தல் நடத்தப்படாமல் தள்ளி போனது. இந்த நிலையில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை கடந்த 2-ம் தேதி கட்சி தலைமை வெளியிட்டது.
அதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு முதலில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அதன்பிறகு கிளை கழகம் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளுக்கும் வருகிற 13-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தலுக்கு கடந்த 3 மற்றும் 4-ம் தேதிகளில் தலைமைக் கழகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.
கழக அமைப்பு செயலாளர் சி.பொன்னையன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் தேர்தல் ஆணையாளர்களாக இருந்து வேட்பு மனுக்களை வாங்கினார்கள். இதில் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
மேலும் இவர்களது பெயரில் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் என பலரும் வேட்புமனு அளித்தனர். மேலும் சில நிர்வாகிகள் கட்சியில் தனக்கு செல்வாக்கு உள்ளது. நாங்கள் இந்த பதவிக்கு போட்டியிடுகிறோம் என்றும் வேட்பு மனு அளித்தனர். முதல் நாளான 3-ம் தேதி 154 மனுக்கள் வந்திருந்தது. 2-ம் நாளான 4-ம் தேதி 98 மனுக்கள் வந்தது. மொத்தம் வந்திருந்த 252 மனுக்களும் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பரிசீலனை செய்யப்பட்டது.
வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் தொடர்ந்து 5 ஆண்டு அ.தி.மு.க. உறுப்பினர் அட்டையை புதுப்பித்தவராக இருக்க வேண்டும் என்பதால் அதை அடிப்படையாக வைத்து பரிசீலனை செய்யப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்களை 15 பேர் முன் மொழிந்திருக்க வேண்டும். 15 பேர் வழி மொழிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இந்த 30 பேரும் தொடர்ச்சியாக 5 ஆண்டு அ.தி.மு.க. உறப்பினராக இருந்திருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொண்டு பரிசீலனை செய்தனர்.
இதில் 100-க்கும் மேற்பட்டோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. தகுதி வாய்ந்த மனுக்கள் அனைத்தும் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்தது. எனவே இந்த 2 பதவிகளுக்கும் போட்டி ஏற்படாததால் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணைஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் மீண்டும் அதே பதவிகளில் அமர உள்ளனர். இவர்கள் இருவரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவதாக தேர்தல் ஆணையர்களாக உள்ள அமைப்புச் செயலாளர்கள் சி.பொன்னையன், முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் முறைப்படி இதற்கான அறிவிப்பை நேற்று மாலை வெளியிட்டனர். பின்னர், தலைமைக் கழகத்துக்கு வந்து சான்றிதழை பெற்றுக் கொள்ளும் ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
வெற்றிப் பெற்ற சான்றிதழை பெற்றவுடன் நேற்று மாலையே ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் முறையே அ.இ.அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக பதவியேற்றுக் கொண்டனர். பிறகு அவர்கள் வெற்றி சான்றிதழுடன் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா அண்ணா நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினர். இதையொட்டி அ.தி.மு.க. தலைமைக் கழகம் நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 6 days ago |
-
34 பேரூராட்சிகள் தரம் உயர்வு: தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு
02 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.
-
தொடர்ந்து உயரும் தங்கம் விலை
02 Jul 2025சென்னை : 2-வது நாளாக நேற்றும் தங்கம் விலை உயர்ந்து விற்பனையானது.
-
தமிழகத்தில் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு
02 Jul 2025சென்னை, தமிழகத்தில் வரும் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியில் சிறப்பாக செயல்படுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
02 Jul 2025திருவாரூர், குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக பணிபுரிய அறிவுறுத்தப் பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது
02 Jul 2025ஒகேனக்கல் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
-
பகல்காம் தாக்குதலுக்கு கண்டனம்: குவாட் அமைப்பு கூட்டறிக்கை
02 Jul 2025வாஷிங்டன், குவாட் அமைப்பு மாநாட்டில் காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
-
விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே வெளியேறிய முன்னணி வீரர், வீராங்கனைகள்
02 Jul 2025லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றிலேயே ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் வெளியேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சமிக்கு ஐகோர்ட் உத்தரவு
02 Jul 2025இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி மீது பல்வேறு புகார்களை கூறி வந்த ஹசின் ஜஹான், வரதட்சனை கேட்டு தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்ன
-
குரூப் 4 தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு
02 Jul 2025சென்னை : குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
-
முதற்கட்டமாக இம்மாத இறுதிக்குள் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு வழங்கும் அமெரிக்கா
02 Jul 2025புதுடெல்லி : இரண்டு கட்டங்களாக அமெரிக்கா ஹெலிகாப்டர்களை வழங்க உள்ள நிலையில், முதற்கட்டமாக இந்த மாதத்திற்குள் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்தியா வரவுள்ளன.
-
நியூயார்க் : அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் ஸ்பானிஷ் போர்க் என்ற பகுதியில் இந்து மத கோவிலான இஸ்கான் ராதாகிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவில் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
02 Jul 2025அமெரிக்காவில் உள்ள இஸ்கான் கோவில் மீது துப்பாக்கி சூடு சம்பம்: இந்தியா கண்டனம்
-
வெய்ன் லார்கின்ஸ் நினைவுதினம்: கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்தியா - இங்கிலாந்து அணி வீரர்கள்
02 Jul 2025பர்மிங்காம் : வெய்ன் லார்கின்ஸ் நினைவுதினத்தை முன்னிட்டு 2-வது டெஸ்டி போட்டியிலும் இந்தியா- இங்கிலாந்து அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
-
வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடு: அமெரிக்க அரசு முடிவு
02 Jul 2025நியூயார்க், அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
-
திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்தினருக்கு த.வெ.க. தலைவர் விஜய் நேரில் ஆறுதல்
02 Jul 2025சிவகங்கை : போலீசாரால் அடித்துக்கொல்லப்பட்ட திருப்புவனம் அஜித்குமார் வீட்டிற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரில் சென்றார். அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தி
-
திருப்புவனம் இளைஞர் மரணம்: ஆவணங்கள் நீதிபதியிடம் ஒப்படைப்பு
02 Jul 2025சிவகங்கை, திருப்புவனம் இளைஞர் மரணத்தில் தொடர்புடைய ஆவணங்கள் நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டன.
-
2-வது டெஸ்ட் போட்டியில் பும்ரா, குல்தீப் நீக்கம் ஏன்..? - கேப்டன் சுப்மன் கில் பதில்
02 Jul 2025பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பும்ரா, குல்தீப் இடம் பெறாதது குறித்து கேப்டன்
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது: அணையின் நீர்மட்டமும் சரிவு
03 Jul 2025சேலம், மேட்டூர் அணைக்கு வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, காவிரி ஆற்றிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,615 கன அடியாக சரிந்தது அணையின் நீர்வரத்துக் குறைந்த
-
40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை தரமணியில் 'தமிழ் அறிவு வளாகம்' முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்
03 Jul 2025சென்னை, 40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் அமைப்பதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் விழா: பதக்கங்களை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வழங்கினார்
03 Jul 2025சென்னை, மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் நிறைவு விழாவில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பதக்கங்களை வழங்கினார்.
-
20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர்: 'நீட்' மறுதேர்வு நடத்தக் கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
03 Jul 2025சென்னை, நீட் தேர்வின்போது மின் தடையால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, மறு தேர்வு நடத்த கோரிய மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
1,000 ரூபாய் பயண அட்டை மின்சார பஸ்களில் செல்லுமா? போக்குவரத்து கழகம் விளக்கம்
03 Jul 2025சென்னை, மின்சார பஸ்களில் பயண அட்டை செல்லுமா என்பது குறித்து போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.
-
வரும் 19-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு
03 Jul 2025புதுடெல்லி, பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரையொட்டி வருகிற ஜூலை 19-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்
03 Jul 2025டெல்லி, பிரதமர் மோடிககு கானா நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
-
அஜித்குமார் குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க திருமாவளவன் வலியுறுத்தல்
03 Jul 2025சென்னை, போலீஸ் விசாரணையில் உயிரிழந்த மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு மிரட்டல் உள்ளதால், பாதுகாப்பு வழங்க வேண்டும், ''என விடுதலை சிறுத்தைகள் கட்சியி