முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நட்சத்திரங்களை விட மரங்களின் எண்ணிக்கை அதிகம்

கேட்டால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். நாம் அனைவருக்கும் தெரியும் இந்த பிரபஞ்சத்திலேயே உயிரினங்கள் வாழக்கூடிய ஒரே கிரகம் பூமிதான். அது சரி. அதை விட ஆச்சரியம் என்னவென்றால் மில்கிவே என அழைக்கப்படும் கேலக்ஜியில் உள்ள நட்சத்திரங்களை காட்டிலும் பூமியில் உள்ள மரங்களின் எண்ணிக்கை அதிகம் என்கின்றனர் நாசா விஞ்ஞானிகள். 20215 இல் நேச்சர் இதழில் வெளியான ஆய்வு ஒன்றில் கூறப்பட்டிருந்த தகவலின்படி மில்கிவேயில் சுமார் 100 முதல் 400 மில்லியன் வரைதான் நட்சத்திரங்கள் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் பூமியில் உள்ள மரங்களின் எண்ணிக்கை அதைவிட அதிகமாம். அதாவது 3.04 ட்ரியல்லியன் என்கிறது அந்த ஆய்வு. ஆச்சரியம் தானே..

சுவிஸ் நாட்டில் விலங்கை வளர்ப்பது சட்டவிரோதம் ?

சுவிஸ் நாட்டில் கினியா பிக் விலங்கை தனியாக வீட்டில் வைத்து செல்லப்பிராணியாக வளர்ப்பது சட்டவிரோதமாகும் ஏனெனில் அவை கூட்டமாக வாழும் விலங்குகள் இனத்தை சேர்ந்தவையாகும் எனவே கினியா பிக் விலங்கை ஒற்றையாக தனியாக வீட்டில் வைத்து வளர்க்க அந்த நாடு தடை விதித்துள்ளது ஆகவே அவற்றை கூட்டமாக வளர்க்கலாமே ஒளிய ஒற்றையாக தனித்து வைத்து வளர்க்கக்கூடாது என்று அந்த நாடு அறிவித்துள்ளது.

இரண்டு அணுகுண்டு வீச்சில் தப்பியவர்

உலக வரலாற்றில் 1945 ஆகஸ்ட் 9 ஐ மக்கள் அத்தனை எளிதில் மறந்து விட முடியாது. அதே போல மறுநாள் ஆகஸ்ட் 10. ஏன்? கொடிய அமெரிக்கா உலகையே உலுக்கும் வகையில்  ஜப்பான் மீது அணுகுண்டு வீசி தாக்கிய நாள். அணுகுண்டை இனி பயன்படுத்தினால் உலகம் என்னவாகும் என்பதற்கு துயர சாட்சியாக நின்ற நாள். சுமார் 1.25 லட்சம் பேர் உயிரிழந்தனர். தலைமுறை தலைமுறையாக அதன் கதிர்வீச்சு பாதிப்பால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் அதிலும் ஒரு அதிசயம் நடந்தது. அணுகுண்டு வெடித்த போது சற்று தொலைவில் இருந்த ஒருவர் மட்டும் லேசான காயத்துடன் தப்பினார். பின்னர் தனது 93 வயது வரை வாழ்ந்து அந்த துயர சம்பவத்தின் உயிர் சாட்சியாக  விளங்கினார். அவர் பெயர் சுடோமு யாமகுச்சி. அணுகுண்டு வெடித்த போது அவருக்கு வயது 29. கடந்த 2009 இல் தனது 93 வயதில் சிறுநீரக மற்றும் வயிற்று புற்றுநோயால் மறைந்தார். என்ன ஆச்சரியம் பாருங்கள்.

உடற்பயிற்சியால் நன்மை

போதிய உடற்பயிற்சி இன்மையால் முதுகுத்தண்டானது தனது செயல்திறனை இழக்க ஆரம்பிக்கிறது. மேலும் இடுப்பு எழும்பும், பந்து கின்ன மூட்டுக்களும், பாத எழும்புகளும், தோல்பட்டை மூட்டுக்களும், கழுத்து எழும்பும் பாதிக்கப்படுவதற்கு உடற்பயிற்சி இன்மையே காரணம். உடற்பயிற்சி உங்கள் உடலின் முதுகுத் தண்டில் தொடங்கி, முக்கிய எழுப்பு இணைப்புகளின் செயல்திறனையும், ஆயுள் காலத்தையும் அதிகரிக்க செய்கிறது.

இதுதான் காரணம்

மங்கோலியத் தலைவர் செங்கிஸ்கான் பேரன் குப்ளேகான். அவர் கி.பி. 1286-இல் சீனப் பேரரசனானார். சீனர்களை தான் அடிமைப்படுத்தியதன் அடையாளமாக, அவர்கள் தங்கள் தலைமுடியைப் பின்னலிடும்படி ஆணையிட்டார். அதனால்தான் சீனர்கள் ஆண்களாக இருந்தாலும் பின்னல் போட்டுக் கொள்ள ஆரம்பித்தனர்.

அனைவருக்கும் ஏற்றது

உடற்பயிற்சியில் ஏரோபிக், அனரோபிக் என 2 வகை பயிற்சி முறைகள் உள்ளன. குறைந்த நேரத்தில் அதிகப்படியான ஆற்றலை வெளிப்படுத்தி ஓடும் 100 மீ. ஓட்டப்பந்தயம் ஏரோபிக் பயிற்சியாகவும், அதிக நேரத்தில் மிதமாக ஓடக்கூடிய 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் அனரோபிக் பயிற்சியாகும். அனரோபிக்  அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago