முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரமோற்சவ விழா: திருப்பதியில் கூட்டம்

வெள்ளிக்கிழமை, 7 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

 

திருமலை, அக்.7 - திருப்பதியில் நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் லட்ச கணக்கான மக்கள் குவிந்ததால் தரிசனத்திற்கு 19 மணி நேரம் ஆகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆண்டு பிரமோற்சவ விழா கடந்த மாதம் துவங்கியது நடைபெற்று வருகிறது. தினமும் நடைபெற்று வரும் வீதி உலா நிகழ்ச்சியை காணவும், ஏழுமலையானை தரிசிக்கவும் பக்தர்கள் அலைமோதுகிறார்கள். நேற்று முன்தினம் காலை சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பசாமி வீதி உலா வந்தார். மாலையில் சந்திர பிரபை வாகன வீதி உலா நடைபெற்றது. நேற்றுமுன்தினம் விடுமுறைதினம் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர். தர்ம தரிசனம் செய்ய 19 மணி நேரமானதால் 3 கி.மீ தூரம் வரை பக்தர்கள் காத்து நின்றனர். ரூ.50 கட்டண தரிசனத்திற்கு 17 மணி நேரமும், ரூ.300 கட்டண தரசனத்திற்கு 7 மணி நேரமும் பக்தர்கள் காத்து நின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்