முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

குடியமர்த்தப்பட்ட தமிழர்கள்

கடந்த 1860-ம் ஆண்டு கால கட்டத்தில் தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அதிக அளவில் குடியமர்த்தப்பட்டனர். அந்நாட்டில் விளையும் கரும்பு, பருத்தி போன்ற வேளாண் பணிகளுக்காக தமிழகர்கள் அங்கு குடியமர்த்தப்பட்டனர். உலக நாடுகளில் வெளிநாட்டு மக்களை முதலில் குடியமர்த்திய முதல் நாடு தென் ஆப்பிரிக்காதான். தென் ஆப்பிரிக்காவில் கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய மாநிலத்தவர்கள் குடியமர்த்தப்பட்ட போது இந்தியா ஒப்பீனியன் என்ற பத்திரிகை வெளியிடப்பட்டது. அந்த பத்திரிகை தமிழில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பூமியை தொடர்ந்து ...

பூமியை அடுத்து உயிரினங்கள் வாழ ஏற்றதாக கருதப்படும் செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்வது தொடர்பாக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அதிக ஒளி உமிழும் விளக்குகள் மூலம் செவ்வாய் கிரகத்தின் வெப்பநிலையையும், அங்கு இருப்பது போன்ற கார்பன் டை ஆக்ஸைடு உள்ளிட்ட வளிமண்டல சூழலையும் உருவாக்கி உருளைக்கிழங்கை விளையவைத்துள்ளனர்.

கண்ணும் கருத்துமாக

கண்கள் சோர்வாக இருந்தால், பார்ப்பதில் சிரமத்தை உணரக்கூடும். கண்களில் எரிச்சல் அதிகமாக இருந்தாலோ, சிவந்து காணப்பட்டாலோ, கண்கள் வறட்சி அடைந்துள்ளது என்று அர்த்தம். இந்நேரத்தில் நீரை அதிகம் குடிப்பதோடு, கண்களுக்கு போதிய ஓய்வளிக்க வேண்டும். மேலும், நீர் வடிந்தால் கண்கள் சோர்வடைந்துள்ளது என அர்த்தம்.

யுரேகா, யுரேகா என சொன்னவர் யார் தெரியுமா?- ஏன் சொன்னார்

ஆர்கிமிடிஸ்    என்பவர்    கிரேக்க நாட்டைச் சேர்ந்த  ஒரு  கணித  மேதை;  இவர் வாழ்ந்த  காலம் கி.பி.287-212  ஆகும்.  ஆர்கிமிடிஸ்  தமது  கோட்பாடுகளை   நிரூபிப்பதற்கு, உரிய   சோதனைகளை நடத்திப்  பார்ப்பதில்  பெரும்  நம்பிக்கை கொண்டிருந்தார்.   அவர் கண்டுபிடித்த  ஆர்கிமிடியன்  திருகாணி தொழில் நுட்பம் நீரேற்றும்   பயன்பாட்டிற்கு  உரியதாக  இன்றும்  வேளாண் பாசனத்  துறையில்  விளங்கி  வருகிறது. நெம்புகோல்கள் மற்றும்  கப்பிகள் (pulleys) பயன்பாட்டிற்கு உரிய விதிகளை,  ஆர்கிமிடிஸ்தான்  அறிவியல்  உலகிற்கு  அளித்தார். ஆர்கிமிடிசின்  வாழ்க்கையில்  நடந்ததாகக்  கூற்ப்படும்  ஒரு  நிகழ்வு   இன்றும் அறிவியல்   உலகில்   நினைவு  கூறப்படுவதாக  விளங்கி  வருகிறது.  குளியலறையில் நிர்வாணமாகக்  குளித்துக்  கொண்டிருந்த நிலையில்,  அவர் ஓர் அறிவியல் உண்மையைக்  கண்டறிந்தார்; உடனே, "கண்டுகொண்டேன், நான் கண்டு கொண்டேன்" என்னும் பொருள்படும் ‘யுரேகா! யுரேகா! (Eureka!)’ எனக் கூறியவாறே தெருவில் இறங்கி நிர்வாணமாக ஓடினார் என்பதே அந்நிகழ்வு. இந்நிகழ்ச்சி நடந்ததோ அல்லது கற்பனையோ, ஆனால் அவர் கண்டுபிடித்த உண்மை இன்றும் போற்றப்பட்டு வருகிறது; அவ்வுண்மை இதுதான்: "ஒரு பொருள் நீரில் மிதந்தால் அல்லது மூழ்கினால், அது தன் எடைக்கு சமமான நீரை வெளியேற்றுகிறது".

தூக்கம் வர

தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு இதோ ஒரு டிப்ஸ். உறங்குவதற்கு முன்பு ஒரு வாழைப்பழமும், வெதுவெதுப்பான பாலும் சாப்பிடுவது நல்ல உறக்கத்தை தரும், காரணம் உறக்கதிற்கான ஹார்மோன் மெலடோனின் மூலம் சிறந்து செயல்படுகிறது. மேலும், பாலில் இருக்கும் டிரிப்டோபென் ஆழ்ந்த உறக்கத்தை நமக்கு தருகிறது.

எச்சரிக்கை எச்சரிக்கை

அமெரிக்காவில் தயாராகியுள்ள ஐபோன் வடிவிலான ஸ்மார்ட்போன் வடிவ துப்பாக்கியில் 9 மி.மீ. அளவு கொண்ட குண்டுகளைப் பயன்படுத்த முடியும். இணையதளம் ஒன்றில் விற்பனைக்கு வர உள்ள இந்த நவீன துப்பாக்கியை ஆன்லைனில் 12,000-த்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர் என்பது ஆச்சரியமான தகவல்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 1 min ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 1 month 4 weeks ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 1 month 4 weeks ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago