எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,ஆக.19 - முந்திய தி.மு.க.அரசின் நிர்வாக திறமையின்மையால் தமிழகத்துக்கு மின்சாரம் வாங்கியதில் மாதம் ரூ.150 கோடி அதிகமாக செலவிடப்பட்டிருக்கிறது. இதனால் தமிழக மின் பகிர்மான கழகம் ரூ.7200 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சட்டசபையில் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் நேற்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதிலுரை வழங்கினார. அப்போது பேசியதாவது:
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 1 யூனிட் மின்சாரம் ரூ.6.035 என்ற விலைக்கு 1,000 மெகாவாட் வாங்கப்பட்டது. ஆனால். ஜெயலலிதா ஆட்சியில் 1 யூனிட் மின்சாரம் ரூ.3.85க்கு வாங்கப்பட்டது. இதனால் மாதம் ஒன்றுக்கு ரூ.150 கோடி தி.மு.க. ஆட்சியில் அதிகமாக செலவு செய்யப்பட்டது. இதன் விளைவாக முந்தைய அரசு கடந்த 4 ஆண்டுகளில் சரியாக கவனம் செலுத்தாமல் அதிக விலைக்கு முன் கொள்முதல் செய்த காரணத்தால் ரூ.7,200 கோடி மின் பகிர்மான கழகத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், முதலமைச்சர் ஜெயலலிதா இதில் முழு கவனத்தையும் செலுத்தி கடந்த 3 மாதங்களில் மட்டும் ரூ.225 கோடி சிக்கனப்படுத்தியுள்ளார். தற்போது வாங்கப்பட்டு வரும் மின்சாரம் ரூ.3.85லிருந்து அதிகபட்சமாக ரூ.4.50க்கு வாங்கினாலும் கூட தமிழகத்திற்கு மின்சார செலவினம் மிச்சம் தான். அதிகபட்சமாக ரூ.4.50 வீதம் 500 மெகாவாட் வாங்கினால் மாதம் ஒன்றுக்கு ஆகும் தொகை ரூ.54 கோடியாகும். இதன்படி முந்தைய அரசு கணக்குப்படி 48 மாதங்களுக்கு மாதம் ஒன்றுக்கு தலா 54 கோடி வீதம் 2,592 கோடி ஆகிறது. இது 500 மெகாவாட்டுக்கானதாகும். இதுவே அவர்கள் வாங்கிய 1,000 மெகாவாட்டுக்கு ரூ.5,184 கோடி அதிகம் செலவாகியிருக்கிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க கடன் வாங்க வேண்டியதன் அவசியத்தையும், இந்த நிலையை சமாளிக்க வேண்டிய அவல நிலையையும் கடந்த தி.மு.க. ஆட்சியாளர்கள் உருவாக்கி விட்டார்கள். மேலும் கடன் வாங்கித்தான் இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க வேண்டியுள்ளது என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த செலவு செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று. ஊதாரித்தனமாக நடந்துகொண்டதாலும், பொறுப்பற்ற நிலையில் நிர்வாகம் செய்தததாலும் ஏற்படுத்தப்பட்ட நஷ்டமாகும். அவர்கள் நிர்வாகத்திறமையோடு நடந்திருப்பார்களேயானால் இந்த 5,200 கோடி நஷ்டத்தை குறைத்திருக்க முடியும்.
எனவே, முதலமைச்சர் ஜெயலலிதாவால் இந்த குறைபாடுகள் போக்கப்பட்டு, தமிழ்நாடு மின்சார வாரியம் சீரமைக்கப்பட்டு, மீண்டும் தமிழகம் ஒளிமயமாக மாறும்.
இவ்வாறு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார். இதனைத்தொடர்ந்து உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அமைச்சர் அளித்த விளக்கமும் வருமாறு:
கிருஷ்ணசாமி(புதிய தமிழகம்):
தி.மு.க. ஆட்சி கடந்த 5 ஆண்டுகளில் ரூ.33,000 கோடி கடன் சுமை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறீர்கள். ரூ.3.85க்கு வாங்க வேண்டிய மின்சாரம் ரூ.6.35க்கு வாங்கியதாக கூறப்பட்டுள்ளது. யூனிட்டுக்கு இது ஏறக்குறைய இரண்டரை ரூபாய் அதிகம். மத்திய அரசின் வாயிலாக தான் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. அப்படியானால் இந்த கடன்சுமைக்கு மத்திய அரசு துணை போயுள்ளதா? இதில் எங்கே தவறு நடந்தது? எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தப்படுமா?
அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: மின்சாரம் கொள்முதல் மத்திய அரசின் மூலம் இல்லை. நிலக்கரி மட்டும் தான் மத்திய அரசு தருகிறது. மின்கொள்முதல் தனியார் மூலம் தான் கொள்முதல் செய்யப்படுகிறது.
கே.கிருஷ்ணசாமி(புதிய தமிழகம்): தனியாரிடம் கொள்முதல் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படுமா? தென்தமிழ் நாட்டின் மிக முக்கியமான கைத்தொழிலாக தீப்பட்டி உற்பத்தி தொழில் இருக்கிறது. ஆயிரக்கணக்கான பெண்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலை இயந்திரமயமாக்குவதை தடை செய்யப்படுமா?
அமைச்சர் சண்முகவேலு:தீப்பெட்டி தொழிற்சாலைகளை கிளஸ்டர் அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருகிறது.
குணசேகரன்(சி.பி.ஐ.): மின்சாரம் விலைகொடுத்து வாங்கியதில் 7 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. நிலக்கரி வாங்கியதிலும் ஊழல் நடந்துள்ளதாக செய்திகள் வெளிவருகிறது. இதுகுறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படுமா?
கூடங்குளம் அணுமின் நிலையம் துவங்கக்கூடிய நிலையில் ஒருசிலர் மக்களை அச்சப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த போராட்டத்திற்கு மாணவர்களை பயன்படுத்துகிறார்கள். கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை போக்கவும், இத்திட்டத்தை காலத்தே துவக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமா?
நத்தம் விஸ்வநாதன்(மின்துறை அமைச்சர்): நிலக்கரியை பொறுத்தவரை மத்திய அரசு தான் கொள்முதல் செய்கிறது. எனவே, மத்திய அரசு மீது விசாரணை கமிஷன் போட மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. ஆனால், இந்த விஷயத்தில் ஊழல் நடந்துள்ளது என்பது மட்டும் உண்மை.
இவ்வாறு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதிலுரை வழங்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ராகுல் நாளை சென்னை வருகை
19 Feb 2026சென்னை, காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி நாளை (பிப். 21) சென்னை வரவுள்ளதாக உறுதி செய்யப்படாதத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இந்தியா எண்ணெய் வாங்குகிறதா? ரஷ்யா தரப்பில் விளக்கம்
19 Feb 2026மாஸ்கோ, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
-
மத்திய-மாநில உறவு குறித்த உயர்நிலைக் குழுவின் முக்கிய பரிந்துரைகள்
19 Feb 2026சென்னை, பொதுமக்களின் கருத்துகளை கேட்காமல் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தக்கூடாது உள்ளிட்ட முக்கிய பரிந்துரைகள் மத்திய-மாநில உறவு குறித்த உயர்நிலைக் குழுவின் அறிக்கையில்
-
சீனாவில் பட்டாசு கடையில் திடீர் தீவிபத்து - 12 பேர் பலி
19 Feb 2026பெய்ஜிங், சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோக நிகழ்வாக பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர்.
-
அசாம், காமாக்யா கோவிலில் பிரியங்கா காந்தி வழிபாடு
19 Feb 2026டெல்லி, காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி காமாக்யா கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
-
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.: தமிழ்நாடு காங்கிரஸ் வரவேற்பு
19 Feb 2026சென்னை, தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது இதற்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு அளித்துள்ளனர்.
-
மகாராஷ்டிராவில் முஸ்லிம் இடஒதுக்கீடு ரத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்திற்குள் தே.ஜ.கூ. வந்தால் அனைவரின் இடஒதுக்கீடும் காலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
19 Feb 2026சென்னை, தமிழ்நாட்டுக்குள் தேசிய ஜனநாயகக் கூட்டணி வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா?
-
வருகிற மார்ச் 12-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த தஞ்சாவூர் பொதுக்கூட்டம் ரத்து
19 Feb 2026திருச்சி, திருச்சியில் வரும் மார்ச் 11-ம் தேதி பிரதமர் பங்கேற்க விருக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சம் பேரை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரம்: பிரிட்டன் மன்னர் சார்ல்ஸ் சகோதரர் ஆண்ட்ரூ கைது
19 Feb 2026லண்டன், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில், பிரிட்டன் அரசர் சார்ல்ஸின் சகோதரர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
எம்.ஜி.ஆர். அ.தி.மு.க என்ற பெயரில் பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய கட்சி தொடக்கம்
19 Feb 2026சென்னை, எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கினார்.
-
தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் தி.மு.க.வுடன் கூட்டணி பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்
19 Feb 2026சென்னை, தேமுதிக யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு விடையாக தி.மு.க.வுடன் கூட்டணி என தெரிவிக்கிறோம்.
-
வங்கக் கடலில் மேலும் ஒரு புதிய புயல் சின்னம்: வரும் 22-ம் தேதி 3 மாவட்டங்களில் மழை
19 Feb 2026சென்னை, தென்கிழக்கு வங்கக் கடலில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதல் முறையாக தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க.: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் உறுதி
19 Feb 2026சென்னை, வரும் தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதல் முறையாக தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணநை்திருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தே.மு.தி.க.
-
'தி கேரளா ஸ்டோரி - 2' திரைப்படத்தை தடை செய்ய கேரள முதல்வர் வலியுறுத்தல்
19 Feb 2026திருவனந்தபுரம், கேரள முதல்வர் பினராயி விஜயன் தி கேரளா ஸ்டோரிக்கு எதிராக தன் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
-
தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா புதிய கட்சித் தொடங்குகிறார்
19 Feb 2026ஐதராபாத், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியைத் தொடங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
-
உலகின் பெரிய தொழில்நுட்ப மையமாக இந்தியா திகழ்கிறது: ஏ.ஐ. உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்
19 Feb 2026சென்னை, உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப மையமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. அரசு செய்த சாதனை திட்டங்கள் மீது சவாரி செய்வதா? தி.மு.க அரசுக்கு மீது இ.பி.எஸ் கேள்வி
19 Feb 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:- என்ன தான் ஆச்சு இந்த முதல்வருக்கு?
-
இலவசங்களை அறிவிப்பது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
19 Feb 2026புதுடெல்லி, தேர்தலுக்காக இலவசங்களை அறிவிப்பது இன்னும் எத்தனை காலத்திற்கு தொடரும் என்று இலவசங்கள் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்கேள்வி எழுப்பியுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
19 Feb 2026- மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் விழா தொடக்கம், அன்ன வாகனத்தில் ராஜாங்க சேவை.
- ஸ்ரீசைலம், திருவைக்காவூர் கோவில்களில் சிவபெருமான் வீதி உலா.
- திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழ
-
இன்றைய நாள் எப்படி?
19 Feb 2026


