முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கனவுகள் என்ன நிறத்தில் வருகின்றன என்பது தெரியுமா?

உறங்கும் போது மனிதர்கள் கனவு காண்பது வழக்கம். 12 சதவீதம் பேர் கருப்பு வெள்ளையாகவே கனவு காண்கிறார்கள். பார்வை இல்லாதவர்களாலும் கனவு காண முடியும். நாம் ஏற்கனவே பார்த்தவரின் முகத்தை மட்டுமே கனவில் காண முடியும். விழித்து எழுந்த 5 நிமிடத்தில் 50 சதவீதம் கனவுகள் நமக்கு மறந்து போய் விடும். ஒரு சராசரி மனிதன் ஆயுளில் 6 ஆண்டுகள் கனவிலேயே செலவழிக்கிறான். நீங்கள் எங்கிருந்தாலும் ஒரு இரவில் சராசரியாக 4 முதல் 7 கனவுகள் வரை காண முடியும்.

பழங்கால கல் கோளங்கள் அல்லது கல்பந்துகள் எங்குள்ளன தெரியுமா?

பார்ப்பதற்கு பூங்காவில் அழகிய வடிவமைப்புக்காக செய்து வைக்கப்பட்டுள்ளதை போல காட்சியளிக்கும் கல் கோளங்கள் கோஸ்டா ரிகாவில் கண்டு பிடிக்கப்பட்டன. இவற்றை உள்ளூர் வாசிகள் கல் பந்துகள் என்றழைக்கின்றனர். 1 செமீ தொடங்கி 2 மீ விட்டம் கொண்ட சுமார் 15 டன் வரையிலான எடை கொண்ட ஏராளமான கல் கோளங்கள் கண்டறியப்பட்டன. இவை சுமார் கிபி 600 முதல் 1500 வரையிலான கால கட்டத்தைச் சேர்ந்தவையாக கூறப்படுகிறது. டிக்யூஸ் கலாச்சாரத்தை சேர்ந்த இந்த கற்கோளங்கள் எதற்காக செய்யப்பட்டன என்பது விளங்காத மர்மமாகவே வரலாற்றில் இது வரை இருந்து வருகிறது என்றால் ஆச்சரியம் தானே..

குச்சி ஐஸை கண்டுபிடித்தது ஒரு சிறுவன் என்றால் நம்ப முடிகிறதா?

குழந்தைகள் முதல் குச்சி ஊன்றி நடக்கும் கிழவர்கள் வரை குச்சி ஐஸ் விரும்பாதவர்கள் இருக்க மாட்டார்கள். இன்று உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் குச்சி ஐஸ் செய்முறையை கண்டுபிடித்தது, வெறும் 11 வயது சிறுவன்தான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தை சேர்ந்த ஃபிராங்க் எப்பர்சன் என்ற 11 வயது சிறுவன் எதேச்சையாக கண்டுபிடித்ததுதான் குச்சி ஐஸ். ஒருநாள், அவனுடைய வீட்டுக்கு வெளியே, சோடா பவுடர், நீர் மற்றும் அவற்றை கிளறும் குச்சி ஆகியவற்றை கையில் வைத்து விளையாடிக்கொண்டிருந்தான் ஒருகட்டத்தில், அவற்றை அங்கேயே மறந்து விட்டு, தூங்கப் போய்விட்டான். அடுத்த நாள் காலை, அங்கு வந்த பார்த்த போது, அவனுக்கு ஒரே ஆச்சர்யம். அவன் வைத்துவிட்டு போன சோடா தண்ணீர் அப்படியே உறைந்து போய் கிடந்தது. அதை சுவைத்து பார்த்த அவன் அதன் சுவையில் மயங்கிப் போனான். தொடர்ந்து சோடா நீரை உறைய வைத்து தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அதை அறிமுகம் செய்தான் எப்பர்சன். பின்னர் அதற்கு உரிய காப்புரிமை பெற்று ஒரு ஐஸ் கம்பெனியை தொடங்கினான். அன்றைக்கு அங்கு தொடங்கிய குச்சி ஐஸ் இன்றைக்கு உலகையே ஆட்டி படைத்து வருகிறது.

விண்வெளியில் பயிர்செய்த மிளகாயை சுவைத்த நாசா விண்வெளி வீரர்கள்

விண்வெளிக்கு செல்லும் விண்வெளி வீரர்களுக்கு உணவை கொண்டு செல்வதற்கு அதிக சக்தியும் நீண்ட காலமும் தேவைப்படுகிறது. குறிப்பாக செவ்வாய் கிரகத்துக்கு பேக் செய்யப்பட்ட உணவை கொண்டு செல்லும் போது அது கெட்டு போய் விடுகிறது. உணவின் தரம் பாதிக்கப்படுகிறது. வைட்டமின் சி மற்றும் கே போன்ற முக்கிய ஊட்டச்சத்துகள் பாதிக்கப்படுகின்றன என்றும் நாசா கூறியிருந்தது இங்கு கவனிக்கத்தக்கது.தற்போது விண்வெளியில் மிளகாயை பயிரிட்டு அறுவடை செய்ததன் மூலம் வைட்டமின் சி தேவையை பெறுவதற்கான மிகச் சிறந்த ஆதாரமாக இது உள்ளது. இதற்காக நாசாவைச் சேர்ந்த ஒரு குழு கென்னடி விண்வெளி மையத்தில் வேலை செய்தது. இதற்காக நாசா பிரத்யேகமாக Advanced Plant Habitat என்ற இன்குபேட்டர் போன்ற சாதனத்தையும் தயாரித்தது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த சாதனம் பூமியில் உள்ளதை போன்றே மிளகாய் வளர்வதற்கு சாதகமான நீர், உரம், ஒளி, வெப்பம் போன்றவற்றை தருகிறது. இந்த சாதனத்தில் களிமண் கலவையால் உருவாக்கப்பட்ட தளத்தில் தூவப்பட்ட மிளகாய் விதைகள் வளர்வதற்கு சாதகமான சூழல் கிடைத்தவுடன் மெதுவாக வளர தொடங்கின.மிளகாய் செடியின் வளர்ச்சியை 180 சென்சார்கள் கண்காணித்து தேவைக்கேற்ப நீர், உரம், ஒளி, வெப்பம் போன்றவற்றை அளித்தனர். இதனால் சர்வதேச விண்வெளி மையத்தில் செழித்து வளர்த்த மிளகாய் செடிகள் 4 மாதங்களில் அறுவடைக்கு தயாராகின. தற்போது அவற்றை நாசா விண்வெளி வீரர்கள் சுவைத்துள்ளனர். மேலும் பூமியில் விளைந்த மற்றும் விண்வெளியில் விளைந்த மிளகாய்களுக்கு இடையிலான ஒற்றுமை வேற்றுமைகளையும் ஆராய்வதற்காக அவற்றை பூமிக்கு கொண்டு வரவும் நாசா திட்டமிட்டுள்ளது. விண்வெளியில் மனிதர்கள் குடியேறும் முயற்சியில் நாசாவின் இந்த சாதனை ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

வெப்பமான மார்ச்

உலகில் 6 ஆயிரத்து 300 இடங்களில் இருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்க‌ளின் அடிப்படையில், கடந்த 137 ஆண்டுகளில் வெப்பம் மிகுந்த 2-வது மாதமாக க‌டந்த மார்ச் மாதம் நாசாவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ‌2016ம் ஆண்டு மார்ச்சில் அதிக வெப்பம் பதிவாகியிருந்தது.

டாடா ஏர்லைன்ஸ் பற்றி உங்களுக்கு தெரியுமா

தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியுள்ளது. அது அனைவருக்கும் தெரிந்த செய்தி.. தெரியாத செய்தி என்ன தெரியுமா.. இந்தியாவில் முதன் முதலில் விமான  போக்குவரத்தை இயக்கியது டாடா தான். அதன் நிறுவனர் Jehangir Ratanji Dadabhoy (JRD) Tata 1932 இல் அதை நிறுவனார். அப்போது அது டாடா ஏர்லைன்ஸ் என அழைக்கப்பட்டது. டாடா ஏர்லைன்ஸ் அப்போது உள்நாட்டு விமான சேவைகளை மட்டுமே இயக்கி வந்தது. பின்னர் 1946 ஆல் அது ஏர் இந்தியாவாக மாற்றப்பட்டது. அப்போது அது 'மகாராஜா; சின்னத்தை கொண்டதாக பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. 1948 இல், ஏர் இந்தியா நிறுவனம் ஐரோப்பாவுக்கு விமான சேவைகளை தொடங்கியது. தனியார்-பொது துறை பங்களிப்புடன் சர்வதேச சேவைகள் இயக்கப்பட்டன. அரசு வசம் 49 சதம் பங்குகளும், டாடா வசம் 25 சதவீத பங்குகளும் இருந்தன. 1953 இல் எர் இந்தியாவை முழுக்க தேசியமயமாக்கி நேரு அறிவித்தார். இதற்கு டாடா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.இந்நிலையில் தற்போது கிட்டத்தட்ட 68 ஆண்டுகளுக்கு பின்னர் ஏர் இந்தியா விமானம் டாடா வசமே திரும்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago