முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2022      தமிழகம்
Mettur dam 2022-08-02

மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் 47 நாட்களுக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரைக் கால்வாய்கள் மூலம் சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பாசனம் பெறும் 45,000 ஏக்கர் பதிவு பெற்ற ஆயக்கட்டு நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் பொருட்டு 16.07.2022 முதல் 137 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட ஏற்கெனவே ஆணையிடப்பட்டு அதன்படி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்பொழுது மேட்டூர் அணையிலிருந்து மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரைக் கால்வாய்களில் பாசனத்திற்கு 30.11.2022 முதல் 15.01.2023 வரை நீட்டிப்பு செய்து தண்ணீர் திறந்து விடுமாறு கோரிய மேட்டூர் வலது கரை (மேற்கு கரை) வாய்க்கால் விவசாயிகள் பாசன சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று, மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரைக் கால்வாய்கள் பாசனத்திற்கு 30.11.2022 முதல் 15.01.2023 முடிய நாளொன்றுக்கு 600 கனஅடி / வினாடி வீதம் மேலும் 47 நாட்களுக்கு கால நீட்டிப்பு செய்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலுள்ள 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து