முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபத்து வழக்கில் 34 ஆண்டுகளுக்குப் பின்னர் சித்துவுக்கு சிறைத்தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

வியாழக்கிழமை, 19 மே 2022      இந்தியா
Sidhu-2022-05-19

1987-ல் நடந்த சாலை விபத்து தொடர்பான வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்துவுக்கு சுப்ரீம் கோர்ட் தண்டனையை உறுதி செய்தது.

பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கடந்த 1987 ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கிய நிலையில் தண்டனையை ரத்து செய்யக்கோரி நவ்ஜோத் சிங் சித்து சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. சாலை விபத்து வழக்கில் 34 ஆண்டுகளுக்குப் பின்னர் நவ்ஜோத் சிங் சிந்துவுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து