முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஓராண்டு இடைவெளியில் இரட்டை குழந்தைகள் பிறந்தது எப்படி

Image Unavailable

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு பெணணுக்கு ஓராண்டு இடைவெளியில் இரட்டை குழந்தைகள் பிறந்த அதிசய சம்பவம் உலகம் முழுவதையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஓராண்டு இடைவெளியில் பிறந்த இரட்டை குழந்தைகளா.. அது எப்படி.. கலிபோர்னியாவை சேர்ந்தவர் பாத்திமா மாட்ரிகல் என்ற இளம்பெண். இவர் கருவுற்றிருந்தார். பிரசவ வலி எடுக்கவே டிசம்பர் 31 இல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரவு 11.45க்கு இவருக்கு குழந்தை பிறந்தது. இந்நிலையில் மீண்டும் அவருக்கு பிரசவ வலி எடுக்கவே அவரை சோதித்ததில் அவர் இரட்டை குழந்தைகளை கருவுற்றிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு மற்றொரு குழந்தையை பிரசவிததார். இதன் மூலம் அந்த குழந்தை 2022 இல் ஜனவரியில் பிறந்தது. இதனால் இரண்டு குழந்தைகளுக்கும் வெவ்வேறு தேதி, மற்றும் வருடங்களில் பிறந்த தினம் அமைந்தது. இந்த செய்தி உலகம் முழுவதும் வேகமாக பரவியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்