முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பாம்புகளால் நிலநடுக்கத்தை உணர முடியுமா ?

பொதுவாக விலங்குகள் மனிதர்களைக் காட்டிலும் இயற்கை சார்ந்து மிகவும் நுண்ணுணர்வு மிகுந்தவையாக செயல்படக் கூடியவை இதில் குறிப்பாக பாம்புகள் நிலநடுக்கத்தை முன்கூட்டியே உணரக்கூடிய திறன் படைத்தவையாக விளங்குகின்றன இவைகளுக்கு நிலநடுக்கம் வருவது முன்கூட்டியே தெரிந்துவிடும் அதிலும் குறிப்பாக 75 மைல்கள் முன்பாகவே நிலநடுக்கம் ஏற்படுவதை இதை உணர்ந்து கொள்கின்றன மேலும் நிலநடுக்கம் தோன்றுவதற்கு 5 நாட்களுக்கு முன்பே பாம்புகள் அதை அறிந்து கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன எவ்வளவு ஆச்சரியம் பாருங்கள்

உலகின் முதல் பல்கலை கழகம்

உலகின் முதல் பல்கலை கழகம் பண்டைய இந்தியாவில் அமைக்கப்பட்டது  என்பது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும். அதன் பெயர் தக்சஸீலா. பரதன் தனது மகன் தட்சனுக்காக நிர்மாணிக்கப்பட்ட நகரம் தக்சஸீலம் என்று சொல்லப்படுகிறது. தட்சஸீல பல்கலை கழகத்தின் காலம் கிமு 6 லிருந்து 7 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அர்த்த சாஸ்திரம் என்ற அரசியல் நூலை எழுதிய சாணக்கியர் இங்கு பேராசிரியராக பணியாற்றினார். அவரிடம் மெளரிய அரசர் சந்திர குப்தர் கல்வி பயின்றார். மற்றொரு புகழ் பெற்ற பேராசிரியர் சமஸ்கிருத அறிஞரான பாணினி. அசோகர் காலத்தில் இது மேலும் விரிவாக்கம் பெற்றது. காலப்போக்கில் பல்வேறு படையெடுப்புகள், ஆட்சிமாற்றங்கள் காரணமாக தட்சஸீலம் படிப்படியாக அழிந்தது.  அது சரி தற்போது அந்த இடம் எங்கே இருக்கிறது என்கிறீர்களா..பாகிஸ்தானில். பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகை ஆளும்

செல்போன் போன்ற கையடக்கக் கருவிகளில், தொடுதிரையைத் தாங்கி வெளியான முதல் செல்போன் என்ற பெருமையுடன் ஸ்டீவ் ஜாப்ஸால் ஆப்பிள் ஐபோன் 2007ம் ஆண்டு அறிமுகமானது. ஒரே ஒரு ஸ்மார்ட்போன் மூலம் உலகையே மாற்ற முடியும் என்று பத்தே ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவனம் நிரூபித்துள்ளது

பைலட் இல்லாமல் பறக்கும் ஹெலிகாப்டர் அமெரிக்கா முதன்முறையாக சாதனை

ஆள் இல்லாத விமானங்களையும், பைலட் இல்லாத விமானங்களையும் தற்போது நாம் கேள்வி பட்டு வருகிறோம். தற்போது காரிலும் ஆட்டோ பைலட் எனப்படும் தானியங்கி கார்கள் வந்து விட்டன. ஆனால் மிகவும் சிக்கலான செயல்பாடுகளை கொண்ட ஹெலிகாப்டர்களை பைலட் இல்லாமல் ஓட்ட முடியுமா என்ற கேள்வி எழுவது இயல்புதான். ஆனால் தற்போது முடியும் என அமெரிக்கா நிரூபித்துள்ளது. பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர்களை முழுக்க முழுக்க பைலட்டே இல்லாமல் ஆட்டானமஸ் முறையில் இயங்கும் வரையில் வடிவமைத்துள்ளது அமெரிக்க ராணுவம். இதற்கான முதல் சோதனை ஓட்டம் கடந்த 5 ஆம் தேதியும் பின்னர் கடந்த 7 தேதியும் நிகழ்த்தி பார்க்கப்பட்டன. இதில் இந்த பைலட் இல்லா ஹெலிகாப்டர் மிகச் சரியாக மேலெழுந்து சென்று பறந்து. மிகச் சரியாக தரையில் வந்து லேண்ட் ஆனது.  இனி வருங்காலத்தில் ஆட்டோ பைலட் கார்களை போல ஆட்டோ பைலட் ஹெலிகாப்டர்களும் வானில் வலம் வருவதை பார்க்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

விண்வெளியில் பயிர்செய்த மிளகாயை சுவைத்த நாசா விண்வெளி வீரர்கள்

விண்வெளிக்கு செல்லும் விண்வெளி வீரர்களுக்கு உணவை கொண்டு செல்வதற்கு அதிக சக்தியும் நீண்ட காலமும் தேவைப்படுகிறது. குறிப்பாக செவ்வாய் கிரகத்துக்கு பேக் செய்யப்பட்ட உணவை கொண்டு செல்லும் போது அது கெட்டு போய் விடுகிறது. உணவின் தரம் பாதிக்கப்படுகிறது. வைட்டமின் சி மற்றும் கே போன்ற முக்கிய ஊட்டச்சத்துகள் பாதிக்கப்படுகின்றன என்றும் நாசா கூறியிருந்தது இங்கு கவனிக்கத்தக்கது.தற்போது விண்வெளியில் மிளகாயை பயிரிட்டு அறுவடை செய்ததன் மூலம் வைட்டமின் சி தேவையை பெறுவதற்கான மிகச் சிறந்த ஆதாரமாக இது உள்ளது. இதற்காக நாசாவைச் சேர்ந்த ஒரு குழு கென்னடி விண்வெளி மையத்தில் வேலை செய்தது. இதற்காக நாசா பிரத்யேகமாக Advanced Plant Habitat என்ற இன்குபேட்டர் போன்ற சாதனத்தையும் தயாரித்தது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த சாதனம் பூமியில் உள்ளதை போன்றே மிளகாய் வளர்வதற்கு சாதகமான நீர், உரம், ஒளி, வெப்பம் போன்றவற்றை தருகிறது. இந்த சாதனத்தில் களிமண் கலவையால் உருவாக்கப்பட்ட தளத்தில் தூவப்பட்ட மிளகாய் விதைகள் வளர்வதற்கு சாதகமான சூழல் கிடைத்தவுடன் மெதுவாக வளர தொடங்கின.மிளகாய் செடியின் வளர்ச்சியை 180 சென்சார்கள் கண்காணித்து தேவைக்கேற்ப நீர், உரம், ஒளி, வெப்பம் போன்றவற்றை அளித்தனர். இதனால் சர்வதேச விண்வெளி மையத்தில் செழித்து வளர்த்த மிளகாய் செடிகள் 4 மாதங்களில் அறுவடைக்கு தயாராகின. தற்போது அவற்றை நாசா விண்வெளி வீரர்கள் சுவைத்துள்ளனர். மேலும் பூமியில் விளைந்த மற்றும் விண்வெளியில் விளைந்த மிளகாய்களுக்கு இடையிலான ஒற்றுமை வேற்றுமைகளையும் ஆராய்வதற்காக அவற்றை பூமிக்கு கொண்டு வரவும் நாசா திட்டமிட்டுள்ளது. விண்வெளியில் மனிதர்கள் குடியேறும் முயற்சியில் நாசாவின் இந்த சாதனை ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

கொம்பு வைத்த கிரீடங்கள் எப்போது தோன்றின தெரியுமா?

ராஜாக்கள், மந்திரிகள், தளபதிகள் போன்றோர் அணியும் கிரீடம் அல்லது தலை கவசங்களை நாம் திரைப்படங்களிலும், அருங்காட்சியகங்களிலும் நாம் பார்த்திருப்போம். வடமேற்கு ஐரோப்பாவில் 8 முதல் 11 நூற்றாண்டு வரையிலும் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தி குடியேறிய வைக்கிங் எனப்படும் ஒருவகை கூட்டத்தினரின் கால கட்டத்தில் உருவானதாக கருதப்பட்டு வந்தது. ஆனால் அண்மைய ஆய்வுகள் இதில் புதிய வெளிச்சத்தை பாய்ச்சியுள்ளன. ஐரோப்பாவில் காணப்பட்ட ெகாம்பு வைத்த கிரீடங்கள் அல்லது தலை கவசங்கள் அதற்கும் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தையவையாக இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். பித்தளை கால கட்டம் என வர்ணிக்கப்படும் கிமு 3300 கால கட்டமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. 1942 இல் கோபன்ஹேகனில் இது தொடர்பான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago