எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இஸ்தான்புல், துருக்கியில் பயங்கரவாத வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2014 ஆண்டு முதல் துருக்கி அதிபராக தாயூப் எர்டோகன் செயல்பட்டு வருகிறார். நீதி மற்றும் வளர்ச்சி கட்சியை சேர்ந்த எர்டோகன் 1994 முதல் 1998 வரை இஸ்தான்புல் மேயராக செயல்பட்டுள்ளார். மேலும், 2003 முதல் 2014 வரை துருக்கி பிரதமராகவும் செயல்பட்டுள்ளார்.
இதனிடையே, எர்டோகன் சர்வாதிகாரிபோல் செயல்படுவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது. மேலும், துருக்கியில் எதிர்க்கட்சியின் செயல்பாடுகளை முடக்கும் நடவடிக்கையில் எர்டோகன் ஈடுபட்டு வருகிறார். அதேவேளை, துருக்கி எதிர்க்கட்சியான ஜனநாயக மக்கள் கட்சியின் முக்கிய தலைவராக எக்ரிம் இமாமொக்லு திகழ்கிறார். இவர் இஸ்தான்புல் மேயராக செயல்பட்டு வருகிறார்.
2028ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் எர்டோகனை வீழ்த்தி எக்ரிம் இமாமொக்லு வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளாராக இமாமொக்லு நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இமாமொக்லுவை கடந்த புதன்கிழமை போலீசார் கைது செய்தனர். ஊழல் , பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக இமாமொக்லு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


