Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

27 முறை மாரடைப்பு

கால்பந்தாட்டத்தில் அதிக ஆர்வம் கொண்ட இங்கிலாந்தின் வெட்னஸ்பெரி பகுதியை சேர்ந்த 54 வயதான ராய்வுட்கால்  என்பவர் போட்டி ஒன்றில் விளையாடிய போது முதன் முறையாக இவருக்கு மார்பில் வலி ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன் இரு முறை மாரடைப்பு ஏற்பட்டது. இதனிடையே இவருக்கு கரோனரி ஆன்ஜியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் தயாரானபோது குடும்பத்தினர் எச்சரித்துள்ளனர். பலமுறை இருதயம் நின்று துடித்துள்ளதால் ஆக்சிஜன் அளவு குறைந்திருக்கும், இதனால் இவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிக குறைவு என அவர் அஞ்சியுள்ளனர். அடுத்த நாள் மதியம் ஒரு மணி அளவில் இவருக்கு 27-வது முறையாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இவரை மருத்துவமனையில் சேர்த்து 24 மணி நேர இடைவெளியில் இது ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவப்பு பாண்டா கரடி

சிவப்பு பாண்டா  கரடிகள் கிழக்கு இமயமலை மற்றும் தென்மேற்கு சீனாவில் காணப்படுகின்றன. இனச்சேர்க்கை காலத்தைத் தவிர தனிமையில் வாழக்கூடியது.  இது அழியும் அபாயத்தில் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் எண்ணிக்கையில் 40% குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகம் வேட்டையாடுதல் மற்றும் வாழ்விடங்கள் அழிந்து போகுதல் போன்ற காரணங்களால் தற்பொழுது காடுகளில் 10,000 க்கும் குறைவான ரெட் பாண்டா காணப்படுகிறது.  சிவப்பு பாண்டாக்களால் சயனைடை கூட ஜீரணிக்க முடியும். இவைகள் 40 வெவ்வேறு வகையான மூங்கில்களை ஜீரணிக்க கூடிய ஜீரண மண்டலத்தை கொண்டது. இந்த மூங்கில்களில் ஏராளமான சயனைடு சேர்மங்கள் இருக்கும். சயனைடை செரிமானம் செய்யக்கூடிய குடல் நுண்ணுயிரிகளின் கலவை சிவப்பு பாண்டாக்களின் குடலில் உள்ளது. சிவப்பு பாண்டாக்கள் கடல் மட்டத்திலிருந்து 7,800 முதல் 12,000 அடி வரையிலான உயரமான இடங்களில் குளிர்ச்சியான அகன்ற இலைகள் மற்றும் ஊசியிலையுள்ள காடுகளுக்குள் வாழ்ந்துவந்தது தெரியவந்துள்ளது. இதையும் தாண்டி ஒரு சில சிவப்பு பாண்டாக்கள் கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 14,400 அடி உயரத்தில் காடுகளில் வாழ்வதாகக் கண்டறியப்பட்டது

பரங்கி மலை : தெரிந்ததும் தெரியாததும்

பரங்கி மலை இந்தியாவின் பழமையான வரலாற்று சின்னங்களில் ஒன்று. இந்திய நிலவியல் வரை படத்தை தயாரித்த ஆங்கிலேயர்கள் இந்த மலையிலிருந்துதான் இமய மலையை அளவு எடுத்தார்கள் என வரலாறு சொல்கிறது. கடல் மட்டத்தில் இலிருந்து 300 அடி உயரமுள்ள இந்த மலையில்தான் செயிண்ட் தாமஸ் செதுக்கிய கற்சிலுவை ஒன்று இங்கு இன்றும் புழகத்தில் உள்ளது. ஏசுவின் 12 சீடர்களில் ஒருவரான தாமஸ் கேரளா வழியே சாந்தோம் வந்து அங்கிருந்து சைதாப்பேட்டை சின்னமலைக்கு இடம்பெயர்ந்து இறுதியாக இந்த மலைக்கு வந்து சேர்ந்ததாக கிறிஸ்துவ பெருமக்கள் நம்புகிறார்கள். இந்த மலைக்குச் செல்வதற்கு, 135 படிக்கட்டுகளைக் கொண்ட பாதையை ஆர்மீனியர்கள் அமைத்தனர். புனித தோமையரின் சிறு எலும்புத் துண்டு ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதேபோல 12 திருத்தூதர்களின் திருப்பண்டங்கள் (எலும்புத் துண்டு, சதைத் துண்டு உள்ளிட்ட நினைவுச் சின்னங்கள்) உட்பட 124 புனிதர்களின் திருப்பண்டங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மிக முக்கியமாக, புனித லூக்காவினால் கி.பி.50-ம் ஆண்டு வரையப்பட்டு, தோமையரால் இம்மலைக்குக் கொண்டு வரப்பட்டதாகக் கருதப்படும் அன்னை மரியாவின் ஓவியமும் இங்கு பாதுகாக்கப்படுகிறது.

சீனாவின் பெரிய புதையல்

சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் உள்ள நதியிலிருந்து, சுமார் 300 ஆண்டுகளுக்கு முந்தைய 10,000 க்கும் மேற்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை ஆய்வாளர்கள் மீட்டுள்ளனர். மேலும், பெரும் அளவில் வெண்கலத்தால் ஆன நாணயங்கள், வாள்கள், கத்திகள், ஈட்டிகள் மற்றும் இரும்பு ஆயுதங்களும் கிடைத்துள்ளன. 1646-ம் ஆண்டில், ஜியான்ஜோங் என்ற விவசாயிகள் தலைவர் மிங் வம்சவளியனரால் தோற்கடிக்கப்பட்டனர். அப்போது அவரது செல்வங்களை படைவீரர்கள் சிச்சுவான் உள்ள நதி வழியாக 1000 படகுகளில் எடுத்து சென்றபோது படகு மூழ்கியதாக நம்பப்படுகிறது. வறண்ட காலத்தில் நதியில் இருந்த தண்ணீரை வெளியேற்றி ஆராய்ச்சியாளர்கள் தோண்டியதில்  இந்த புதையல் கண்டுபிடிக்கப்பட்டது.

பிறந்த குழந்தைகள் 75 சதவீதம் நீராலானவை

பிறந்த குழந்தைகள் 75 சதவீதம் நீராலானவை என்றால் நம்ப முடிகிறதா.. ஆனால் அதுதான் உண்மை... குழந்தைகள் பிறந்ததும் பெரும்பாலும் அவை நீராகவே இருக்கின்றன. அவர்களது உடலில் 75 சதவீதம் நீரே இருப்பதாக நாசாவின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மனிதன் வளர வளர தனது நீர்ச்சத்தை இழப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வளர்ந்த மனிதர்கள் 55 முதல் 60 சசதவீதம் வரையில் நீரை இழக்கிறார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. என்ன அற்புதம் பாருங்கள் உடல் நீராலானது என்றால் ஆச்சரியம் தானே.

நன்மைகள் பல

பெரிய திரை கொண்டுள்ள ஸ்மார்ட்போன்களில் அதிக தகவல்களை ஒரே ஸ்வைப் மூலம் பார்க்க முடியும். இதோடு புகைப்படம், வீடியோ மற்றும் கேம் உள்ளிட்டவற்றை சிறப்பாக கையாளலாம். ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட சாதனம் எனில் ஸ்ப்லிட் ஸ்கிரீன் அம்சம் மூலம் ஒரே சமயத்தில் இரண்டு செயலிகளை இயக்க முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago