முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேஷன் அட்டையில் ஒருவர் பெயர் இருந்தாலும் நிவாரண நிதி உண்டு : தமிழ்நாடு அரசு தகவல்

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2023      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : குடும்ப அட்டையில் ஒருவர் பெயர் இருந்தாலும் நிவாரண தொகை உண்டு என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதன் பின்னர், மிக்ஜம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் ரொக்கமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், சேதமடைந்த குடிசைகள், பயிர்கள், படகுகள், கால்நடைகள் உயிரிழப்பு போன்றவற்றுக்கும் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டது. இந்த நிவாரண நிதி, அந்தந்த பகுதி ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், குடும்ப அட்டையில் ஒருவர் பெயர் இருந்தாலும், அவர் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அவருக்கும் நிவாரண தொகை ரூ.6,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து