முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ரூ.30 கோடி மதிப்புள்ள வீடு இலவசம்

30 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு இலவசமாக கிடைக்கிறது என்றால் ஆச்சரியம் தானே.. ஆனால் வீடு இருப்பது இங்கிலாந்தில். சரி இந்த வீட்டில் அப்படி என்ன விசேசம். அதை கூறினால் பட்டியலிட முடியாத அளவுக்கு அத்தனை வசதிகளும் உள்ளன. இங்கிலாந்தின் லேக் மாவட்டத்தில் (Lake District) அமைந்துள்ள இந்த வீட்டிலிருந்து புகழ்பெற்ற வின்டர்மீரைப் (Windermere of England) பார்க்க முடியும். இந்த வீட்டில் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் உண்டு. இந்த ஆடம்பர வீட்டில் வீட்டில் சினிமா போன்ற பல ஆடம்பர வசதிகளும் உள்ளன. இந்த வீட்டின் விலை 3 மில்லியன் பவுண்டுகள் ஆகும். இந்திய ரூபாயில் வீட்டின் விலை (30,15,93,238) 30 கோடியே 15 லட்சத்து 93 ஆயிரத்து 238 ரூபாய். ஒமேஸ் மில்லியன் பவுண்ட் ஹவுஸ் டிரா என்ற நிறுவனம் தான் அல்ஜீமர் நோயாளிகளுக்கு நிதி திரட்டுவதற்காக 10 பவுண்டுகள் அதாவது நம்மூர் மதிப்பில் ரூ. ஆயிரத்தில் குலுக்கல் ஒன்றை நடத்துகிறது. அதில் வெற்றி பெறும் அதிர்ஷ்டசாலிக்குத்தான் இந்த ரூ.30 கோடி மதிப்புள்ள வீடு இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டை வாங்குபவர்களுக்கு பத்திர கட்டணம், பதிவு கட்டணம், வரி என சகல சலுகைகளும் இலவசம் என்று அறிவித்துள்ளது. என்ன நீங்கள் கலந்து கொள்ள தயாரா

ஒருவர் மட்டும் வாக்களிப்பதற்காக வாக்கு சாவடி எங்கு அமைக்கப்பட்டது

குஜராத் மாநிலம் கிர் காட்டில் வசித்து வருபவர் மகந்த பரத்தாஸ் தர்சன்தாஸ். இவர் ஒட்டு போட்டதாலேயே நாடு முழுவதும் கவனம் பெற்றார். அப்படி என்ன விசேசம் என்கிறீர்களா.. கிர் காட்டில் இவர் வசிக்கும் பகுதியில் இவர் மட்டுமே தனித்து வசித்து வருகிறார். இவர் வாக்களிப்பதற்காக கடந்த 2004 ஆம் ஆண்டு இவர் வசிக்கும் பகுதியில் ஒரே ஒரு ஓட்டுக்காக மட்டும் வாக்கு சாவடி அமைக்கப்பட்டது. அதன் மூலம் இவர் உலகத்தின் கவனத்தை ஈர்த்தார். தற்போது 2019 வரை இவர் ஒருவருக்காக மட்டுமே ஆளரவமற்ற கிர் வனப்பகுதியில் வாக்கு சாவடி மையம் அமைக்கப்படடது என்றால் ஆச்சரியம் தானே..

37 ஆயிரம் இலவச அறுவை சிகிச்சை செய்து அசத்திய டாக்டர்

37 ஆயிரம் இலவச அறுவை சிகிச்சை செய்து அசத்திய டாக்டர் யார் தெரியுமா..அவர் எங்கிருக்கிறார் தெரியுமா.. அவர் இந்தியாவில் தான் இருக்கிறார். இந்தியாவில் உள்ள உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள புனித நகரான வாரணாசியைச் சேர்ந்தவர்தான் டாக்டர் சுபோத் குமார் சிங். இவர் அப்படி என்ன சாதித்து விட்டார். இவரது தந்தை ரயில்வேயில் வேலை பார்த்து வந்தார். எதிர்பாராத விதமாக அவருக்கு வேலை போகவே சுபோத்தும் அவரது சகோதரர்களும் மெழுகுவர்த்தி, சோப் உள்ளிட்டவற்றை தயார் செய்து கடை கடையாக சென்று விற்று குடும்பத்தை காப்பாற்றினர். இந்த கடினமான சூழலுக்கு மத்தியில் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். சுபோத். அது மட்டுமல்ல அவர் தனது தொழிலை தன்னுடைய மற்றும் தனது குடும்பத்தின் வளர்ச்சிக்கு மட்டும் உதவாமல், சமூகத்துக்கும் உதவும் வகையில் அமைத்துக் கொண்டார். இதன் மூலம் மேல் அன்ன பிளவு என்ற கோளாறால் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதன் மூலம் அது போன்ற 37 ஆயிரம் அறுவை சிகிச்சைகளை செய்து ஏழை குழந்தைகளுக்கு வாழ்வளித்துள்ளார். தற்போது சுற்று வட்டாரம் மட்டுமின்றி நாடு முழுவதும் அசல் ஹீரோவாக டாக்டர் சுபோத் குமார் சிங் பாராட்டப்படுகிறார். அவருக்கு பாராட்டுகள குவிந்து வருகின்றன.

2ஜி-க்கு குட்பை

சிங்கப்பூரில் உள்ள சிங்டெல், ஸ்டார் ஹப், எம்1 ஆகிய மொபைல் அலைவரிசை சேவை நிறுவனங்கள் தங்களின் 2ஜி சேவையை வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நிறுத்திக்கொள்வதாக தெரிவித்துள்ளன. இதனை தொடர்ந்து அந்த ரக மொபைல் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், 3ஜி, 4ஜி மொபைலுக்கு இனி மாறவேண்டியிருக்கும்.

ட்ரோன் ஆம்புலன்ஸ்

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அக்ரோ நிறுவனம் ஒன்று பறக்கும் ஆம்புலன்சை உருவாக்கியுள்ளது. நோயாளியையும், உடன் ஒரு மருத்துவ உதவியாளரையும் சுமந்துக்கொண்டு பறக்கும் வகையில் இந்த ஆம்புலன்ஸ் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் உள்ளே லைவ் கேமரா வசதியும், ஆடியோ கனெக்‌ஷனும் இருப்பதால், மருத்துவமனைக்கு வந்து சேர்வதற்குள் நோயாளியின் நிலைமையை ஆராய்ந்து, தகுந்த மருத்துவ ஆலோசனைகளை உதவியாளருக்கு கொடுக்க முடியும். இந்த ட்ரோன், மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். அவசர காலத்தில் சிட்டாய் பறக்கும் இந்த ட்ரோனுக்கு ஓட்டுனர் இல்லை மற்றொரு ஆச்சரியம். ஜி.பி.எஸ் வைத்து லொகேஷனை அடையாளம் கண்டு, தானாக பறந்து செல்கிறது. இதன் விலை சுமார் ஆறு கோடியாம்.

கல்லால் செய்யப்பட்ட பழம்பெரும் நாதஸ்வர கருவி

தமிழர்களின் பழம்பெரும் இசைக்கருவிகளுல் ஒன்று நாதஸ்வரம். அனைத்து மங்கல நிகழ்ச்சிகளிலும் தவறாம் இடம் பெறக் கூடியதாகும். இது பொதுவாக ஆச்சா என்ற மரத்தில்தான் செய்யப்படுகிறது. ஆனால் கல்லால் செய்யப்பட்ட நாதஸ்வரம் இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது. அதில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல் நாதஸ்வரம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்திலுள்ளது.மற்றொரு கல் நாதஸ்வரம்:  தூத்துக்குடி மாவட்டம் நவ திருப்பதிகளில் ஒன்றான  ஆழ்வார் திருநகரியில் உள்ள ஆதிநாதர் ஆழ்வார் கோயிலிலும் ஒரு கல் நாதஸ்வரம் உண்டு. சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் அரசாண்ட கிருஷ்ணப்ப நாயக்கர் என்ற மன்னரால் இக்கோயிலுக்கு வழங்கப்பட்ட   இந்த கல் நாதஸ்வரம். இப்போது வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே பாதுகாக்கபட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago