எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்கள் நேற்று சந்தித்து பேசினர். அப்போது சாதி ஆணவப்படுகொலைகளைத் தடுக்கும் வகையில் தனிச்சட்டம் இயற்றப்பட கோரிக்கை வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பாஜக, காங்கிரஸ், தே.மு.தி.க. விசிக, மதி.மு.க., பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன. இதில், தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்தனர். இதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் ஆகியோர் சந்தித்தனர்.
அப்போது தமிழ்நாட்டில் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் வகையில் தனிச்சட்டம் இயற்றப்பட கோரி வைக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் முத்தரசன், சண்முகம், திருமாவளவன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர் பி.சண்முகம், " 3 கட்சிகள் சார்பில் முதல்வர் சந்தித்து சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயக்க கோரிக்கை வைத்தோம். தனி சட்டத்திற்கான தேவையை முதல்-அமைச்சரிடம் எடுத்துரைத்தோம். அதனை முதல்-அமைச்சர் ஏற்றுக் கொண்டார்" என்று தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முத்தரசன், "சாதிய ஆணவக் கொலைகள் அதிகரிப்பது முற்போக்கான மாநிலத்துக்கு அழகல்ல. ஒரே சாதியில் கூட காதலித்தால், அதை தங்களுடைய குடும்ப கவுரவ பிரச்சினையாக கருதும் மனநிலை இருக்கிறது. 3 கட்சிகள் சார்பில் முதல்-அமைச்சரை சந்தித்து சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயக்க கோரிக்கை வைத்தோம். அதனை முதல்வர் ஏற்றுக்கொண்டார்" என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திருமாவளவன், "ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதால் முதல்-அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினோம். ஆணவக் கொலையை தடுக்க, சட்டம் இயற்ற தேசிய பெண்கள் ஆணையம் முன்மொழிந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஆணவக் கொலைகள் நடந்து வருகின்றன. தனிச் சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இருப்பதால் முதல்வரிடம் பேசினோம்" என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-08-2025
06 Aug 2025 -
அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் படிப்புகள் மாணவர்களுக்கு யு.ஜி.சி.எச்சரிக்கை
06 Aug 2025சென்னை: அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் படிப்புகள் : மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த யுஜிசி
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 17 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
06 Aug 2025சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை கருத்தில் கொண்டு 26 பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட ந
-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு ஆணவப்படுகொலைகளை தடுக்க வலியுறுத்தல்
06 Aug 2025சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்கள் நேற்று சந்தித்து பேசினர்.
-
விஜயகாந்த் படத்தை எந்தக்கட்சியும் பயன்படுத்தக் கூடாது: பிரேமலதா
06 Aug 2025வேலூர்: விஜயகாந்த் படத்தை எந்தக்கட்சியும் பயன்படுத்தக் கூடாது என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
-
ஐ.டி. ஊழியர் ஆணவக்கொலை; சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. மனு
06 Aug 2025நெல்லை: ஐ.டி. ஊழியரை ஆணவக்கொலை செய்த சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க நெல்லை நீதிமன்றத்தில் சிபிசிஐ.டி. மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: ஆகஸ்ட் 31-ம் தேதி சீனா செல்கிறார் பிரதமர் மோடி
06 Aug 2025புதுடெல்லி: பிரதமர் மோடி 31-ம் தேதி சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிலும் அவர் பங்கேற்கிறார்.
-
அன்புமணியின் பொதுக்குழுவுக்கு எதிராக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
06 Aug 2025சென்னை: அன்புமணி கூட்டும் பொதுக்குழுவுக்கு எதிராக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
-
திருப்புவனம் அஜித்குமார் வழக்கு: தனிப்படை காவலர்களை ஆக. 13 வரை சிறையில் அடைக்க உத்தரவு
06 Aug 2025சிவகங்கை: திருப்புவனம் காவலாளி கொலை வழக்கில் கதைான காவலர்களை வருகிற 13-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
ரஷ்யாவில் இருந்து இறக்குமதி: இந்தியாவின் கருத்துக்கு அமெரிக்க அதிபர் பதில்
06 Aug 2025வாஷிங்டன்: ரஷ்யாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்வதாக இந்தியா தெரிவித்திருந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அது குறித்து பதிலளித்துள்ளார்.
-
திருப்பூர் அருகே சிறப்பு எஸ்.ஐ. கொலை: குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
06 Aug 2025சென்னை: திருப்பூர் அருகே வெட்டிக் கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
06 Aug 2025சென்னை: 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தி.மு.க.
-
தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் விளம்பரங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரை பயன்படுத்த எந்த தடையுமில்லை சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 Aug 2025புதுடெல்லி: தமிழ்நாடு அரசின் திட்டங்களில் முதலமைச்சரின் பெயரை பயன்படுத்த தடையில்லை என்று தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
06 Aug 2025சென்னை: தமிழகத்தில் நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
திருப்பூர் எஸ்.எஸ்.ஐ கொலை வழக்கில் தந்தை - மகன் சரண்
06 Aug 2025திருப்பூர்: திருப்பூரில் நடந்த எஸ்.எஸ்.ஐ. கொலை வழக்கில் தந்தை - மகன் எஸ்.பி. அலுவலகத்தில் சரணடைந்தனர்.
-
எஸ்.ஐ.ஆர். குறித்து விவாதம் நடத்தக்கோரி டெல்லியில் இன்டியா கூட்டணி போராட்டம்
06 Aug 2025புதுடெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தி டெல்லியில் இன்டியா கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெற்ற
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: நீதிமன்ற விசாரணை உள்ளதால் பார்லி.,யில் விவாதிக்க முடியாது: மத்திய அமைச்சர் ரிஜிஜு தகவல்
06 Aug 2025புதுடெல்லி: எஸ்.ஐ.ஆர்.
-
கோவை காவல் நிலையத்தில் ஒருவர் உயிரிழப்பு: லாக்கப் மரணம் கிடையாது: காவல் ஆணையர் விளக்கம்
06 Aug 2025கோவை: கோவை காவல் நிலையத்தில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக நடந்தது என்ன? என்பது குறித்து காவல் ஆணையர் விளக்கமளித்துள்ளார்.
-
ட்ரம்ப் மிரட்டலுக்கு இடையே அஜித் தோவல் ரஷ்யா பயணம்
06 Aug 2025மாஸ்கோ: அஜித் தோவலை தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இம்மாத இறுதியில் ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்திற்கு காரணமே காஷ்மீர் பிரச்சினைதான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கருத்து
06 Aug 2025லாகூர்: பாகிஸ்தானின் படைகளும், மக்களும் எந்தவொரு ஆக்கிரமிப்பு செயலுக்கும் பதிலடி கொடுக்கும் திறன் கொண்டவர்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
-
குஜராத் பால விபத்து: பலி 22 ஆக உயர்வு
06 Aug 2025வதோதரா: குஜராத்தில் ஏற்பட்ட பால விபத்தில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ரூ.75 ஆயிரத்தை தாண்டிய ஒரு பவுன் தங்கம் விலை..!
06 Aug 2025சென்னை: ஆபரணத் தங்கம் விலை மீண்டும் ரூ.75,000-ஐ தாண்டி புதிய உச்சம் தொட்டுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தொண்டைமான்
06 Aug 2025சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தொண்டைமான் அக் கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார்.
-
பொதுத்தேர்வு எழுத 75 சதவீத வருகை பதிவு இனி அவசியம் சி.பி.எஸ்.இ. புதிய உத்தரவு
06 Aug 2025சென்னை: மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்று அழைக்கப்படக் கூடிய சி.பி.எஸ்.இ.
-
ரெப்போ ரேட் விகிதம் 5.5% ஆகவே தொடரும் ரிசர்வ் வங்கி அறிவிப்பு
06 Aug 2025புதுடெல்லி: ரெப்போ ரேட் விகிதத்தில் மாற்றமில்லை என்று தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, ரெப்போ ரேட் விகிதம் 5.5சதவீதம் ஆகவே தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.