எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : தமிழக அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகிய இருவரும் மதுரைக்கு என்ன செய்தார்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி எழுப்பிஉள்ளார்.
மதுரை பனகல்சாலையில் உள்ள மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் தி.மு.க., பா.ஜ.க., அ.ம.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியில் இருந்து 500 - க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அக்கட்சியில் இருந்து விலகி மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்புசெயலாளரும், மாநகர மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆளுங்கட்சியின் செயல்பாடு சரியில்லாததால் ஆளுங்கட்சியில் இருந்து விலகி நிறைய இளைஞர்கள் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். விடியலை தருவேன் என்று சொல்லிவிட்டு விடியா அரசாக இந்த அரசு இருக்கிறது. சொன்னதை எதுவுமே செய்யாததால் ஆளுங்கட்சியினுடைய நடவடிக்கை பிடிக்காமல் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். மேலும் ஆர்.எஸ்.எஸ். கட்சியிலிருந்து அ.தி.மு.க.விற்கு வந்திருக்கிறார்கள் என்றால் எங்களது கொள்கையை ஏற்று வந்திருக்கிறார்கள்.மேலும் மழை,வெள்ள பாதிப்பில் மக்களை ஆளும் அரசு கண்டு கொள்ளவில்லை.முல்லை பெரியார் அணையில் ஐந்து ஆறு முறை 142 அடியாக எங்களது ஆட்சி காலத்தில் உயர்த்தி இருக்கிறோம்.
இப்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கேரள அரசு முல்லை பெரியார் அணையில் ரூர் கேவ் என்ற முறையை கொண்டு வந்து மக்களுக்கு பாதுகாப்பற்ற முறையில் உள்ளது என உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.இந்த ரூர் கேவ் திட்டம் கொண்டு வந்தால் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அது மட்டுமல்ல நமக்கு குடிநீரும் பெரும் பிரச்சினை தான். தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே அண்டை மாநிலங்கள் பெரும் இடைஞ்சலை கொடுக்கிறார்கள்.
இந்த ரூட் கர்வ் திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடி முறையாக நடவடிக்கை எடுக்க வில்லை. பெருத்த மனக்குழப்பத்தில் இருக்கிறார்கள் மேலும் முல்லை -பெரியார் -வைகை பாசன விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மகளிர்க்கு இலவச பஸ் குறித்த கேள்விக்கு முதன்மைச் செயலாளர் கூறும் போது 8 கோடி பேர் பயனடைந்தார் அதே தவறு. முதன்மை செயலாளர் ஒரு தவறான செய்தியை சொல்லுகிறார்.கோ- பேக் மோடி என்று சொன்னவர்கள் இன்று வெல்கம் மோடி என்கிறார்களே என்ற கேள்விக்குஅமலாக்கத்துறை ரெய்டு பண்ணிடும் ஊழல் ஒழிப்புத்துறை ரெய்டு பண்ணிடும் என்ற பயம் தான்.முதல்வர் கோட் சூட் போட்டு லெஜன்ட் சரவணன் போல் வருகிறார் என்று கூறினேன் உடனே அதை மாற்றிவிட்டார்.
பாரத பிரதமர் கதர் வேஷ்டி சட்டை உடன் சென்னைக்கு வந்தார்.நாங்க எல்லாம் சொன்னதனால் முதல்வர் தப்பிச்சார் இல்லையென்றால் கோட் சூட் என போயிருந்தா ஐயோ அவ்வளவு தான் என்றார். ஜனாதிபதி தேர்தலில் பி.ஜே.பி.க்கு எதிர்த்து வாக்களித்தார்கள். வாக்களித்துவிட்டு வெற்றி பெற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்ததும் திமுக டி.ஆர். பாலு தலைமையில் முதலில் மரியாதை கொடுத்தார்கள். ஜி.எஸ்.டி.பற்றி நிர்மலா சீதாராமன் புட்டு புட்டு வைத்தார்கள்.
பால், வெண்ணை, தயிர் எல்லாத்துக்கும் அவர்கள் ஒன்று போட்டால் தி.மு.க. ஒன்று போட்டு விலையேற்றம் செய்கிறார்கள். பி.ஜே.பி.யை கண்டு பயம் தான் தி.மு.க.விற்கு உள்ளது. மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறியவர்கள் பாரத பிரதமர் சென்னை வந்ததும் ஒன்றிய பிரதமர் என்று கூறவில்லையே மேடையிலே இந்திய பிரதமர் என்று கூறினார்.
பாரத பிரதமரை ஒன்றிய பிரதமரே வருக என்று சொல்லியிருக்கலாம் அல்லவா.அ.தி.மு.க.விலிருந்து யாரு விலகினாலும் கவலை இல்லை அதிமுக ஒரு கடல் போன்ற கட்சி. நிதி அமைச்சர், வணிகவரித்துறை அமைச்சர் இரு அமைச்சர்களும் மதுரைக்கு ஏதாவது திட்டம் கொண்டு வந்திருக்கிறார்களா? எந்த திட்டமும் கொண்டு வரவில்லை.
ஜி.எஸ்.டி. பற்றி அறிவு ஜீவி போல் பேசிவிட்டு வாபஸ் வாங்கி விட்டார். இன்று நிதியமைச்சர் பற்றி நிறைய வதந்திகள் வருகிறது. அவர் கமிஷன் வாங்குவதில் தான் இருக்கிறார். ஒழிய தன்னுடைய துறையை சரியாக கவனிப்பதில்லை என்று வதந்தி வருகிறது. கமிஷன் வாங்குவதில் தான் பி.டி.ஆர் இருக்கிறார் என்று தி.மு.க. கட்சிக்காரர்ளே கூறுகிறார்கள்.மேயர் சரிவர செயல்படாமல் உள்ளார்.
மாநகராட்சியின் பல பகுதிகளில் தெரு விளக்குகள் 10 நாட்களுக்கு மேலாக எரியாமல் இருக்கிறது கேட்டால் ஒப்பந்தம் போடவில்லை என்கிறார்கள். ஒப்பந்தம் ஏன் போடவில்லை என்றால் பி.டி.ஆர். கூடுதலாக கமிஷன் கேட்கிறார் அதனால் தான் ஒப்பந்தம் போட லேட் ஆகிறது என கூறுகிறார்கள்.நிதிஅமைச்சரின் செயல்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சிகளில் வில்லாபுரம் ஜெ.ராஜா, எம்.எஸ்.பாண்டியன், அண்ணாத்துரை, பா.குமார், சோலைராஜா, சக்திவிநாயகர் பாண்டியன், கு.திரவியம், எம்.எஸ்.கே.மல்லன், தளபதி மாரியப்பன், திடீர்நகர் பாலா, நாசர், எம்.ஜி.ராமசந்திரன், சோலை இளவரசன், சோலை சிலம்பரசன், விளாங்குடி கே.ஆர்.சித்தன், பகுதிசெயலாளர் கணேசன், நீதிகாந்த், அஜய் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா
06 Jul 2025புதுடெல்லி : வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
06 Jul 2025சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி
06 Jul 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
டெக்சாஸ் வெள்ளம் - 51 பேர் பலி
06 Jul 2025டெக்சாஸ் : அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
30-ம் தேதி விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்: இஸ்ரோ
06 Jul 2025சென்னை: நிசார் செயற்கைக்கோளை வருகிற 30-ம் தேதி விண்ணில் ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்
-
குற்றச்சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி: ராகுல் காந்தி
06 Jul 2025பாட்னா: குற்றச் சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
புரூக்குக்கு ரிஷப் பதிலடி
06 Jul 2025இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 33 பேர் உயிரிழப்பு
06 Jul 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
-
பா.ம.க. நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
06 Jul 2025திண்டிவனம்: பா.ம.க. தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
06 Jul 2025சென்னை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
-
மேல்விஷாரத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
06 Jul 2025சென்னை: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நட
-
பிரேசில் சென்றார் பிரதமர் மோடி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.
-
அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிப்பேன்: வைபவ் சூர்யவன்ஷி
06 Jul 2025லண்டன்: அடுத்தப் போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன் என்று இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
-
நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்.டி.ஓ., மனைவி தற்கொலை
06 Jul 2025நாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன எக்ஸ் கணக்கு முடக்கம்: மத்திய அரசு விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கபட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
வரும் ஆகஸ்டு 15-ம் தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு
06 Jul 2025நெல்லை : தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.;
-
90-வது பிறந்த நாள்: புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் வாழ்த்து
06 Jul 2025புதுடெல்லி : தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
-
பாகிஸ்தானில் சோகம்: அடுக்குமாடி இடிந்து 27 பேர் பலி
06 Jul 2025லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
-
'அமெரிக்கா கட்சி' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்
06 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
-
கவாஸ்கரின் 54 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்
06 Jul 2025பர்மிங்காம்: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
-
பீகார் மாநிலத்தில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவு
06 Jul 2025புதுடில்லி : பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குற
-
தெலுங்கானாவில் இனி 10 மணி நேர வேலை: மாநில அரசு அறிவிப்பு
06 Jul 2025ஹைதராபாத் : தெலுங்கானாவில் வணிக நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.