எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஈரோடு : அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியது வேதனையாக உள்ளது. மனவேதனையில் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ள செங்கோட்டையன், கட்சி வலிமையாகவும், ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம் என்றார். மேலும் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியது தொடர்பாக வழக்கு தொடர்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டது பற்றிய கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அலுவலகத்தில் இதுபற்றி விளக்கம் அளித்து பேசுவேன் என கூறினார். இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நேற்று காலை 10 மணியளவில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர் காலை 11 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்து உள்ளார். அப்போது அவர் கூறும்போது, 1975-ம் ஆண்டில் கோவையில் நடந்த முதல் பொதுக்குழுவை சிறப்பாக நடத்தி எம்.ஜி.ஆரின் பாராட்டை பெற்றவன்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் கட்சி வலிமையோடு இருக்க அயராது பணியாற்றினேன். ஜெயலலிதா வழியில் கட்சியில் என்னை அர்ப்பணித்து கொண்டு பயணித்தவன். அ.தி.மு.க.வுக்காக என்னை அர்ப்பணித்து கொண்டேன். கட்சி உடைந்து விட கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பேத என்னுடைய நோக்கமாக இருந்தது. ஜெயலலிதா மறைந்த பிறகு கட்சியை வழிநடத்த சசிகலா என்னிடம் பேசினார். ஜெயலலிதா மறைந்த பிறகு 2 முறை வாய்ப்பு கிடைத்தும் கட்சி உடைந்து விட கூடாது என்பதற்காக விட்டு கொடுத்தேன். எடப்பாடி பழனிசாமியை பரிந்துரைத்தேன் என்றார். எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின்னர் 2019, 2021 உள்ளாட்சி தேர்தல், 2024 தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது. பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் ஒரு முறை கூட வெற்றி பெறாதவர்.
நான் விதித்தது கெடு அல்ல. பேசி முடிவெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் கூறினேன். கட்சி ஒன்றிணைய தொடர்ந்து வலியுறுத்தினோம். 10 நாட்களில் பேச்சு தொடங்கி, யாரை சேர்க்க வேண்டுமென பொதுச்செயலாளர் முடிவெடுக்கலாம் என்றேன். கட்சி வலிமையாகவும், ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும். அதுவே எனது நோக்கம். எம்.ஜி.ஆர் தோல்வி காணாதவர். ஜெயலலிதா ஒரு முறை தோற்றால், மறுமுறை வெற்றி காணும் சாதனையாளர். கட்சியை வலிமைப்படுத்த ஒத்துழைப்பு தர வேண்டுமென்று நீக்கப்பட்டவர்களோடு பேசினேன்.
கருத்து கூறியதும் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டேன். என்னை பி டீம் என்கின்றனர். யார் பி டீம் என நாடறியும். நான் பி டீமில் இல்லை. ஏ1ல் பழனிசாமி இருக்கிறார். ஏ1 ஆகவே பழனிசாமி செயல்பட்டு கொண்டிருக்கிறார். கட்சியில் இருந்து நீக்கியது வேதனையாக உள்ளது. மனவேதனையில் இருக்கிறேன். இரவு முழுவதும் தூங்கவில்லை. 53 ஆண்டுகள் கட்சியில் இருந்த சீனியர் என்ற வகையில் நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும். ஒரு மூத்த தலைவரான எனக்கு நோட்டீஸ் கூட அனுப்பவில்லை.
2026-ல் வெற்றி வாய்ப்பை இழந்தால், ஏன் முன்பே கூறவில்லை என கேட்டு விட கூடாது என்பதற்காகவே கூறினேன். யார் துரோகம் செய்தது? எங்களிடம் எல்லாவற்றுக்கும் வீடியோ, ஆடியோ ஆதாரம் உள்ளது. என் மீது களங்கம் சுமத்தப்பட்டு இருப்பது வேதனை ஏற்படுத்துகிறது.
பா.ஜ.க.வோடு கூட்டணி இல்லை என்று கூறினார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை பேசி வருகிறார். துரோகம் செய்வதில் பழனிசாமிக்கு நோபல் பரிசு தரலாம். என்னை குற்றம் சாட்டும் முன்பு, குற்றம் செய்தவர்கள் யார் என்று தெரிந்து செய்திருக்க வேண்டும். கொடநாடு கொலை வழக்குக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை என பேட்டியில் கூறியுள்ளார்.
அ.தி.மு.க.வின் தற்காலிக பொதுச்செயலாளராகவே அவர் இருக்கிறார். அ.தி.மு.க.வில் இருந்து என்னை நீக்கியது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு செய்வோம். உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கினாலும், விதியின்படி நீக்கவில்லை. இதனால், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை மேற்கொள்வோம். அவர், சர்வாதிகார போக்கில் செயல்பட்டு இருக்கிறார். அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியது தொடர்பாக வழக்கு தொடர்வேன் என்று செங்கோட்டையன் பேட்டியின்போது கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
31 Oct 2025சென்னை : ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு ஏற்படுவதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கான 'ஆன்லைன்' முன்பதிவு இன்று தொடங்குகிறது
31 Oct 2025சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டது.
-
இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் : ராஜ்நாத் சிங் கையெழுத்து
31 Oct 2025டெல்லி : இந்தியா- அமெரிக்கா இடையே 10 ஆண்டுக்கான பாதுகாப்பு ஒப்பந்தத்தை ராஜ்நாத் சிங் கையெழுத்திட்டார்.
-
விரைவில் சபரிமலையில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் பல மொழி அடங்கிய தகவல் தொடர்பு செயலி அறிமுகம்
31 Oct 2025கூடலூர் : சபரிமலையில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் பல மொழி அடங்கிய தகவல் தொடர்பு செயலி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சுருளி அருவியில் குளிக்க அனுமதி
31 Oct 2025கூடலூர் ,: நீர்வரத்து சீரானதால் 13 நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம்: அமலாக்கத்துறையின் புகாருக்கு அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
31 Oct 2025திருச்சி : குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம் என்று அமலாக்கத்துறை புகாருக்கு அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-11-2025.
01 Nov 2025 -
உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல்
31 Oct 2025மதுரை : உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடைபெற்றது.
-
தொழில்நுட்ப வலிமையால் ஆபரேஷன் சிந்தூர் கொள்கை : ராணுவ தலைமை தளபதி பெருமிதம்
01 Nov 2025போபால் : ஆபரேஷன் சிந்தூர் கொள்கை, தொழில்நுட்ப வலிமையால் மேற்கொள்ளப்பட்டது என்று ராணுவ தலைமை தளபதி தெரிவித்தார்.
-
1040-வது சதய விழா: மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
01 Nov 2025சென்னை : மாமன்னர் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழாவை முன்னிட்டு மாமன்னர் ராஜராஜ சோழன் புகழ் போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியமில்லை : முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி
01 Nov 2025மதுரை : அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியமில்லை என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
-
அதிபர் தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு: தான்சானியா வன்முறையில் 700 பேர் பலி
01 Nov 2025டொடோமா : கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் அதிபர் தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த வன்முறையில் 700 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என்பது தெய்வத்தின் தீர்ப்பு: திண்டுக்கல் சீனிவாசன்
01 Nov 2025மதுரை : எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என்பது தெய்வத்தின் தீர்ப்பு என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
-
ஆந்திரா கூட்ட நெரிசல்: பிரதமர் மோடி இரங்கல்
01 Nov 2025விசாகப்பட்டினம் : ஆந்திரா கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
அதிநவீன சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன எல்.வி.எம்.–3 எம்5 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
01 Nov 2025திருப்பதி, கடலோர எல்லைகளைக் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சுமார் ரூ.1,600 கோடியில் 4,410 கிலோ எடை கொண்ட அதிநவீன சிஎம்எஸ்–03 செயற்கைக்கோள் எல்.வி.எம்.-3 ராக்கெட
-
மாநிலங்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது : சத்தீஸ்கரில் பிரதமர் மோடி பேச்சு
01 Nov 2025ராய்ப்பூர் : மாநிலங்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது என்று தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உலகில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் முதலில் உதவிக்க
-
மதுரை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.1248.24 கோடி செலவில் சாலைகள், மேம்பாலங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
01 Nov 2025சென்னை : நெடுஞ்சாலைத்துறை சார்பில் மதுரை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.1248.24 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 10 சாலைகள் மற்றும் 2 சாலை மேம்பாலங்களை தமிழ்நாடு முதல்வர
-
இந்தியாவில் வறுமையில் இருந்து விடுபட்ட முதல் மாநிலம் கேரளா : முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
01 Nov 2025திருவனந்தபுரம் : வறுமை விகிதம் அதிகரித்திருந்த 1961-62 காலகட்டத்தில் இருந்து மாநிலம் வளர்ச்சியடைந்து வந்துள்ளது என பினராயி விஜயன் பேசியுள்ளார்.
-
ஆந்திர பிரதேசத்தில் சோகம்: கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பரிதாபமாக பலி
01 Nov 2025விசாகப்பட்டினம் : ஆந்திராவில் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பரிதாபமாக பலியான சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
பெங்களூரு-எர்ணாகுளம் இடையே புதிய வந்தே பாரத் ரயில் இயக்கம் : ஈரோடு, கோவை வழியாக - நேரம் அறிவிப்பு
01 Nov 2025கொச்சி : கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூருவிற்கு விரைவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்படவுள்ளது.
-
நான் மக்களுக்காக உழைத்தேன், என் குடும்பத்திற்காக அல்ல: நிதிஷ் குமார்
01 Nov 2025பாட்னா, பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நிதிஷ்குமார் நான் மக்களுக்காக உழைத்தேன் என் குடும்பத்திற்காக அல்ல என்று தெரிவித்தார்.
-
இந்திய கலாச்சாரம் குறித்து ராகுலுக்கு தெரியவில்லை : பீகார் பிரச்சாரத்தில் அமித்ஷா தாக்கு
01 Nov 2025பாட்னா : ராகுலுக்கு இந்திய கலாச்சாரம் தெரியவில்லை என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்த நடிகர் அஜித்
01 Nov 2025சென்னை : கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல என்று நடிகர் அஜித்குமார் முதல்முறையாக அந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
-
பாலியல் புகாரில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்களை பறித்தார் மன்னர் சார்லஸ் : வீட்டை காலி செய்யவும் உத்தரவு
01 Nov 2025லண்டன், பாலியல் புகாரில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ அரச பட்டங்கள் பறிக்கப்பட்டதையடுத்து வீட்டை காலி செய்ய சார்லஸ் உத்தரவிட்டார்.
-
தமிழகத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் 70,449 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்
01 Nov 2025சென்னை : தமிழகத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் 70,449 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


