Idhayam Matrimony

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தூத்துக்குடியில் தொழில்துறை மாநாடு: 32,554 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான 41 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ரூ.2,530 கோடி மதிப்பில் 5 புதிய திட்டங்களும் தொடக்கம்

திங்கட்கிழமை, 4 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

துாத்துக்குடி: முதலீட்டாளர்களை ஈர்க்க தூத்துக்குடியில் நடந்த தொழில் துறை மாநாட்டில், ரூ.32,554 கோடி முதலீடு செய்வதற்கான 41 புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. மேலும் ரூ.2,530 கோடி மதிப்பிலான 5 புதிய திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

41 நிறுவனங்களுடன்... 

துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சாலையில் உள்ள மாணிக்கம் மஹாலில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் அவர் கலந்து கொண்டார். மாநாட்டில் தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் 32,444 கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும். 49,845 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், நிகழ்ச்சியின்போது 3,600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 2,530 கோடி ரூபாய் மதிப்பில் 5 புதிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

ரூ.16,000 கோடியில்... 

துாத்துக்குடி மாவட்டம், சில்லாநத்தம் சிப் காட் பகுதியில், வியட்நாம் நாட்டின் வின்பாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட்டது. தூத்துக்குடியில் நேற்று (ஆகஸ்ட் 04) ரூ.16,000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட கார் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். தூத்துக்குடி வின்பாஸ்ட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் காரில் கையெழுத்திட்டு விற்பனையையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆலையில் முதற்கட்டமாக, ஆண்டுக்கு 50 ஆயிரம் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. 

40 சதவீதம் உற்பத்தி...

இந்த தொழிற்சாலை திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவில் மின் வாகன உற்பத்தியின் தலைநகர் தமிழகம் தான் என்று நெஞ்சை நிமிர்த்தி நான் சொல்வேன். நாட்டின் ஒட்டுமொத்த மின்சார வாகனங்கள் உற்பத்தியில் 40 சதவீதம் தமிழகத்தில் தான் உற்பத்தி ஆகிறது. வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் ஆலைக்கு நான் அடிக்கல் நாட்டிய 17 மாதங்களில் தமிழகத்தில் நிறுவனத்தை தொடங்கி பெருமை சேர்த்துள்ளார்கள். வியட்நாம் என்றாலே வியப்பு தான். தென் மாவட்டங்கள் தொழில் பகுதியாக உருவாகும். 

பெண்களுக்கு வேலை...

முதல்கட்டமாக, இதுவரை ஆயிரத்து 300 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆண்டுக்கு 50 ஆயிரம் மின் வாகன எஸ்.யு.வி. உற்பத்தியாக இருக்கிறது. தெற்காசியாவிலேயே, வியட்நாமிற்கு வெளியில், இந்த நிறுவனம் தொடங்கியிருக்கும் முதல் மின்வாகன உற்பத்தித் திட்டம் இதுதான்! தமிழ்நாட்டில், அதுவும் நம்முடைய தூத்துக்குடியில் இருக்கும் இந்த ஆலைதான், இந்தியாவிலேயே முழு மின்சார பயணிகள் வாகன உற்பத்தி திட்டம்! இதனால், இந்த வட்டாரத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து