முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று முழு ஊரடங்கின் போது சென்னையில் ரெயில் நிலையங்களில் பயணிகளை ஏற்ற 10 ஆட்டோக்களுக்கு அனுமதி

சனிக்கிழமை, 22 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

எழும்பூர் ரெயில் நிலையத்தில் பிரீபெய்டு ஆட்டோ சேவை செயல்படாமல் இருந்த நிலையில் தற்போது ரெயில்வே அதிகாரிகள் 10 ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது.,

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழக அரசு வார நாட்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நாளும், முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனால் 10 சதவீதம் பயணிகள், குறிப்பாக விமான நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களுக்கு செல்பவர்கள் டாக்சி மற்றும் ஆட்டோக்கள் கிடைப்பதில் சிரமங்களும், அதிக கட்டணம் செலுத்தியும் அவதிப்படுவதாக தகவல்கள் கிடைத்தன.

அதன்பேரில், ஊரடங்கு சமயங்களில் ரெயில் சேவைகள் முழுவதுமாக இயக்கப்படுவதால் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரெயில் நிலையம் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில், ரெயில் மூலம் வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள் மற்றும் வெளியூர் செல்லும் பயணிகள் சிரமப்பட்டதாக தெரியவந்தது.

எனவே, பொதுமக்களின் இச்சிரமத்தை தவிர்க்க, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் கபில்குமார் சி.சரத்கர், தலைமையில், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலைய ஆட்டோக்கள் மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் சங்கங்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பிரீபெய்டு ஆட்டோ சேவை செயல்படாமல் இருந்தது. தற்போது, செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

எழும்பூர் ரெயில் நிலையத்தில் பிரீபெய்டு ஆட்டோ சேவை செயல்படாமல் இருந்த நிலையில் தற்போது ரெயில்வே அதிகாரிகள் 10 ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளனர். 

காவல்துறை உதவி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. காவல் துறையினருடன் போக்குவரத்து துறை அதிகாரிகளும் இணைந்து செயல்படுவது குறித்து தமிழ்நாடு போக்குவரத்து ஆணையருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து