தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் உள்ள 'நிர்வாக அதிகாரி (நிலை -III)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,ஆக.19 - முந்திய தி.மு.க.அரசின் நிர்வாக திறமையின்மையால் தமிழகத்துக்கு மின்சாரம் வாங்கியதில் மாதம் ரூ.150 கோடி அதிகமாக செலவிடப்பட்டிருக்கிறது. இதனால் தமிழக மின் பகிர்மான கழகம் ரூ.7200 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சட்டசபையில் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் நேற்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதிலுரை வழங்கினார. அப்போது பேசியதாவது:
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 1 யூனிட் மின்சாரம் ரூ.6.035 என்ற விலைக்கு 1,000 மெகாவாட் வாங்கப்பட்டது. ஆனால். ஜெயலலிதா ஆட்சியில் 1 யூனிட் மின்சாரம் ரூ.3.85க்கு வாங்கப்பட்டது. இதனால் மாதம் ஒன்றுக்கு ரூ.150 கோடி தி.மு.க. ஆட்சியில் அதிகமாக செலவு செய்யப்பட்டது. இதன் விளைவாக முந்தைய அரசு கடந்த 4 ஆண்டுகளில் சரியாக கவனம் செலுத்தாமல் அதிக விலைக்கு முன் கொள்முதல் செய்த காரணத்தால் ரூ.7,200 கோடி மின் பகிர்மான கழகத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், முதலமைச்சர் ஜெயலலிதா இதில் முழு கவனத்தையும் செலுத்தி கடந்த 3 மாதங்களில் மட்டும் ரூ.225 கோடி சிக்கனப்படுத்தியுள்ளார். தற்போது வாங்கப்பட்டு வரும் மின்சாரம் ரூ.3.85லிருந்து அதிகபட்சமாக ரூ.4.50க்கு வாங்கினாலும் கூட தமிழகத்திற்கு மின்சார செலவினம் மிச்சம் தான். அதிகபட்சமாக ரூ.4.50 வீதம் 500 மெகாவாட் வாங்கினால் மாதம் ஒன்றுக்கு ஆகும் தொகை ரூ.54 கோடியாகும். இதன்படி முந்தைய அரசு கணக்குப்படி 48 மாதங்களுக்கு மாதம் ஒன்றுக்கு தலா 54 கோடி வீதம் 2,592 கோடி ஆகிறது. இது 500 மெகாவாட்டுக்கானதாகும். இதுவே அவர்கள் வாங்கிய 1,000 மெகாவாட்டுக்கு ரூ.5,184 கோடி அதிகம் செலவாகியிருக்கிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க கடன் வாங்க வேண்டியதன் அவசியத்தையும், இந்த நிலையை சமாளிக்க வேண்டிய அவல நிலையையும் கடந்த தி.மு.க. ஆட்சியாளர்கள் உருவாக்கி விட்டார்கள். மேலும் கடன் வாங்கித்தான் இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க வேண்டியுள்ளது என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த செலவு செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று. ஊதாரித்தனமாக நடந்துகொண்டதாலும், பொறுப்பற்ற நிலையில் நிர்வாகம் செய்தததாலும் ஏற்படுத்தப்பட்ட நஷ்டமாகும். அவர்கள் நிர்வாகத்திறமையோடு நடந்திருப்பார்களேயானால் இந்த 5,200 கோடி நஷ்டத்தை குறைத்திருக்க முடியும்.
எனவே, முதலமைச்சர் ஜெயலலிதாவால் இந்த குறைபாடுகள் போக்கப்பட்டு, தமிழ்நாடு மின்சார வாரியம் சீரமைக்கப்பட்டு, மீண்டும் தமிழகம் ஒளிமயமாக மாறும்.
இவ்வாறு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார். இதனைத்தொடர்ந்து உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அமைச்சர் அளித்த விளக்கமும் வருமாறு:
கிருஷ்ணசாமி(புதிய தமிழகம்):
தி.மு.க. ஆட்சி கடந்த 5 ஆண்டுகளில் ரூ.33,000 கோடி கடன் சுமை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறீர்கள். ரூ.3.85க்கு வாங்க வேண்டிய மின்சாரம் ரூ.6.35க்கு வாங்கியதாக கூறப்பட்டுள்ளது. யூனிட்டுக்கு இது ஏறக்குறைய இரண்டரை ரூபாய் அதிகம். மத்திய அரசின் வாயிலாக தான் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. அப்படியானால் இந்த கடன்சுமைக்கு மத்திய அரசு துணை போயுள்ளதா? இதில் எங்கே தவறு நடந்தது? எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தப்படுமா?
அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: மின்சாரம் கொள்முதல் மத்திய அரசின் மூலம் இல்லை. நிலக்கரி மட்டும் தான் மத்திய அரசு தருகிறது. மின்கொள்முதல் தனியார் மூலம் தான் கொள்முதல் செய்யப்படுகிறது.
கே.கிருஷ்ணசாமி(புதிய தமிழகம்): தனியாரிடம் கொள்முதல் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படுமா? தென்தமிழ் நாட்டின் மிக முக்கியமான கைத்தொழிலாக தீப்பட்டி உற்பத்தி தொழில் இருக்கிறது. ஆயிரக்கணக்கான பெண்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலை இயந்திரமயமாக்குவதை தடை செய்யப்படுமா?
அமைச்சர் சண்முகவேலு:தீப்பெட்டி தொழிற்சாலைகளை கிளஸ்டர் அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருகிறது.
குணசேகரன்(சி.பி.ஐ.): மின்சாரம் விலைகொடுத்து வாங்கியதில் 7 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. நிலக்கரி வாங்கியதிலும் ஊழல் நடந்துள்ளதாக செய்திகள் வெளிவருகிறது. இதுகுறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படுமா?
கூடங்குளம் அணுமின் நிலையம் துவங்கக்கூடிய நிலையில் ஒருசிலர் மக்களை அச்சப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த போராட்டத்திற்கு மாணவர்களை பயன்படுத்துகிறார்கள். கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை போக்கவும், இத்திட்டத்தை காலத்தே துவக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமா?
நத்தம் விஸ்வநாதன்(மின்துறை அமைச்சர்): நிலக்கரியை பொறுத்தவரை மத்திய அரசு தான் கொள்முதல் செய்கிறது. எனவே, மத்திய அரசு மீது விசாரணை கமிஷன் போட மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. ஆனால், இந்த விஷயத்தில் ஊழல் நடந்துள்ளது என்பது மட்டும் உண்மை.
இவ்வாறு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதிலுரை வழங்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 23-05-2022
23 May 2022 -
உக்ரைனில் நாள்தோறும் 100 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு- அதிபர் ஜெலன்ஸ்கி கவலை
23 May 2022உக்ரைனில் நாள்தோறும் 100 ராணுவ வீரர்கள் உயிரிழப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.
-
காலம் அறிந்து உதவிய தமிழக உடன்பிறப்புகளுக்கு நன்றி : இலங்கை எம்.பி. மனோ.கணேசன் உருக்கம்
23 May 2022இலங்கை : காலம் அறிந்து உதவிய தமிழக உடன்பிறப்புகளுக்கு நன்றி என்று இலங்கை எம்.பி. மனோ.கணேசன் தெரிவித்துள்ளார்.
-
குரங்கு காய்ச்சல் - 12 நாடுகளை சேர்ந்த 92 பேர் பாதிப்பு
23 May 2022ஜெனீவா : 12 நாடுகளை சேர்ந்த 92 பேர் குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
-
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்
23 May 2022குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
-
ஆஸ்திரேலியா புதிய பிரதமராக பதவியேற்றார் அந்தோணி அல்பானீஸ்
23 May 2022கான்பெரா : ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார் அந்தோணி அல்பானீஸ்.
-
பராமரிப்பாளரின் விரலை கடித்து துப்பிய சிங்கம்
23 May 2022கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் சிங்கம் ஒன்று பராமரிப்பாளரின் விரலை கடித்து குதறும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது
23 May 2022முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
புதிய வகை ஒமைக்ரான் தொற்று குறித்து அச்சமடைய வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
23 May 2022புதிய வகை ஒமைக்ரான் தொற்று குறித்து அச்சமடைய தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடக்கம்: பயிர் உற்பத்தியில் தேசிய அளவில் முதல் 3 இடங்களை அடைய இலக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
23 May 2022பயிர்களின் உற்பத்தித் திறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை அடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
ரூ.500 கோடி திட்டங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு
23 May 2022புதுடெல்லி : இனி ரூ.500 கோடிக்கு மேல் மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்கள் அனைத்துக்கும் ‘கதிசக்தி’ திட்டத்தின் கீழ் உருவாக் கப்பட்டுள்ள ‘இணைப்புத் திட்டக் குழு’வின் வ
-
கொரோனா அச்சுறுத்தல் இருந்தும் மாஸ்க் அணியாமல் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் 'கிம்'
23 May 2022தன்னை தலைவனாக உருவாக்கிய ராணுவ அதிகாரி மரணமடைந்த நிலையில் அவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் வடகொரிய அதிபர் கிம் பங்கேற்றார்.
-
போர்க் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ரஷிய வீரருக்கு வாழ்நாள் சிறை தண்டனை உக்ரைன் கோர்ட்டு தீர்ப்பு
23 May 2022ரஷியா உக்ரைன் இடையேயான போரின், முதலாவது போர்க்குற்ற விசாரணையில் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
-
இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல சவுதி அரேபியா தடை
23 May 2022கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
-
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
23 May 2022சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கேரள மாநிலத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தன ராஜஸ்தான், மகாராஷ்டிரா
23 May 2022கேரள மாநிலத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநில அரசுகள் குறைத்துள்ளன.
-
விருதுநகரில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு: ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி தாக்கல் செய்தார்
23 May 2022விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
-
இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு: ஜப்பான் தொழில் துறையினரை சந்தித்து பிரதமர் மோடி பேச்சு
23 May 2022டோக்கியோ : இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறும், இந்தியாவில் முதலீடு செய்யக்கோரி ஜப்பான் தொழில் துறையினருடன் நேற்று பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
தைவான் மீது சீனா படையெடுத்தால் அந்நாட்டை பாதுகாக்க அமெரிக்கா களத்தில் இறங்கும் அதிபர் ஜோ பைடன் சூளுரை
23 May 2022தைவானை சீனா தாக்கினால், தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளை அனுப்பும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.
-
கூட்டணி கட்சிகளால் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பாதித்துள்ளது : தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
23 May 2022சென்னை : தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் வளர்ச்சி பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் உருவான அரசியல் கூட
-
பெட்ரோல் வரி விகிதத்தில் சில விஷயங்களை மறைத்து பேசுகிறார் : அண்ணாமலை மீது செந்தில்பாலாஜி விமர்சனம்
23 May 2022கரூர் : பெட்ரோல் வரி விகிதத்தில் சில விஷயங்களை மறைத்தும் மறந்தும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். சிலருக்கு புரிதலும் இல்லை.
-
கோடை விடுமுறையில் வெளியூர் செல்ல மக்கள் ஆர்வம்: அரசு பஸ்களில் தினமும் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணம் : ஒரே வாரத்தில் இரு மடங்காக அதிகரித்த பயணிகள் எண்ணிக்கை
23 May 2022சென்னை : கோடை விடுமுறை தொடங்கியதை அடுத்து வெளியூர் மற்றும் சொந்த ஊர் செல்ல மக்கள் ஆர்வம் காட்டுவதால் அரசு விரைவு பேருந்துகளில் தினமும் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து ப
-
போதிய அளவில் மாணவர் சேர்க்கை இல்லாததால் வரும் கல்வி ஆண்டில் 10 தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள் மூடல் : அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
23 May 2022சென்னை : தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
-
குறுவை சாகுபடிக்கு 3.675 மெ.டன் விதைகள், 56,229 மெ.டன் உரங்கள் இருப்பு வைப்பு : உழவர் நலத்துறை அமைச்சகம் தகவல்
23 May 2022சென்னை : குறுவை சாகுபடி ஆயத்தப் பணிக்காக 3,675 மெட்ரிக் டன் விதைகளும், 56,229 மெட்ரிக் டன் ரசாயன உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக உழவர் நலத் துறை அமைச்சகம் தெரிவித்
-
12 ஆண்டுகளுக்குப்பின் மே 26 முதல் மதுரை-தேனி ரயில் சேவை தொடக்கம்
23 May 2022மதுரை : 12 ஆண்டுகளுக்குப்பின் மே 26 முதல் மதுரை-தேனி இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதை அடுத்து மதுரை, தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.