முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு 4-வது வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூன் 2025      விளையாட்டு
Hoki INDIA 2024-09-11

Source: provided

அர்ஜென்டினா, இந்தியா, சிலி, உருகுவே ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்த ஜூனியர் மகளிர் அணிகள் இடையிலான சர்வதேச ஆக்கி போட்டி அர்ஜென்டினாவில் உள்ள ரோசாரியோ நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் 4 ஆட்டங்களில் 3 வெற்றி மற்றும் ஒரு தோல்வி பெற்றிருந்தது. இதனையடுத்து இந்தியா தனது 5-வது ஆட்டத்தில் உருகுவே அணியுடன் நேற்று மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரம் முடிவில் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. 

இந்தியா தரப்பில் ஹினா மற்றும் லால்ரின்புய் தலா ஒரு கோல் அடித்தனர். உருகுவே தரப்பில் இனெஸ் டி போசாடாஸ் மற்றும் மிலாக்ரோஸ் சீகல் தலா ஒரு கோல் அடித்தனர். இரு அணிகளும் சமநிலை வகித்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தி 4-வது வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது. 

___________________________________________________________________________

ஆர்.சி.பி.க்கு அதிசயம் நடக்குமா?

கோப்பையே வெல்லாத கால்பந்து அணிகள் எல்லாம் இந்த சீசனில் வெல்லும்போது ஆர்.சி.பி.யாலும் வெல்ல முடியுமென அதன் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த சீசனில் கால்பந்து உலகில் பல அணிகள் வரலாற்றுச் சாதனையாக கோப்பைகளை வென்று அசத்தி வருகின்றன. குறிப்பாக டாட்டன்ஹம் ஹாட்ஸ்ஃபர், நியூகேஸ்டல் யுனைடெட், போலோக்னா, கிரிஸ்டல் பேலஸ், பிஎஸ்ஜி கோப்பைகளை வென்றுள்ளன. நேற்று பிஎஸ்ஜி அணி தனது முதல் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது.

50,60 ஆண்டுகளுக்குப் பிறகெல்லாம் கோப்பையை வென்று அசத்தியிருக்கும் கால்பந்து அணிகள் போலவே 18 ஆண்டுகளாக ஐ.பி.எல். தொடரிலும் ஆர்.சி.பி., பஞ்சாப் அணிகள் போராடி வருகின்றன. இந்நிலையில், ஆர்.சி.பி. ரசிகர்கள் இதேபோல் தங்களது அணியும் கோப்பையை வெல்லுமா என்ற ஆவலுடன் இருக்கிறார்கள்.

___________________________________________________________________________

லியோனஸ் மெஸ்ஸி புதிய சாதனை  

 ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (37) அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்காக கடந்த 2023 முதல் விளையாடி வருகிறார். இன்றைய எம்எல்எஸ் தொடரில் கொலம்பஸ் அணிக்கு எதிரான போட்டியில் 2 கோல்கள் (15’, 24’) 2 அசிஸ்ட்ஸ் செய்து ஆட்ட நாயகன் விருது வென்றார். இதன் மூலம் எம்எல்எஸ் தொடரில் அதிக கோல்கள் (31) அடித்த இன்டர் மியாமி வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இதற்கு முன்பாக 29 கோல்களுடன் கோன்சலோ ஹிகுயின் 70 போட்டிகளில் அடித்திருந்தார். மெஸ்ஸி அதனை 38 போட்டிகளில் முறியடித்துள்ளார். இன்டர் மியாமி அணிக்காக மொத்த போட்டிகளிலும் மெஸ்ஸி 59 போட்டிகளில் 49 கோல்களும், 23 அசிஸ்ட்ஸும் செய்து அசத்தியுள்ளார். கோல்கள் மட்டுமில்லாமல் அசிஸ்ட்ஸிலும் மெஸ்ஸியே முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் இன்டர் மியாமி அணி 5-1 என அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக இன்டர் மியாமி புள்ளிப் பட்டியலில் 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

___________________________________________________________________________

முகதுரேசா ஷாட்லூயி சாதனை

புரோ கபடி லீக் சீசன் 12 வீரர்களுக்கான ஏலம் மும்பையில் (மே 31) நேற்று முன்தினம் தொடங்கியது.  ஏலத்தின் தொடக்க நாளிலேயே 10 வீரர்கள் ரூ.1 கோடியை கடந்த விலையில் வாங்கப்பட்டனர், இது கடந்த சீசனின் ஐந்து கோடீஸ்வரர்களைவிட இரட்டிப்பு எண்ணிக்கையாகும். இரு முறை சாம்பியனாகவும், சீசன் 11-ன் அதிக மதிப்புடடைய வீரராகவும் திகழ்ந்த முகதுரேசா ஷாட்லூயி ரூ.2.23 கோடிக்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இதன் மூலம், தொடர்ந்து மூன்று சீசன்களிலும் ரூ.2 கோடிக்கு மேலான விலைக்கு வாங்கப்பட்ட முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். 

சீசன் 11-ல் சிறந்த ரைடராக திகழ்ந்த தேவாங்க் தலால், பெங்கால் வாரியர்ஸ் அணியால் ரூ.2.205 கோடிக்கு வாங்கப்பட்டு, புரோ கபடி லீக் வரலாற்றில் ஐந்தாவது உயர்ந்த விலைக்கு ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்ற முக்கிய வீரர்கள்: அர்ஜுன் தேஷ்வால் (தமிழ் தலைவாஸ்) - ரூ.1.40 கோடி, யோகேஷ் தஹியா (பெங்களூரு புல்ஸ்) - ரூ.1.25 கோடி, நவீன் குமார் (ஹரியானா ஸ்டீலர்ஸ்) - ரூ.1.20 கோடி, குமன் சிங் (UP யோத்தாஸ்) - ரூ.1.73 கோடி, சச்சின் தன்வார் (புனேரி பல்டன்) - ரூ.1.58 கோடி, நிதின் குமார் (ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்) - ரூ.1.2 கோடி.

___________________________________________________________________________

வீல்சேரில் ஏபிடி வில்லியர்ஸ் 

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ். இவரது அதிரடி ஆட்டத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பு உண்டு.  இவர், 2018-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். இதனையடுத்து ஐ.பி.எல். போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். அதிலும் கடந்த 2021-ம் ஆண்டோடு விடை பெற்றார்.  ஐ.பி.எல். தொடரில் விளையாடியதன் மூலம் இந்தியாவில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

இந்நிலையில் தற்போது இந்தியா வந்துள்ள ஏபிடி வில்லியர்ஸ், மும்பை மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியுடன் வீல் சேரில் அமர்ந்து கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்துள்ளார். வீல்சேரில் அமர்ந்து தன்னுடைய ஸ்டைலில் அதிரடியான ஷாட்டுகளை அடித்த அசத்தினார். அத்துடன் வீல்சேரில் அமர்ந்த கொண்டே சிங்கிள் ரன்களும் எடுத்தார். இது அவருடன் இணைந்து விளையாடிய மாற்றுத்திறனாளி வீரர்களை உற்சாகப்படுத்தியதுடன், சுற்றியிருந்த ரசிகர்களையும் மகிழ்வித்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து