எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : தமிழக அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகிய இருவரும் மதுரைக்கு என்ன செய்தார்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி எழுப்பிஉள்ளார்.
மதுரை பனகல்சாலையில் உள்ள மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் தி.மு.க., பா.ஜ.க., அ.ம.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியில் இருந்து 500 - க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அக்கட்சியில் இருந்து விலகி மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்புசெயலாளரும், மாநகர மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆளுங்கட்சியின் செயல்பாடு சரியில்லாததால் ஆளுங்கட்சியில் இருந்து விலகி நிறைய இளைஞர்கள் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். விடியலை தருவேன் என்று சொல்லிவிட்டு விடியா அரசாக இந்த அரசு இருக்கிறது. சொன்னதை எதுவுமே செய்யாததால் ஆளுங்கட்சியினுடைய நடவடிக்கை பிடிக்காமல் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். மேலும் ஆர்.எஸ்.எஸ். கட்சியிலிருந்து அ.தி.மு.க.விற்கு வந்திருக்கிறார்கள் என்றால் எங்களது கொள்கையை ஏற்று வந்திருக்கிறார்கள்.மேலும் மழை,வெள்ள பாதிப்பில் மக்களை ஆளும் அரசு கண்டு கொள்ளவில்லை.முல்லை பெரியார் அணையில் ஐந்து ஆறு முறை 142 அடியாக எங்களது ஆட்சி காலத்தில் உயர்த்தி இருக்கிறோம்.
இப்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கேரள அரசு முல்லை பெரியார் அணையில் ரூர் கேவ் என்ற முறையை கொண்டு வந்து மக்களுக்கு பாதுகாப்பற்ற முறையில் உள்ளது என உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.இந்த ரூர் கேவ் திட்டம் கொண்டு வந்தால் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அது மட்டுமல்ல நமக்கு குடிநீரும் பெரும் பிரச்சினை தான். தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே அண்டை மாநிலங்கள் பெரும் இடைஞ்சலை கொடுக்கிறார்கள்.
இந்த ரூட் கர்வ் திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடி முறையாக நடவடிக்கை எடுக்க வில்லை. பெருத்த மனக்குழப்பத்தில் இருக்கிறார்கள் மேலும் முல்லை -பெரியார் -வைகை பாசன விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மகளிர்க்கு இலவச பஸ் குறித்த கேள்விக்கு முதன்மைச் செயலாளர் கூறும் போது 8 கோடி பேர் பயனடைந்தார் அதே தவறு. முதன்மை செயலாளர் ஒரு தவறான செய்தியை சொல்லுகிறார்.கோ- பேக் மோடி என்று சொன்னவர்கள் இன்று வெல்கம் மோடி என்கிறார்களே என்ற கேள்விக்குஅமலாக்கத்துறை ரெய்டு பண்ணிடும் ஊழல் ஒழிப்புத்துறை ரெய்டு பண்ணிடும் என்ற பயம் தான்.முதல்வர் கோட் சூட் போட்டு லெஜன்ட் சரவணன் போல் வருகிறார் என்று கூறினேன் உடனே அதை மாற்றிவிட்டார்.
பாரத பிரதமர் கதர் வேஷ்டி சட்டை உடன் சென்னைக்கு வந்தார்.நாங்க எல்லாம் சொன்னதனால் முதல்வர் தப்பிச்சார் இல்லையென்றால் கோட் சூட் என போயிருந்தா ஐயோ அவ்வளவு தான் என்றார். ஜனாதிபதி தேர்தலில் பி.ஜே.பி.க்கு எதிர்த்து வாக்களித்தார்கள். வாக்களித்துவிட்டு வெற்றி பெற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்ததும் திமுக டி.ஆர். பாலு தலைமையில் முதலில் மரியாதை கொடுத்தார்கள். ஜி.எஸ்.டி.பற்றி நிர்மலா சீதாராமன் புட்டு புட்டு வைத்தார்கள்.
பால், வெண்ணை, தயிர் எல்லாத்துக்கும் அவர்கள் ஒன்று போட்டால் தி.மு.க. ஒன்று போட்டு விலையேற்றம் செய்கிறார்கள். பி.ஜே.பி.யை கண்டு பயம் தான் தி.மு.க.விற்கு உள்ளது. மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறியவர்கள் பாரத பிரதமர் சென்னை வந்ததும் ஒன்றிய பிரதமர் என்று கூறவில்லையே மேடையிலே இந்திய பிரதமர் என்று கூறினார்.
பாரத பிரதமரை ஒன்றிய பிரதமரே வருக என்று சொல்லியிருக்கலாம் அல்லவா.அ.தி.மு.க.விலிருந்து யாரு விலகினாலும் கவலை இல்லை அதிமுக ஒரு கடல் போன்ற கட்சி. நிதி அமைச்சர், வணிகவரித்துறை அமைச்சர் இரு அமைச்சர்களும் மதுரைக்கு ஏதாவது திட்டம் கொண்டு வந்திருக்கிறார்களா? எந்த திட்டமும் கொண்டு வரவில்லை.
ஜி.எஸ்.டி. பற்றி அறிவு ஜீவி போல் பேசிவிட்டு வாபஸ் வாங்கி விட்டார். இன்று நிதியமைச்சர் பற்றி நிறைய வதந்திகள் வருகிறது. அவர் கமிஷன் வாங்குவதில் தான் இருக்கிறார். ஒழிய தன்னுடைய துறையை சரியாக கவனிப்பதில்லை என்று வதந்தி வருகிறது. கமிஷன் வாங்குவதில் தான் பி.டி.ஆர் இருக்கிறார் என்று தி.மு.க. கட்சிக்காரர்ளே கூறுகிறார்கள்.மேயர் சரிவர செயல்படாமல் உள்ளார்.
மாநகராட்சியின் பல பகுதிகளில் தெரு விளக்குகள் 10 நாட்களுக்கு மேலாக எரியாமல் இருக்கிறது கேட்டால் ஒப்பந்தம் போடவில்லை என்கிறார்கள். ஒப்பந்தம் ஏன் போடவில்லை என்றால் பி.டி.ஆர். கூடுதலாக கமிஷன் கேட்கிறார் அதனால் தான் ஒப்பந்தம் போட லேட் ஆகிறது என கூறுகிறார்கள்.நிதிஅமைச்சரின் செயல்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சிகளில் வில்லாபுரம் ஜெ.ராஜா, எம்.எஸ்.பாண்டியன், அண்ணாத்துரை, பா.குமார், சோலைராஜா, சக்திவிநாயகர் பாண்டியன், கு.திரவியம், எம்.எஸ்.கே.மல்லன், தளபதி மாரியப்பன், திடீர்நகர் பாலா, நாசர், எம்.ஜி.ராமசந்திரன், சோலை இளவரசன், சோலை சிலம்பரசன், விளாங்குடி கே.ஆர்.சித்தன், பகுதிசெயலாளர் கணேசன், நீதிகாந்த், அஜய் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
ஊழல், மோசடிகளை தோலுரிக்கும் ஊடகவியலாளர்களுக்கு பாராட்டு : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
16 Nov 2025சென்னை : ஊடகம்தான் மக்களாட்சியை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஆற்றலாக விளங்க வேண்டும் என்றும், தோல்விகளையும் ஊழல்களையும் மோசடிகளையும் தோலுரிக்கும் ஊடகவியலாளர்கள் அனைவரையும
-
விவசாயப்பொருட்கள் மீதான பரஸ்பர வரியை ரத்து செய்த அதிபர் ட்ரம்ப்
16 Nov 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் 2-வது முறை ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட டொனால்டு ட்ரம்ப், பரஸ்பர வரி என்ற பெயரில், உலக நாடுகள் மீது அளவுக்கதிகமான வரிகளை வித
-
தமிழகம் முழுவதும் எஸ்.ஐ.ஆர்.-க்கு எதிராக த.வெ.க. ஆர்ப்பாட்டம்
16 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் த.வெ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-11-2025.
16 Nov 2025 -
பீகாரில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க இன்று தே.ஜ.கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் : நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராவாரா?
16 Nov 2025பாட்னா : பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்ற நிலையில் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான தே.ஜ.கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று
-
பா.ஜ.க.வுடன் த.வெ.க. கூட்டணியா? - துணை செயலாளர் நிர்மல் விளக்கம்
16 Nov 2025சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒருபோதும் த.வெ.க. இணையாது என்று கட்சியின் துணை செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத்தேர்வு கால அட்டவணை வெளியானது
16 Nov 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
-
நமது தேசத்தை பாதுகாப்பதில் பெண்கள் பின்தங்கியதில்லை : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்
16 Nov 2025லக்னோ : நாட்டையும், மதத்தையும் பாதுகாப்பதில் பெண்கள் பின்தங்கியதில்லை.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: காயமடைந்தவர்களிடம் 7-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் விசாரணை
16 Nov 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்த வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
-
சத்தீஷ்கர் மாநிலத்தில் இதுவரை 2 ஆயிரம் நக்சலைட்டுகள் சரண் : முதல்வர் விஷ்ணு தியோ சாய் தகவல்
16 Nov 2025ராய்ப்பூர் : சத்தீஷ்கரில் இதுவரை 2 ஆயிரம் நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்தார்.
-
10-வது முறையாக பீகார் முதல்வராக 19-ம் தேதி பதவியேற்கிறார் நிதிஷ்குமார்
16 Nov 2025பாட்னா : 10-வது முறையாக பீகார் முதல்வராக நிதிஷ்குமார் 19-ம் தேதி பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
டெல்லி செங்கோட்டையில் கார் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுப்பு
16 Nov 2025டெல்லி : டெல்லியில் கார் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து 9மிமீ தோட்டாக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சமூக நல விடுதியில் மாணவரை தாக்கிய சக மாணவர்கள் விடுதியில் இருந்து நீக்கம்: கலெக்டர் உத்தரவு
16 Nov 2025ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு சமூக நல விடுதியில் பட்டியலின மாணவர் மீது பிற சமூக மாணவர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
மெக்சிகோவில் அரசுக்கு எதிராக ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டம்
16 Nov 2025மெக்சிகோ-சிட்டி : மெக்சிகோ நாட்டில் அரசுக்கு, அதிபருக்கு எதிராக நடந்த ஜென்ஸீ இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது.
-
எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும் : ஆர்ப்பாட்டத்தில் புஸ்சி ஆனந்த் பேச்சு
16 Nov 2025சென்னை : வாக்காளர் தீவிர திருத்தத்தைஎதிர்த்து தமிழக வெற்றி கழகம் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நேற்று நடைபெற்றது.
-
சென்னை மாநகராட்சியில் 7 இடங்களில் செல்லப்பிராணிகளுக்கு சிறப்பு முகாம்
16 Nov 2025சென்னை : சென்னை மாநகராட்சியில் 7 இடங்களில் 2-வது வாரமாக வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி, மைக்ரோ சிப் பொருத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
-
யுனிசெப் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்
16 Nov 2025சென்னை : தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ்.
-
வரும் சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க.-காங். கூட்டணி உறுதி : செல்வபெருந்தகை திட்டவட்டம்
16 Nov 2025சென்னை : தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் தொடர்வதை காங்கிரஸ் கட்சி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. த.வெ.க. பக்கம் காங்கிரஸ் செல்லும் என கூறப்பட்ட நிலையில் தி.மு.க.
-
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்: பெண் டாக்டர் உட்பட மேலும் 3 பேர் கைது
16 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக காஷ்மீர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் டாக்டர் ஒருவர் உள்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
வங்கக்கடலில் புயல் சின்னம்: புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
16 Nov 2025புதுச்சேரி : புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
பீகார் தேர்தலுக்காக செலவிடப்பட்ட உலக வங்கியின் ரூ.14,000 கோடி கடன் : பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு
16 Nov 2025பாட்னா : உலக வங்கியின் ரூ.14,000 கோடி கடன் பீகார் தேர்தலுக்காக செலவிடப்பட்டது என ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார்.
-
கடலுக்கு செல்ல வேண்டாம் மீனவர்களுக்கு புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை
16 Nov 2025புதுச்சேரி : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் வருகிற 20-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்
-
அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பு: சபரிமலைக்கு பக்தர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
16 Nov 2025திருவனந்தபுரம் : அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
பயங்கரவாதம் குறித்த பேச்சு: உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல் ஆய்வாளர் பணிநீக்கம்
16 Nov 2025உத்தரப் பிரதேசம் : உத்தரப் பிரதேச மாநிலத்தில் பயங்கரவாதம் குறித்த பேசிய காவல் ஆய்வாளர் நரேந்திர குமாரின் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அவர் பணியில் இருந்து நீக்கப்ப
-
எஸ்.ஐ.ஆா். பணி தொடர்பான அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு
16 Nov 2025சென்னை : எஸ்.ஐ.ஆா். விவகாரத்தில் தி.மு.க.வை கண்டித்து அதி.மு.க. இன்று நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


