எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
திருவனந்தபுரம் : குமரி மாணவர் கொலை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட காதலி கிரீஷ்மாவுக்கு நாளை தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.
கேரள மாநிலம் பாற சாலை மூரியங்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன்ராஜ் (வயது23). இவர் குமரி மாவட்டம் நெய்யூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். அப்போது அவருக்கு, களியக்காவிளை அருகே உள்ள ராமவர்மன் சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதி ஷாரோன் ராஜூக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கேரளாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் 11 நாட்களுக்கு பிறகு இறந்தார்.
நல்ல உடல்நிலையில் இருந்த தனது மகன் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்திருப்பதால் தங்களின் மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக ஷாரோன்ராஜின் பெற்றோர், பாறசாலை போலீசில் புகார் செய்தனர். மேலும் அவனது காதலியான கிரீஷ்மா மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர்.
அதனடிப்படையில் பாறசாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். பின்பு இந்த வழக்கு திருவனந்தபுரம் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் கிரீஷ்மாவை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் காதலன் ஷாரோன் ராஜூக்கு கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.
கிரீஷ்மாவுக்கு அவரது குடும்பத்தினர் ராணுவ வீரர் ஒருவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். அதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த கிரீஷ்மா, பின்பு தனது பெற்றோரின் முடிவுக்கு சம்மதம் தெரிவித்தார். மேலும் அதுபற்றி காதலன் ஷாரோன்ராஜிடம் தெரிவித்துள்ளார். ஆனால் உயிருக்கு உயிராக காதலித்து வந்த ஷாரோன்ராஜ், அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
இதனால் தனது திருமணத்துக்கு இடைஞ்சலாக இருப்பார் என கருதிய கிரீஷ்மா, காதலனை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி தனது வீட்டுக்கு வரவழைத்து விஷம் கலந்த கசாயத்தை கொடுத்து காதலன் ஷாரோன்ராஜை கொலை செய்தார் என்பது தெரிய வந்தது. ஷாரோன்ராஜ் கொலை சம்பவம் கேரள மாநிலம் மற்றும் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காதலி கிரீஷ்மாவை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கிரீஷ்மாவின் தாய் சிந்து, தாய்மாமன் நிர்மல்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
மாணவர் ஷாரோன்ராஜ் கொலை வழக்கு விசாரணை நெய்யாற்றின்கரை கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. 2023-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி, கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் 95 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை கடந்த 3-ம் தேதி நிறைவடைந்தது.
இதையடுத்து இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் கிரீஷ்மா மற்றும் அவரது தாய்மாமன் நிர்மல்குமாரும் ஆகியோர் குற்றவாளி என்று நீதிபதி பஷீர் தீர்ப்பளித்தார். அதே நேரத்தில் கிரீஷ்மாவின் தாய் சிந்துவை விடுதலை செய்து உத்தரவிட்டார். கிரீஷ்மா மற்றும் அவரது தாய்மாமன் நிர்மல் குமாருக்கான தண்டனை நேற்று அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து தண்டனை குறித்த இறுதி வாதம் நேற்று நடந்தது.
காதலனை திட்டமிட்டு கொலை செய்த கிரீஷ்மாவுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. எம்.ஏ. இலக்கியத்தில் சிறப்பு தேர்ச்சி பெற்றிருப்பது, குறைந்த வயது, பெற்றோருக்கு ஒரே மகள், எதிர்காலம் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு தண்டனையில் அதிகபட்ச தளர்வு வழங்க வேண்டும் என்று கிரீஷ்மா தரப்பு வக்கீல்கள் வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பஷீர், கிரீஷ்மா மற்றும் அவரது தாய்மாமன் நிர்மல்குமார் ஆகியோருக்கான தண்டனை விவரம் நாளை (20-ம் தேதி) அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-02-2025.
14 Feb 2025 -
துரோகிகள் குறித்த பேச்சுக்கு செங்கோட்டையன் விளக்கம்
14 Feb 2025ஈரோடு : துரோகம் செய்தார்கள் என பேசியது அந்தியூர் தொகுதிக்கு மட்டுமே பொருந்தும் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.
-
அமெரிக்காவில் 2 புதிய இந்திய தூதரகங்கள் பிரதமர் மோடி அறிவிப்பு
14 Feb 2025வாஷிங்டன்:இந்திய - அமெரிக்க மக்களுக்கு இடையிலான மெகா உணர்வு நமது இலக்குகளுக்கு புதிய பரிமாணத்தையும், உயர்ந்த நோக்கத்தையும் அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவி
-
பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு
14 Feb 2025இஸ்லாமாபாத் : நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சீன எல்லை விவகாரத்தில் ட்ரம்ப்பின் மத்தியஸ்த முயற்சி: நாசூக்காக தவிர்த்தது இந்தியா
14 Feb 2025வாஷிங்டன் : சீனா உடனான எல்லை பிரச்சினையில் இந்தியாவுக்கு உதவ தயார் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், அந்த உதவியை இந்தியா தவிர்த்துள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
14 Feb 2025சென்னை : சென்னையில் நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்து விற்பனையானது.
-
சென்னையில் வேல் யாத்திரை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு
14 Feb 2025சென்னை : சென்னையில் வேல் யாத்திரை நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதி மறுத்துள்ளது.
-
மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை: அரசு மீது ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
14 Feb 2025சென்னை : மக்களுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காத தி.மு.க. அரசு என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
-
மேற்குவங்கத்தில் ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டத்திற்கு அனுமதி : உயர் நீதிமன்றம் உத்தரவு
14 Feb 2025கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் பர்த்வான் மாவட்டத்தில் வரும் 16-ம் தேதி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்துள்ளது. இக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.
-
த.வெ.க. தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு : மத்திய அரசு உத்தரவு
14 Feb 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
-
அ.தி.மு.க. வாக்கு சதவீதம் குறைந்ததா? - முன்னாள் அமைச்சர் சிவபதி மறுப்பு
14 Feb 2025சென்னை : அ.தி.மு.க. பின்தங்கியதாக கூறப்படும் கருத்துக்கணிப்புகளுக்கு முன்னாள் அமைச்சர் சிவபதி மறுப்பு தெரிவித்துள்ளார்,
-
6 மாத காலம் அமைதியாக இருங்கள்: ஓ.பி.எஸ்.,சை கட்சியில் சேர்க்க ராஜன் செல்லப்பா நிபந்தனை
14 Feb 2025மதுரை: ஆறு மாத காலம் அ.தி.மு.க.-வுக்கு எந்தவித இடையூறும் செய்யாமல் அமைதியாக இருந்தால் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து நடவடிக்கை எடுப்போம்
-
புல்வாமா தாக்குதல் தினம்: உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர், உள்துறை அமைச்சர் புகழாரம்
14 Feb 2025புதுடெல்லி: கடந்த 2019-ம் ஆண்டு இதே நாளில் (பிப்.14) ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப்.
-
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் இன்று விமானம் மூலம் தாயகம் திரும்புகின்றனர்
14 Feb 2025புதுடெல்லி : அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் இன்று விமானம் மூலம் இந்தியாவுக்கு வருகின்றனர்.
-
வங்கதேசம் குறித்த கவலையை ட்ரம்ப்புடன் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி
14 Feb 2025வாஷிங்டன்: வங்கதேச நிலைமை குறித்த தனது கவலையை பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் பகிர்ந்து கொண்டார் என இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது
-
இந்தியா -அமெரிக்கா இடையே வர்த்தகத்தை 2030-க்குள் 500 பி.டாலராக அதிகரிக்க இலக்கு நிர்ணயம் பிரதமர் மோடி- அதிபர் டிரம்ப் சந்திப்பில் முடிவு
14 Feb 2025வாஷிங்டன்: பிரதமர் மோடி-அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பில், வரும் 2030-க்குள் இருதரப்பு வர்த்தகத்தை ரூ.
-
இந்தியாவிற்கு எப்-35 ரக விமானங்களை வழங்குகிறது அமெரிக்கா: டிரம்ப் தகவல்
14 Feb 2025வாஷிங்டன் : அமெரிக்கா இந்தியாவிற்கு எப் 35 ரக ஜெட் விமானங்களை வழங்கும் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
உக்ரைன் அணு உலை மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்
14 Feb 2025கீவ் : ரஷியா டிரோன் தாக்குதலில் உக்ரைன் அணு உலையின் மேற்கூரை தீப்பற்றி எரிந்தது உடனே மீட்புக்குழுவினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
-
தமிழக மீனவர்கள் பிரச்சினை: ராமேசுவரத்தில் தி.மு.க. நாளை ஆர்ப்பாட்டம்
14 Feb 2025ராமேசுவரம் : இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி தி.மு.க. சார்பாக நாளை (பிப்.16-ம் தேதி), ர
-
இந்தியா - அமெரிக்கா உறவு நன்றாக உள்ளது : அதிபர் டொனால்டு டிரம்ப் கருத்து
14 Feb 2025வாஷிங்டன் : இந்தியா - அமெரிக்கா உறவு நன்றாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
மார்ச் 6-ம் தேதி செட் தகுதித்தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
14 Feb 2025சென்னை : கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான செட் தகுதித்தேர்வு மார்ச் 6 முதல் 9-ம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
-
நாங்கள் இல்லாமல் அமைதி ஒப்பந்தமா? - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேள்வி
14 Feb 2025பெர்லின் : புதினை டிரம்ப் சந்திப்பதற்கு முன்னர், டிரம்ப்பை சந்திக்க நான் விரும்புகிறேன் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
-
மணிப்பூரில் 5 பயங்கரவாதிகள் கைது
14 Feb 2025இம்பால் : மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 5 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.
-
திருமணத்திற்கு செல்வதில் தகராறு: மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
14 Feb 2025லக்னோ : திருமணத்திற்கு செல்வதில் ஏற்பட்ட தகராறில் கணவன்- மனவைிக்கு இடையே சண்டை ஏற்பட்டது. இதில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
-
பெங்களூரில் விமான சாகச நிகழ்ச்சி நிறைவு
14 Feb 2025பெங்களூரு : பெங்களூரில் ஏரோ இந்தியா 2025 என்ற விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.