எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
அர்ஜென்டினா, இந்தியா, சிலி, உருகுவே ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்த ஜூனியர் மகளிர் அணிகள் இடையிலான சர்வதேச ஆக்கி போட்டி அர்ஜென்டினாவில் உள்ள ரோசாரியோ நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் 4 ஆட்டங்களில் 3 வெற்றி மற்றும் ஒரு தோல்வி பெற்றிருந்தது. இதனையடுத்து இந்தியா தனது 5-வது ஆட்டத்தில் உருகுவே அணியுடன் நேற்று மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரம் முடிவில் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
இந்தியா தரப்பில் ஹினா மற்றும் லால்ரின்புய் தலா ஒரு கோல் அடித்தனர். உருகுவே தரப்பில் இனெஸ் டி போசாடாஸ் மற்றும் மிலாக்ரோஸ் சீகல் தலா ஒரு கோல் அடித்தனர். இரு அணிகளும் சமநிலை வகித்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தி 4-வது வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
___________________________________________________________________________
ஆர்.சி.பி.க்கு அதிசயம் நடக்குமா?
கோப்பையே வெல்லாத கால்பந்து அணிகள் எல்லாம் இந்த சீசனில் வெல்லும்போது ஆர்.சி.பி.யாலும் வெல்ல முடியுமென அதன் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த சீசனில் கால்பந்து உலகில் பல அணிகள் வரலாற்றுச் சாதனையாக கோப்பைகளை வென்று அசத்தி வருகின்றன. குறிப்பாக டாட்டன்ஹம் ஹாட்ஸ்ஃபர், நியூகேஸ்டல் யுனைடெட், போலோக்னா, கிரிஸ்டல் பேலஸ், பிஎஸ்ஜி கோப்பைகளை வென்றுள்ளன. நேற்று பிஎஸ்ஜி அணி தனது முதல் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது.
50,60 ஆண்டுகளுக்குப் பிறகெல்லாம் கோப்பையை வென்று அசத்தியிருக்கும் கால்பந்து அணிகள் போலவே 18 ஆண்டுகளாக ஐ.பி.எல். தொடரிலும் ஆர்.சி.பி., பஞ்சாப் அணிகள் போராடி வருகின்றன. இந்நிலையில், ஆர்.சி.பி. ரசிகர்கள் இதேபோல் தங்களது அணியும் கோப்பையை வெல்லுமா என்ற ஆவலுடன் இருக்கிறார்கள்.
___________________________________________________________________________
லியோனஸ் மெஸ்ஸி புதிய சாதனை
ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (37) அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்காக கடந்த 2023 முதல் விளையாடி வருகிறார். இன்றைய எம்எல்எஸ் தொடரில் கொலம்பஸ் அணிக்கு எதிரான போட்டியில் 2 கோல்கள் (15’, 24’) 2 அசிஸ்ட்ஸ் செய்து ஆட்ட நாயகன் விருது வென்றார். இதன் மூலம் எம்எல்எஸ் தொடரில் அதிக கோல்கள் (31) அடித்த இன்டர் மியாமி வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இதற்கு முன்பாக 29 கோல்களுடன் கோன்சலோ ஹிகுயின் 70 போட்டிகளில் அடித்திருந்தார். மெஸ்ஸி அதனை 38 போட்டிகளில் முறியடித்துள்ளார். இன்டர் மியாமி அணிக்காக மொத்த போட்டிகளிலும் மெஸ்ஸி 59 போட்டிகளில் 49 கோல்களும், 23 அசிஸ்ட்ஸும் செய்து அசத்தியுள்ளார். கோல்கள் மட்டுமில்லாமல் அசிஸ்ட்ஸிலும் மெஸ்ஸியே முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் இன்டர் மியாமி அணி 5-1 என அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக இன்டர் மியாமி புள்ளிப் பட்டியலில் 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
___________________________________________________________________________
முகதுரேசா ஷாட்லூயி சாதனை
புரோ கபடி லீக் சீசன் 12 வீரர்களுக்கான ஏலம் மும்பையில் (மே 31) நேற்று முன்தினம் தொடங்கியது. ஏலத்தின் தொடக்க நாளிலேயே 10 வீரர்கள் ரூ.1 கோடியை கடந்த விலையில் வாங்கப்பட்டனர், இது கடந்த சீசனின் ஐந்து கோடீஸ்வரர்களைவிட இரட்டிப்பு எண்ணிக்கையாகும். இரு முறை சாம்பியனாகவும், சீசன் 11-ன் அதிக மதிப்புடடைய வீரராகவும் திகழ்ந்த முகதுரேசா ஷாட்லூயி ரூ.2.23 கோடிக்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இதன் மூலம், தொடர்ந்து மூன்று சீசன்களிலும் ரூ.2 கோடிக்கு மேலான விலைக்கு வாங்கப்பட்ட முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
சீசன் 11-ல் சிறந்த ரைடராக திகழ்ந்த தேவாங்க் தலால், பெங்கால் வாரியர்ஸ் அணியால் ரூ.2.205 கோடிக்கு வாங்கப்பட்டு, புரோ கபடி லீக் வரலாற்றில் ஐந்தாவது உயர்ந்த விலைக்கு ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்ற முக்கிய வீரர்கள்: அர்ஜுன் தேஷ்வால் (தமிழ் தலைவாஸ்) - ரூ.1.40 கோடி, யோகேஷ் தஹியா (பெங்களூரு புல்ஸ்) - ரூ.1.25 கோடி, நவீன் குமார் (ஹரியானா ஸ்டீலர்ஸ்) - ரூ.1.20 கோடி, குமன் சிங் (UP யோத்தாஸ்) - ரூ.1.73 கோடி, சச்சின் தன்வார் (புனேரி பல்டன்) - ரூ.1.58 கோடி, நிதின் குமார் (ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்) - ரூ.1.2 கோடி.
___________________________________________________________________________
வீல்சேரில் ஏபிடி வில்லியர்ஸ்
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ். இவரது அதிரடி ஆட்டத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பு உண்டு. இவர், 2018-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். இதனையடுத்து ஐ.பி.எல். போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். அதிலும் கடந்த 2021-ம் ஆண்டோடு விடை பெற்றார். ஐ.பி.எல். தொடரில் விளையாடியதன் மூலம் இந்தியாவில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
இந்நிலையில் தற்போது இந்தியா வந்துள்ள ஏபிடி வில்லியர்ஸ், மும்பை மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியுடன் வீல் சேரில் அமர்ந்து கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்துள்ளார். வீல்சேரில் அமர்ந்து தன்னுடைய ஸ்டைலில் அதிரடியான ஷாட்டுகளை அடித்த அசத்தினார். அத்துடன் வீல்சேரில் அமர்ந்த கொண்டே சிங்கிள் ரன்களும் எடுத்தார். இது அவருடன் இணைந்து விளையாடிய மாற்றுத்திறனாளி வீரர்களை உற்சாகப்படுத்தியதுடன், சுற்றியிருந்த ரசிகர்களையும் மகிழ்வித்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 5 days ago |
-
6 ஆண்டுகளில் முதன்முறையாக கனடா ஜி-7 மாநாட்டை புறக்கணிக்க பிரதமர் நரேந்திரமோடி திடீர் முடிவு?
02 Jun 2025புதுடில்லி, ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக, கனடாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி, பங்கேற்காமல் புறக்கணிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
ஜோ ரூட் அபார சதம்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை வென்றது இங்கி.,
02 Jun 2025கார்டிப் : ஜோ ரூட் அபார சதத்தால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இங்கிலாந்து தொடரை கைப்பற்றியது.
சுற்றுப்பயணம்...
-
போரை முடிவுக்குக் கொண்டுவர ராஜதந்திரத்துடன் விளையாடுவதை ரஷ்யா நிறுத்த வேண்டும்: ஜெலன்ஸ்கி
02 Jun 2025கீவ், ரஷ்யா ராஜதந்திரத்துடன் விளையாடுவதை நிறுத்திவிட்டு போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
கன்னடம் குறித்த கமல் பேச்சு: இதை அரசியல் பிரச்சினையாக்க வேண்டாம்: டி.கே.சிவகுமார் கருத்து
02 Jun 2025பெங்களூரு, கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துகள் குறித்து பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.
-
உக்ரைன் ராணுவம் ட்ரோன் தாக்குதல்: 40 ரஷ்யா போர் விமானங்கள் அழிப்பு
02 Jun 2025கீவ் : உக்ரைன் ராணுவத்தின் ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் அழிக்கப்பட்டது.
-
காய்ச்சலால் பாதிப்பு: துணை முதல்வர் உதயநிதி ஓய்வெடுக்க அறிவுறுத்தல்
02 Jun 2025சென்னை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் சில நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர் அறிவுறுத்தி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்து
-
பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் சேவை: தமிழக அரசு ஒப்புதல்
02 Jun 2025சென்னை, பூந்தமல்லி - பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தட திட்டத்தை இருகட்டங்களாக செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
இம்மாதம் வெளியாகும் கண்ணப்பா திரைப்படம்
02 Jun 2025தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்ணு மஞ்சு எழுத்து, தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டமான படைப்பான ‘கண்ணப்பா’
-
சென்னையில் கல்வி உபகரணப் பொருட்களை மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
02 Jun 2025சென்னை : புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
02 Jun 2025சென்னை, தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
அரியானாவில் சாலை விபத்து - 4 பேர் பலி
02 Jun 2025சண்டிகர் : அரியானாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
அமெரிக்காவில் நடந்த இஸ்ரேல் ஆதரவு பேரணியில் மக்கள் மீது தீ வைத்து எரிக்க முயற்சி
02 Jun 2025நியூயார்க் : அமெரிக்காவின் கொலராடோவில், காசாவில் ஹமாஸ் பிடித்து வைத்துள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை நினைவுகூர கூடியிருந்த மக்கள் குழு மீது ஒரு நபர் திரவத்தை வீசி, அவர்கள் ம
-
48 மணி நேரத்தில் தயாரான முழு திரைப்படம்
02 Jun 2025ஒரு திரைப்படத்தை எடுப்பதே மிக சவாலான விசயம் என்ற நிலையில், அதை வெளியிடுவது என்பது அதை விடவும் சவாலாக இருக்கும் தற்போதைய காலக்கட்டத்தில், 48 மணி நேரத்தில், ஒரு படத்தின்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-06-2025.
02 Jun 2025 -
யார் அந்த சார்? என்ற கேள்வியை எழுப்புவது நீதிமன்ற அவமதிப்பு: வழக்குரைஞர் மேரி ஜெயந்தி தகவல்
02 Jun 2025சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டதால், யார் அந்த சார்?
-
இந்தோனசியாவில் ஏற்பட்ட கல் குவாரி விபத்தில் உயிரிழப்பு 19 ஆனது
02 Jun 2025ஜகார்த்தா : இந்தோனசியாவில் ஏற்பட்ட கல் குவாரி விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புபணிகள் 4/வது நாளாக தொடக்கம்.
-
திரிபுராவில் ரூ.7 கோடி மதிப்பில் போதை பொருட்கள் பறிமுதல்
02 Jun 2025அகர்தலா : திரிபுராவில் 7 கோடி ரூபாய் மதிப்பில் போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
-
இளையராஜா பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
02 Jun 2025சென்னை, இளையராஜா பிறந்தநாளை யொட்டி, அவருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ஒரு காபிக்கு அழைத்து பாக். உடனான பிரச்சினையை தீர்த்துவிட முடியாது: கனிமொழி எம்.பி. பேச்சு
02 Jun 2025மாட்ரிட், பாகிஸ்தானை ஒரு காபிக்கு அழைத்து மோதல்களை முடித்து வைத்து, பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்ற தவறான கருத்துக்களைக் கொண்ட நாடுகளையும் நாங்கள் தொடர்பு கொண்டுள்
-
அசாமில் கனமழை: பொதுமக்களை நேரில் சந்தித்து முதல்வர் பிஸ்வா சர்மா ஆறுதல்
02 Jun 2025குவகாத்தி, அசாமில் கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
-
மனிதர்கள்’ திரை விமர்சனம்
02 Jun 20256 நண்பர்கள் சேர்ந்து மது அருந்துகிறார்கள். திடீரென்று அவர்களுக்கிடையே மோதல் ஏற்படுகிறது. அதில் ஒருவர் எதிர்பாரத விதமாக இறந்து விடுகிறார்.
-
சென்னை மெட்ரோ ரயில்களில் மே மாதத்தில் 89.09 லட்சம் பேர் பயணம்
02 Jun 2025சென்னை, கடந்த மே மாதத்தில் 89.09 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நாடு முழுவதும் 4 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 4 பேர் பலி
02 Jun 2025புதுடெல்லி, இந்தியாவில் நேற்று காலை நிலவரப்படி, 3,961 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
மிகப் பெரிய தருணங்களில் அமைதியாக இருப்பதில்தான் கவனம்: ஷ்ரேயாஸ் ஐயர்
02 Jun 2025அகமதாபாத் : மிகப் பெரிய தருணங்களில் அமைதியாக இருப்பதில் கவனம் செலுத்தினேன் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
-
தமிழர்களின் பெருமைமிகு அடையாளம்: இளையராஜாவுக்கு முதலவர் ஸ்டாலின் வாழ்த்து
02 Jun 2025சென்னை, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நேற்று (ஜூன் 2) பிறந்தநாள். நேற்று காலை முதலே அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.