எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,ஆக.19 - முந்திய தி.மு.க.அரசின் நிர்வாக திறமையின்மையால் தமிழகத்துக்கு மின்சாரம் வாங்கியதில் மாதம் ரூ.150 கோடி அதிகமாக செலவிடப்பட்டிருக்கிறது. இதனால் தமிழக மின் பகிர்மான கழகம் ரூ.7200 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சட்டசபையில் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் நேற்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதிலுரை வழங்கினார. அப்போது பேசியதாவது:
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 1 யூனிட் மின்சாரம் ரூ.6.035 என்ற விலைக்கு 1,000 மெகாவாட் வாங்கப்பட்டது. ஆனால். ஜெயலலிதா ஆட்சியில் 1 யூனிட் மின்சாரம் ரூ.3.85க்கு வாங்கப்பட்டது. இதனால் மாதம் ஒன்றுக்கு ரூ.150 கோடி தி.மு.க. ஆட்சியில் அதிகமாக செலவு செய்யப்பட்டது. இதன் விளைவாக முந்தைய அரசு கடந்த 4 ஆண்டுகளில் சரியாக கவனம் செலுத்தாமல் அதிக விலைக்கு முன் கொள்முதல் செய்த காரணத்தால் ரூ.7,200 கோடி மின் பகிர்மான கழகத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், முதலமைச்சர் ஜெயலலிதா இதில் முழு கவனத்தையும் செலுத்தி கடந்த 3 மாதங்களில் மட்டும் ரூ.225 கோடி சிக்கனப்படுத்தியுள்ளார். தற்போது வாங்கப்பட்டு வரும் மின்சாரம் ரூ.3.85லிருந்து அதிகபட்சமாக ரூ.4.50க்கு வாங்கினாலும் கூட தமிழகத்திற்கு மின்சார செலவினம் மிச்சம் தான். அதிகபட்சமாக ரூ.4.50 வீதம் 500 மெகாவாட் வாங்கினால் மாதம் ஒன்றுக்கு ஆகும் தொகை ரூ.54 கோடியாகும். இதன்படி முந்தைய அரசு கணக்குப்படி 48 மாதங்களுக்கு மாதம் ஒன்றுக்கு தலா 54 கோடி வீதம் 2,592 கோடி ஆகிறது. இது 500 மெகாவாட்டுக்கானதாகும். இதுவே அவர்கள் வாங்கிய 1,000 மெகாவாட்டுக்கு ரூ.5,184 கோடி அதிகம் செலவாகியிருக்கிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க கடன் வாங்க வேண்டியதன் அவசியத்தையும், இந்த நிலையை சமாளிக்க வேண்டிய அவல நிலையையும் கடந்த தி.மு.க. ஆட்சியாளர்கள் உருவாக்கி விட்டார்கள். மேலும் கடன் வாங்கித்தான் இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க வேண்டியுள்ளது என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த செலவு செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று. ஊதாரித்தனமாக நடந்துகொண்டதாலும், பொறுப்பற்ற நிலையில் நிர்வாகம் செய்தததாலும் ஏற்படுத்தப்பட்ட நஷ்டமாகும். அவர்கள் நிர்வாகத்திறமையோடு நடந்திருப்பார்களேயானால் இந்த 5,200 கோடி நஷ்டத்தை குறைத்திருக்க முடியும்.
எனவே, முதலமைச்சர் ஜெயலலிதாவால் இந்த குறைபாடுகள் போக்கப்பட்டு, தமிழ்நாடு மின்சார வாரியம் சீரமைக்கப்பட்டு, மீண்டும் தமிழகம் ஒளிமயமாக மாறும்.
இவ்வாறு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார். இதனைத்தொடர்ந்து உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அமைச்சர் அளித்த விளக்கமும் வருமாறு:
கிருஷ்ணசாமி(புதிய தமிழகம்):
தி.மு.க. ஆட்சி கடந்த 5 ஆண்டுகளில் ரூ.33,000 கோடி கடன் சுமை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறீர்கள். ரூ.3.85க்கு வாங்க வேண்டிய மின்சாரம் ரூ.6.35க்கு வாங்கியதாக கூறப்பட்டுள்ளது. யூனிட்டுக்கு இது ஏறக்குறைய இரண்டரை ரூபாய் அதிகம். மத்திய அரசின் வாயிலாக தான் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. அப்படியானால் இந்த கடன்சுமைக்கு மத்திய அரசு துணை போயுள்ளதா? இதில் எங்கே தவறு நடந்தது? எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தப்படுமா?
அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: மின்சாரம் கொள்முதல் மத்திய அரசின் மூலம் இல்லை. நிலக்கரி மட்டும் தான் மத்திய அரசு தருகிறது. மின்கொள்முதல் தனியார் மூலம் தான் கொள்முதல் செய்யப்படுகிறது.
கே.கிருஷ்ணசாமி(புதிய தமிழகம்): தனியாரிடம் கொள்முதல் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படுமா? தென்தமிழ் நாட்டின் மிக முக்கியமான கைத்தொழிலாக தீப்பட்டி உற்பத்தி தொழில் இருக்கிறது. ஆயிரக்கணக்கான பெண்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலை இயந்திரமயமாக்குவதை தடை செய்யப்படுமா?
அமைச்சர் சண்முகவேலு:தீப்பெட்டி தொழிற்சாலைகளை கிளஸ்டர் அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருகிறது.
குணசேகரன்(சி.பி.ஐ.): மின்சாரம் விலைகொடுத்து வாங்கியதில் 7 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. நிலக்கரி வாங்கியதிலும் ஊழல் நடந்துள்ளதாக செய்திகள் வெளிவருகிறது. இதுகுறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படுமா?
கூடங்குளம் அணுமின் நிலையம் துவங்கக்கூடிய நிலையில் ஒருசிலர் மக்களை அச்சப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த போராட்டத்திற்கு மாணவர்களை பயன்படுத்துகிறார்கள். கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை போக்கவும், இத்திட்டத்தை காலத்தே துவக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமா?
நத்தம் விஸ்வநாதன்(மின்துறை அமைச்சர்): நிலக்கரியை பொறுத்தவரை மத்திய அரசு தான் கொள்முதல் செய்கிறது. எனவே, மத்திய அரசு மீது விசாரணை கமிஷன் போட மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. ஆனால், இந்த விஷயத்தில் ஊழல் நடந்துள்ளது என்பது மட்டும் உண்மை.
இவ்வாறு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதிலுரை வழங்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-09-2025.
17 Sep 2025 -
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
மயிலாடுதுறை ஆணவக்கொலை: பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
17 Sep 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆணவக் கொலை வழக்கில் பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: மீண்டும் ஒரு உரிமைப் போரை நடத்தி நாட்டை பாதுகாப்போம் கரூர் தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
17 Sep 2025கரூர்: தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று தெரிவித்துள்ள தி.மு.க.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது: துணை பிரதமர்
17 Sep 2025தோஹா: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது என்றும் இருதரப்பு விவகாரங்களில் 3-ம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும்
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்
17 Sep 2025அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.
-
திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ரஜினி அதிரடி பதில்
17 Sep 2025சென்னை: திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி பதில் அளித்துள்ளார்.
-
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி அரசு முடிவு
17 Sep 2025டெல்லி: எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
-
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு
17 Sep 2025சென்னை: விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
அறிவுச்சூரியன் தந்தை பெரியார்: துணை முதல்வர் உதயநிதி புகழாரம்
17 Sep 2025சென்னை: உலகம் முழுவதற்குமான கொள்கைகளை வகுத்தளித்த அறிவுச்சூரியன் தந்தை பெரியார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.