முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினசரி பாதிப்பு தொடர்ந்து 4-வது நாளாக சரிவு: இந்தியாவில் 4,129 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2022      இந்தியா
India-Corona 2022 03 15

இந்தியாவில் 4,129 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு தொடர்ந்து 4-வது நாளாக சரிந்த நிலையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 4,688 பேர் நேற்று முன்தினம் குணமாகி வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 298 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 22-ந்தேதி 5,443 ஆக இருந்தது. மறுநாள் 5,383, 24-ந்தேதி 4,912, நேற்று முன்தினம் 4,777 ஆக குறைந்த நிலையில், தொடர்ந்து 4-வது நாளாக நேற்றும் பாதிப்பு சரிந்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுசுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,129 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 69 ஆயிரத்து 655 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 4,688 பேர் நேற்று முன்தினம் குணமாகி வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 298 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை நேற்று முன்தினத்தை விட 579 குறைந்துள்ளது. அதாவது 43,415 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட 13 மரணங்கள் உள்பட மேலும் 20 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,28,530 ஆக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து