முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு இனிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, டிச.4 - உலக மாற்று திறனாளிகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.  டிசம்பர் திங்கள் 3-ம் நாள் அனைத்து  நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தை கொண்டாடும் விதமாக  சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம்  நேற்று தியாகராயநகரில் அமைந்துள்ள மதுரம் நாராயணன் மையத்தில் உள்ள மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் அளவளாவியும்  இனிப்புகள் வழங்கினார். அதேபோன்று  கே.கே. நகரில் அமைந்துள்ள மாநில வள மற்றும் பயிற்சி மையத்தில் உள்ள மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும்,  திருவான்மியூரில் அமைந்துள்ள பாத்வே என்ற மையத்தில் உள்ள மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும்   இனிப்புகள் வழங்கினார்.  

இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை,  அரசுச் செயலாளர் கண்ணகிபாக்கியநாதன், மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர்  சம்பத் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்