முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர்கள் பழனிவேல்தியாகராஜன், மூர்த்தி இருவரும் மதுரைக்கு என்ன செய்தார்கள்? - முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Sellur-Raju 2022 06 04

Source: provided

மதுரை : தமிழக அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகிய இருவரும் மதுரைக்கு என்ன செய்தார்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி எழுப்பிஉள்ளார்.

மதுரை பனகல்சாலையில் உள்ள மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் தி.மு.க., பா.ஜ.க., அ.ம.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியில் இருந்து 500 - க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அக்கட்சியில் இருந்து விலகி மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்புசெயலாளரும், மாநகர மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆளுங்கட்சியின் செயல்பாடு சரியில்லாததால் ஆளுங்கட்சியில் இருந்து விலகி நிறைய இளைஞர்கள் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். விடியலை தருவேன் என்று சொல்லிவிட்டு விடியா அரசாக இந்த அரசு இருக்கிறது. சொன்னதை எதுவுமே செய்யாததால் ஆளுங்கட்சியினுடைய நடவடிக்கை பிடிக்காமல் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். மேலும் ஆர்.எஸ்.எஸ். கட்சியிலிருந்து அ.தி.மு.க.விற்கு வந்திருக்கிறார்கள் என்றால் எங்களது கொள்கையை ஏற்று வந்திருக்கிறார்கள்.மேலும் மழை,வெள்ள பாதிப்பில் மக்களை ஆளும் அரசு கண்டு கொள்ளவில்லை.முல்லை பெரியார் அணையில் ஐந்து ஆறு முறை 142 அடியாக எங்களது ஆட்சி காலத்தில் உயர்த்தி இருக்கிறோம்.

இப்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கேரள அரசு  முல்லை பெரியார் அணையில் ரூர் கேவ் என்ற முறையை கொண்டு வந்து  மக்களுக்கு பாதுகாப்பற்ற முறையில் உள்ளது என உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.இந்த ரூர் கேவ் திட்டம் கொண்டு வந்தால் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அது மட்டுமல்ல நமக்கு குடிநீரும் பெரும் பிரச்சினை தான். தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே அண்டை மாநிலங்கள் பெரும் இடைஞ்சலை கொடுக்கிறார்கள்.

இந்த ரூட் கர்வ் திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடி முறையாக நடவடிக்கை எடுக்க வில்லை. பெருத்த மனக்குழப்பத்தில் இருக்கிறார்கள் மேலும் முல்லை -பெரியார் -வைகை பாசன விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மகளிர்க்கு இலவச பஸ் குறித்த கேள்விக்கு  முதன்மைச் செயலாளர் கூறும் போது 8 கோடி பேர் பயனடைந்தார் அதே தவறு. முதன்மை செயலாளர் ஒரு தவறான செய்தியை சொல்லுகிறார்.கோ- பேக் மோடி என்று சொன்னவர்கள் இன்று வெல்கம் மோடி என்கிறார்களே என்ற கேள்விக்குஅமலாக்கத்துறை ரெய்டு பண்ணிடும் ஊழல் ஒழிப்புத்துறை ரெய்டு பண்ணிடும் என்ற பயம் தான்.முதல்வர் கோட் சூட் போட்டு லெஜன்ட் சரவணன் போல் வருகிறார் என்று கூறினேன் உடனே அதை மாற்றிவிட்டார்.

பாரத பிரதமர் கதர் வேஷ்டி சட்டை உடன் சென்னைக்கு வந்தார்.நாங்க எல்லாம் சொன்னதனால் முதல்வர் தப்பிச்சார் இல்லையென்றால்  கோட் சூட் என போயிருந்தா ஐயோ அவ்வளவு தான் என்றார். ஜனாதிபதி தேர்தலில் பி.ஜே.பி.க்கு எதிர்த்து வாக்களித்தார்கள். வாக்களித்துவிட்டு வெற்றி பெற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்ததும் திமுக  டி.ஆர். பாலு தலைமையில் முதலில் மரியாதை கொடுத்தார்கள். ஜி.எஸ்.டி.பற்றி நிர்மலா சீதாராமன் புட்டு புட்டு வைத்தார்கள்.

பால், வெண்ணை, தயிர் எல்லாத்துக்கும் அவர்கள் ஒன்று போட்டால்  தி.மு.க. ஒன்று போட்டு விலையேற்றம் செய்கிறார்கள். பி.ஜே.பி.யை கண்டு   பயம் தான் தி.மு.க.விற்கு உள்ளது. மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறியவர்கள் பாரத பிரதமர் சென்னை வந்ததும் ஒன்றிய பிரதமர் என்று கூறவில்லையே மேடையிலே இந்திய பிரதமர் என்று கூறினார்.

பாரத பிரதமரை ஒன்றிய பிரதமரே வருக என்று  சொல்லியிருக்கலாம் அல்லவா.அ.தி.மு.க.விலிருந்து யாரு விலகினாலும் கவலை இல்லை அதிமுக ஒரு கடல் போன்ற கட்சி. நிதி அமைச்சர், வணிகவரித்துறை அமைச்சர் இரு அமைச்சர்களும் மதுரைக்கு ஏதாவது திட்டம் கொண்டு வந்திருக்கிறார்களா? எந்த திட்டமும் கொண்டு வரவில்லை.

ஜி.எஸ்.டி. பற்றி அறிவு ஜீவி போல் பேசிவிட்டு வாபஸ் வாங்கி விட்டார். இன்று நிதியமைச்சர் பற்றி நிறைய வதந்திகள் வருகிறது. அவர் கமிஷன் வாங்குவதில் தான் இருக்கிறார். ஒழிய தன்னுடைய துறையை சரியாக கவனிப்பதில்லை என்று வதந்தி வருகிறது. கமிஷன் வாங்குவதில் தான் பி.டி.ஆர் இருக்கிறார் என்று தி.மு.க. கட்சிக்காரர்ளே கூறுகிறார்கள்.மேயர் சரிவர செயல்படாமல் உள்ளார்.

மாநகராட்சியின் பல பகுதிகளில் தெரு விளக்குகள் 10 நாட்களுக்கு மேலாக எரியாமல் இருக்கிறது கேட்டால் ஒப்பந்தம் போடவில்லை என்கிறார்கள். ஒப்பந்தம் ஏன் போடவில்லை என்றால் பி.டி.ஆர். கூடுதலாக கமிஷன் கேட்கிறார் அதனால் தான் ஒப்பந்தம் போட லேட் ஆகிறது என கூறுகிறார்கள்.நிதிஅமைச்சரின் செயல்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சிகளில் வில்லாபுரம் ஜெ.ராஜா, எம்.எஸ்.பாண்டியன், அண்ணாத்துரை, பா.குமார், சோலைராஜா, சக்திவிநாயகர் பாண்டியன், கு.திரவியம், எம்.எஸ்.கே.மல்லன், தளபதி மாரியப்பன், திடீர்நகர் பாலா, நாசர், எம்.ஜி.ராமசந்திரன், சோலை இளவரசன், சோலை சிலம்பரசன், விளாங்குடி கே.ஆர்.சித்தன், பகுதிசெயலாளர் கணேசன், நீதிகாந்த், அஜய் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து