முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிக்கு கொரோனா

சனிக்கிழமை, 8 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மதுரை ஐகோர்ட்டு ஊழியர்கள் உள்பட மேலும் சிலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நீதிபதி உள்பட 9 பேர் தற்போதைய நிலையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

மதுரை ஐகோர்ட்டில் பணியாற்றி வரும் நீதிபதி ஒருவருக்கு காய்ச்சல் இருந்து வந்தது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல மதுரை ஐகோர்ட்டு ஊழியர்கள் உள்பட மேலும் சிலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நீதிபதி உள்பட 9 பேர் தற்போதைய நிலையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

இதையடுத்து மேலும் பலரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதை உறுதி செய்ய கோர்ட்டு ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஐகோர்ட்டு வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து