உலகிலேயே மிதக்கும் தபால் நிலையம் எங்கிருக்கு தெரியுமா.. அது வேறு எங்கும் இல்லை. இந்தியாவில்தான். அதுவும் குளுகுளு காஷ்மீரில். ஸ்ரீ நகரில் உள்ள தால் ஏரியில் கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிதக்கும் தபால் அலுவலகம் திறக்கப்பட்டது. அப்போதைய முதலமைச்சர் உமர் அப்துல்லா மற்றும் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சச்சின் பைலட் ஆகியோரால்தொடங்கப்பட்டது. படகு ஒன்றில் தான் இந்த அலுவலகம் செயல்படுகிறது. ஏரியில் மிதந்தபடியே உள்ளூர் மக்களுக்கான தபால் சேவைகளை செய்து வருகிறது. உலகளவில் இந்தியாவில் தான் அதிக தபால் அலுவலகங்கள் உள்ளன. இந்தியாவில் சுமார் 1,55,015 தபால் அலுவலகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
இன்றைய நவீன யுகத்தில் நொறுக்குத் தீனி காரணமாக உடல் பருமனாவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தொடர்ந்து பிளாக் டீ அல்லது கிரீன் டீ குடித்தால் உடல் பருமனாவதைத் தடுக்க முடியும். அதிக கொழுப்புச் சத்துள்ள உணவால் ரத்தத்தில் கலந்துள்ள, கொலஸ்ட்ரால், உயர் ரத்த குளுக்கோஸ் உள்ளிட்ட உடல் நலனை கெடுக்கும் பொருட்களையும் பிளாக் டீ வெளியேற்றி விடுகிறது. இரணாடம் வகை சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு காரணமாக உள்ள இன்சுலின் பாதிப்பையும் சரிசெய்ய இது உதவும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தினமும் பிளாக் டீ குடியுங்கள் இது உங்கள் உடலில் உள்ள சர்க்கரை நோய் மற்றும் தேவையில்லாத கொழுப்புகளை கரைக்க உதவும்.
சீனாவில் டைனோசர் காலத்தில் வாழ்ந்த ராட்சத பறவையின் புதைப்படிவம் ஒன்று கனான் என்ற பகுதியில் கிடைத்துள்ளது. படிமத்தின் அளவை வைத்துப் பார்க்கும்போது, இந்த பறவை 3 ஆயிரம் கிலோ எடையும், 8 மீட்டர் உயரமும் இருந்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். இந்தப் பறவைக்கு பெய்பிலாங் என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் பறவை மிகப்பெரிய பெரிய அளவில் கூடுகட்டி வாழ்ந்திருக்கலாம். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் 40 செ.மீ. உயரம், 5 கிலோ எடை கொண்ட ராட்சத பழங்கால முட்டைகளின் படிமங்கள் ஏராளமான கிடைத்தன. அந்த முட்டைகள் இந்த பறவையினத்தின் முட்டைகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த பறவைகள் 9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
கொல்கத்தா என்று தற்போது அழைக்கப்படும் நகரம் முன்பு கல்கட்டா என கூறப்பட்டது. இந்தியாவின் முதல் செய்தி நிறுவனம் கொல்கத்தாவில்தான் தொடங்கப்பட்டது. முதல் செய்தித்தாள் வெளியானதும் கொல்கத்தாவில்தான். கொல்கத்தாவில்தான் இந்தியாவின் மிகப் பெரிய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. ஹூக்ளி நதியின் மீது ஹெளரா - கொல்கத்தா நகரங்களை இணைக்கக் கட்டப்பட்டுள்ள ஹெளரா பாலம் மிகப் பழமையானது. 1943ல் இது திறக்கப்பட்டது. இந்தியாவின் முதல் தபால் நிலையம் கொல்கத்தாவில்தான் உள்ளது. பிர்லா கோயில், ஜெயின் கோயில் ஆகியவை கொல்கத்தாவில் சிறப்பு வாய்ந்த இடங்களாகும். அரண்மனைகளின் நகரம் என அழைக்கப்படும் நகரம் கொல்கத்தா. இந்தியாவின் மிகப் பெரிய விளையாட்டு மைதானமான ஈடன் கார்டன் அமைந்துள்ள நகரம். பிரபலமான எழுத்தாளர் கட்டடம் அமைந்துள்ளது கொல்கத்தாவில்தான்.
அண்மையில் நம்ம தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ேபாது, மீட்பு படையினர் முதலில் தேடியது கருப்பு பெட்டியைத்தான். விமானங்கள் விபத்துக்குள்ளானால் முதலில் தேடப்படுவது கருப்பு பெட்டியைத்தான். இந்த கருப்பு பெட்டி என்பது விமானம் விபத்துக்கு உள்ளாவதற்கு முன்பாக அதனுள் நடந்த அனைத்து செயல்பாடுகளையும் பதிவு செய்து வைத்திருக்கும் பெட்டகம். இதன் மூலம் விபத்துக்கான காரணத்தை டக்கென்று கண்டுபிடித்து விடலாம். அதே போல பூமிக்கும் ஏதேனும் கருப்பு பெட்டி இருக்கா... என்று கேட்டால். இப்போதைக்கு இல்லை. ஆனால் விரைவில் அப்படி ஒரு முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.பூமியின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பதிவு செய்யக்கூடிய டிசாஸ்டர் ரெக்கார்டர் என்ற ஒரு சாதனம் இந்த ஆண்டு நிறுவப்பட உள்ளது. பூமியின் கருப்புப் பெட்டி என்று அழைக்கப்படும் இத் திட்டம் நமது கிரகத்தின் அழிவுக்கான பாதையின் ஒவ்வொரு அடியையும் துல்லியமாக பதிவு செய்யும். சூரிய சக்தியால் இயங்கும் இந்த பெட்டகம் சராசரியாக ஒரு பள்ளிப் பேருந்தின் நீளம் இருக்கும்.இது எந்தவகையான இயற்கை பேரிடரையும் தாங்கிக் கொண்டு பூமியின் மீது நடக்கும் அனைத்து தரவுகளை சேமிக்க வல்லது. இது 7.5 செமீ தடிமனான எஃகு தகடுகளை கொண்டு மூடப்பட்டிருக்கும். பூமியில் உள்ள மிகவும் பாதுகாப்பான இடத்தில் இப்பெட்டி வைக்கப்படும்.இதில் வைக்கப்படும் ஹார்ட் டிரைவ்கள் காலநிலை தொடர்பான தகவல்களை பதிவுசெய்து சேமித்து வைக்கும். கிளெமெங்கர் பிபிடிஓ எனப்படும் தகவல் தொடர்பு நிறுவனம் மற்றும் க்ளூ சொசைட்டி ஆகியவை சேர்ந்து இதை மேற்கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் பணிகள் தொடங்க உள்ளன.
கடலில் எண்ணெய்க் கசிவை உறிஞ்சும் புதிய வகை ஸ்பாஞ்சை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஓலியோ எனப்படும் இந்த ஸ்பாஞ்சானது இயற்கை பேரிடர் , எண்ணெய் டேங்கர்கள் வெடித்துச் சிதறும்போது ஏற்படும் கசிவை உறிஞ்ச பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2025
13 May 2025 -
மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளை தி.மு.க. அரசு நிலைநாட்டி வருகிறது : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
13 May 2025சென்னை : மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளை தி.மு.க. அரசு நிலைநாட்டி வருகிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
இந்தியாவுடனான மோதலில் 11 பாக்., வீரர்கள் உயிரிழப்பு
13 May 2025இஸ்லாமாபாத் : மே 7 முதல் 4 நாட்களுக்கு நடைபெற்ற இந்தியாவுடனான மோதலில் தங்கள் ராணுவத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
-
ரூ.586.94 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 13 பகுதிகளில் 5,180 அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு : அமைச்சர் தா. மோ. அன்பரசன் தகவல்
13 May 2025சென்னை : 13 திட்டப்பகுதிகளில் 5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படவுள்ளதாக குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு திட்டங்களால் மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டி : தமிழக அரசு பெருமிதம்
13 May 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு திட்டங்களால் மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டியாக உள்ளது என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்து
-
9 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது: மகளிர் உரிமைத் திட்டத்தில் வரும் ஜூன் 4-ம் தேதி விண்ணப்பிக்கலாம்
13 May 2025சென்னை : மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுப்பட்ட பெண்கள் வரும் ஜூன் 4-ம் தேதி விண்ணப்பிக்கலாம்.
-
அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்க இந்தியா முடிவு
13 May 2025புதுடெல்லி : அமெரிக்க தயாரிப்புகளுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க இந்தியா முடிவெடுத்துள்ளது.
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : கோவை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
13 May 2025கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
சி.பி.எஸ்.சி 10, 12-ம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
13 May 2025புதுதில்லி : நாடு முழுவதும் 10, 12-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
-
சி.பி.எஸ்.இ. +2 தேர்வில் 83.39 சதவீதம் பேர் தேர்ச்சி
13 May 2025புதுடெல்லி : சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 83.39 சதவீத மாணவர்க்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்ச்சியில் சென்னை மண்டலம் 4-ம் இடம்
13 May 2025புதுடெல்லி : சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் வெளியிடப்பட்ட நிலையில், மொத்தம் 93.66 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
13 May 2025சென்னை : பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது.
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 8 பெண்களுக்கு 85 லட்சம் ரூபாய் இழப்பீடு: சி.பி.ஐ. வழக்குரைஞர்
13 May 2025கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 ல
-
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்ற நடந்த முயற்சிகளை தி.மு.க .முறியடித்தது : தீர்ப்பை வரவேற்று துணை முதல்வர் உதயநிதி பதிவு
13 May 2025சென்னை : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்றைக்கு நீதி கிடைக்க தி.மு.க.வே காரணம் என்று பொள்ளாச்சி வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து வழங்கிய தீர்ப்பை வரவேற்று துணை மு
-
அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை : 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
13 May 2025சென்னை : அந்தமானில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தில் திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக
-
பொள்ளாச்சி வழக்கு: பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும்: அன்புமணி
13 May 2025சென்னை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை சிறை என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
-
எங்களுடைய கூட்டணி வலுவாக இருக்கிறது: 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி கூட்டணி தொடரும் : முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில்
13 May 2025சென்னை : எங்களுடைய கூட்டணி வலுவாக, கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
சேலம் ஏற்காடு கோடை விழா வரும் 23-ம் தேதி தொடக்கம்: அமைச்சர் ராஜேந்திரன் தகவல்
13 May 2025சேலம், சேலம் ஏற்காடு கோடை விழா வருகின்ற 23ஆம் தேதி துவங்கி 29ஆம் தேதி வரை தொடர்ந்து 7 நாள்கள் நடைபெறும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.
-
பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு பிரதமர் மோடி திடீர் விசிட் : வீரர்களுடன் கலந்துரையாடி பாராட்டு
13 May 2025புதுடெல்லி : பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, வீரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் துணிச்சலை பாராட்டினார்.
-
முப்படைத் தளபதிகளுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனை
13 May 2025புதுடெல்லி, பாதுகாப்புத் துறைச் செயலாளர், முப்படைத் தளபதிகளுடன் நேற்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனை நடத்தினார்.
-
பாகிஸ்தான் ராணுவத்தின் 51 இடங்களை தாக்கினோம்: பலுசிஸ்தான் விடுதலைப்படை தகவல்
13 May 2025குவெட்டா, பாகிஸ்தானின் தென்மேற்கில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க கோரி பலுசிஸ்தான் விடுதலைப்படை (பிஎல்ஏ) என்ற பெயரில் கிளர்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக
-
லிபியா தலைநகரில் கடும் மோதல்: 6 பேர் உயிரிழப்பு
13 May 2025வட ஆப்பிரிக்க, வட ஆப்பிரிக்க நாடான லிபியாவின் தலைநகர் திரிப்பொலியில் இரண்டு ஆயுதப் படைகளுக்கு இடையிலான மோதலில் 6 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
-
இந்தியாவுடனான மோதலில் 11 பாக்., வீரர்கள் உயிரிழப்பு
13 May 2025இஸ்லாமாபாத் : மே 7 முதல் 4 நாட்களுக்கு நடைபெற்ற இந்தியாவுடனான மோதலில் தங்கள் ராணுவத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
-
பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு: தமிழ்நாடு தலைவர்கள் கருத்து
13 May 2025சென்னை, தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், 9 பேருக்கும் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
-
ஜம்மு -காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
13 May 2025ஜம்மு : ஜம்மு -காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) காலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.