முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வீட்டு குறிப்பு

ஐம்பது கிராம் கொல்லையும், ஐம்பது கிராம் புளியும், 300 மில்லி அளவு வெந்நீரில் இரவில் ஊறவைக்க வேண்டும். காலையில் கொதிக்க வைத்து 100 மில்லியாக வற்றச்செய்யவேண்டும். வற்றியதும் வடிகட்டி சிறிது சுக்கு, மரமஞ்சள் பொடிகளைச் சேர்க்க வேண்டும். அத்துடன் தேன் கலந்து வெறும் வயிற்றில் பருகினால்  பசி தூண்டப்படும், செரிமானம் அதிகரிக்கும்.

பேக்ஸ் இயந்திரம் எப்படி உருவாச்சு தெரியுமா?

இங்கிலாந்து நாட்டில் அலெக்சாண்டர் பெயின் (Alexander Bain) என்பவர் 1843 இல் ஒரு எந்திரத்தை உருவாக்கினார். அவர் பல சோதனைகளையும் அதில் மேற்கொண்டார். அதில், செம்புக் கம்பிச்சுருளில் வைக்கப்படும் பேனா எழுதுவதை, சுருளின் மற்றோர் இடத்தில் இருந்த 2 ஆவது பேனா, அதை நகல் எடுக்கத் துவங்கியது.  பின்னர் 1851இல் ஃபிரெட்ரிக் பேக்வெல் (Fredric Bakewell) என்பவர் லண்டனில் நடைபெற்ற உலக வணிகப் பொருட்காட்சியில் இதை மக்களிடம் விளக்கிக் காட்டினார். தொடர்ந்து 1862 இல் இத்தாலி மருத்துவர் ஒருவர் இக்கருவியை ஒத்த வேறோர் கருவியை உருவாக்கி அதற்கு பான் டெலிகிராஃப் (Pan telegraph) எனப் பெயரிட்டார். இக்கருவி பெயின் உருவாக்கிய கருவியின் கோட்பாட்டில் அமைந்திருந்தது. "பிரெஞ்ச் அஞ்சல் மற்றும் தந்திச் சேவை" என்ற நிறுவனம் இதை 1856 முதல் 1870 வரை தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தியது.ஆர்தர் கோர்ன் (Arthur Korn) என்ற ஜெர்மன் விஞ்ஞானி 1902இல் புகைப்படங்களை அனுப்பக்கூடிய ஓர் இயந்திரத்தை உருவாக்கினார். இது புதிய பேக்ஸ் இயந்திரத்தின் அசலான முன்னோடி வடிவமாக திகழ்ந்தது. இதைக் கண்டறிந்த பெருமை அவரையேச் சேரும். அந்நாளில் பல ஜெர்மன் செய்தித்தாள் நிறுவனங்கள் இதைப் பயன்படுத்தி வந்தன. பின்னர் 1925ஆம் ஆண்டு ஒரு பிரான்ஸ் விஞ்ஞானி இதன் ஒளிப்படத் திறனை அதிகரித்து இக்கருவியை மேம்படுத்தினார். இந்த எந்திரமே சிற்சில மாறுதல்களுடன் புதிய பேக்ஸ் இயந்திரமாக தற்போதுவரை பயன்பாட்டில் இருந்து வருகிறது.

தமிழனின் துரதிஷ்டம்

14 வயதிலேயே மின்னஞ்சல் சிஸ்டத்தை உருவாக்கி பிரமிக்க வைத்தவர் அமெரிக்காவாழ் தமிழர் சிவா அய்யாதுரை. இவருக்கு ஆகஸ்ட் 30,1982-ல் அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக மின்னஞ்சலை கண்டுப்பிடித்தவர் என காப்புரிமை அளித்தும் மாடர்ன் வரலாற்றில் இவர் பெயர் இடம் பெறாமல் போனது வேதனைக்குரியது.

சாணத்திலிருந்து மின்சாரம் தயாரித்து 50 தெருவிளக்குகளை எரிய செய்யும் கிராமம்

நவீன அறிவியலில் எதுவும் சாத்தியம் என்பதற்கு இந்த செய்திதான் சாட்சி. முன்பு மாற்று எரிபொருள் என்ற வகையில் சாண எரிவாயு முறைகள் பின்பற்றப்ப்டடன. பெரும்பாலும் தற்போது அதையாரும் தொடர்வதில்லை என்ற போதிலும் இன்றைக்கும் அது ஒரு சிறந்த மாற்று எரிபொருள்தான். அதே போல மாற்று எரிசக்தி என்ற முறையில் தற்போது அறிவியலில் புதிய முறையாக மாட்டுச் சாணம் உள்ளிட்ட கால்நடை கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறை மேல்நாட்டு பண்ணைகளில் தொடங்கியுள்ளது. இந்தியாவில் சண்டிகர் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் தொடங்கப்பட்ட போதிலும் இன்னும் பரவலாகவில்லை. இதற்கு முன்மாதிரியாக காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்துள்ள வரதராஜபுரம் ஊராட்சி திகழ்கிறது. இங்கு கால்நடை கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் அந்த கிராமத்தில் உள்ள 50 தெரு விளக்குகள் எரிய வைக்கப்படுகின்றன. இதன் மூலம் சுமார் 12 மணிநேரம் இந்த ஆற்றலை  பயன்படுத்தி விளக்குகள் எரிகின்றன. இதை இன்னும் திட்டமிட்டு விரிவாக்கினால் கிராமத்துக்கான மின் தேவையையே சமாளிக்கலாம் என்கின்றனர். 

ஆண்டுதோறும் 7.5 செமீ நகரும் ஹவாய் தீவுகள்

புவியியல் படித்தவர்களுக்கும், கொஞ்சம் பொது அறிவு படைத்தவர்களுக்கும் இந்த கண்டங்கள் எவ்வாறு உருவாகின என தெரிந்திருக்கும். அவை மெல்ல மெல்ல நகர்ந்து ஒன்றுடன் ஒன்று சேர்ந்தும், ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்தும் கண்டங்களும் தீவுகளும் உருவாகின. உருவாகி வருகின்றன. இது புவியியலின் இயற்கை. இதில் பசிபிக் கண்டத்திட்டில் அமைந்துள்ள ஹவாய் தீவுகள் ஆண்டுதோறும் நகர்ந்து வருகின்றன. அவை வடமேற்காக நகர்ந்து அமெரிக்க கண்டத்திட்டில் அமைந்துள்ள அலாஸ்காவை நோக்கி நகர்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஆண்டு தோறும் சுமார் 7.5 செமீ தூரம் நெருங்கி வருவதும் தெரியவந்துள்ளது. கண்டங்கள் பிரிவதும், இணைவதும் பல லட்ச ஆண்டுகள் செயல்பாடு என்றாலும் நகர்வது என்பது ஆச்சரியம் தானே..

கழுதைகளை காணவில்லை

இன்றைய தலைமுறையினரில் பலர், கழுதைகளை நேரில் பார்க்கும் வாய்ப்பைக்கூட பெற்றிருக்க மாட்டார்கள். தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கழுதை வீட்டு விலங்காக இருந்தது. கழுதை தாவர உண்ணி. இது குதிரை இனத்தைச் சேர்ந்தது. கழுதை, பாலூட்டிகளில் குதிரை, வரிக்குதிரையைப் போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். முகத்தில் மூக்கின் அருகே வெண்மையாக இருப்பது இதன் அடையாளங்களில் ஒன்று.  40 ஆண்டுகள் வரைகூட கழுதைகள் உயிர் வாழும். கழுதைகள் தற்போது வெகுவாக அருகி வருகின்றன. 2007 - 2012 காலகட்டத்தில் இந்தியாவில் கழுதைகளின் எண்ணிக்கை 23% வீழ்ச்சி அடைந்தது. 2012 - 2019 ஆண்டுகளில் அது மேலும் 61.23% வீழ்ந்து, இப்போது வெறும் 1,20,000 கழுதைகள் மட்டுமே உள்ளன. இது உலகளாவிய போக்காக உள்ளது. சீனாவில் 1992-இல் ஒரு கோடியே பத்து லட்சம் கழுதைகள் இருந்தன; இப்போது வெறும் 26 லட்சமாகச் சுருங்கி விட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago