முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

அடிக்கடி தக்காளி ...

தக்காளியில் அதிகளவு உள்ள சிட்ரிக் ஆசிட், வயிற்றில் அதிக கேஸ் மற்றும் எரிச்சலை உண்டாக்கி, ஜீரண சக்தியை குறைத்துவிடும். மேலும், சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, இருமல், தும்மல், தொண்டை எரிச்சல் போன்ற பிரச்சனையை உருவாக்கும். கிட்னி தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள், பொட்டாசியம் நிறைந்த தக்காளியை அதிகம் சாப்பிடக் கூடாது.

புதிய வசதி

ஜிஃப் - கிராஃபிக் இன்டர்சேஞ்ச் ஃபார்மேட்,  ஜூன் 15, 1987-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த மென்பொறியாளரான ஸ்டீவ் வில்வைட் என்பவர் கண்டறிந்த ஜிஃப்களின் 31-வது பிறந்த தினத்தை பேஸ்புக் கொண்டாடுகிறது. அந்த வகையில் பேஸ்புக் கமெண்ட்களில் ஜிஃப்களை பயன்படுத்தும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 1300 கோடி ஜிஃப்கள் மெசன்ஜர் மூலம் அனுப்பப்பட்டதாம்.

உலகின் மிக உயரமான சிலை எங்கிருக்கிறது தெரியுமா?

உலகில் மிக உயரமான சிலை எங்கிருக்கிறது தெரியுமா.. இந்தியாவில்தான். குஜராத் மாநிலம் சர்தார் சரோவர் ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலைதான் உலகிலேயே மிக உயரமான சிலையாகும். 182 மீட்டர் அதாவது 597 அடி உயரம் கொண்ட இந்த சிலை சீனாவில் உள்ள புத்தர் சிலை, அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை ஆகியவற்றை முறியடித்து முதல் இடத்தை பிடித்துள்ளது. 2 ஆவதாக சீனாவில் உள்ள ஸ்பிரிங் கோயிலில் உள்ள புத்தர் சிலை 128 மீட்டர் உயரமும், 3 ஆவதாக சீனாவில் நன்சானில் உள்ள 108 மீட்டர் உயரம் கொண்ட மற்றொரு புத்தர் சிலையும் 3 ஆவது இடத்தில் உள்ளது. இதில் அமெரிக்காவின் 93 மீட்டர் உயரம் கொண்ட சுதந்திர தேவி சிலைக்கு 4 ஆவது இடமே கிடைத்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் தொடர்ந்து கேட்பது ஏலியனின் குரலா?

செவ்வாய் கிரகத்தில் நாசாவின் இன்சைடர் விண்கலம் இரு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தகவலை அனுப்பியது. அதில் செவ்வாய் கிரகத்தில் இருந்து தொடர்ந்து ஒரு வித மர்மமான ஒலி தொடர்ந்து இருந்து வருவதை அது பதிவு செய்து அனுப்பியுள்ளது. இது அங்கு வேற்றுகிரக வாசிகள் எனப்படும் ஏலியன்களின் எழுப்பும் ஒலியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருந்த போதிலும் இதை விஞ்ஞானிகள் இதுவரை அதை உறுதி செய்யவில்லை என்ற போதிலும் செவ்வாயிலிருந்து எழும் ஒலியின் மர்மம் தொடர்ந்து நீடித்து வருகிறது என்பதுதான் ஆச்சரியமானது.

சுற்றுலாவில்...

2016-ம் ஆண்டுக்கான உலகளவில் அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தாண்டு ஐரோப்பிய நாடான ஸ்பெயின் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பிரான்ஸ் இந்தாண்டு 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியா இந்த பட்டியலில் 40 வது இடத்தில் உள்ளது.

தானியங்கி பேருந்து

பாரீஸின் 2 ரயில் நிலையங்களுக்கு இடையில் தானியங்கி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் இல்லாமல் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய பேருந்து சேவையானது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதற்காக சிறப்பு பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. 130 மீட்டர் தொலைவிற்கு இயங்கும் இந்த தானியங்கி பேருந்தில் 10 பயணிகள் வரை பயணிக்க முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago