முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நீர் பட்டால் வெடிக்கும் ரசாயனங்கள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா?

பொதுவாக ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் தண்ணீரை ஊற்றி அணைப்பது வழக்கம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக இருப்பதுதான் அறிவியலின் சிறப்பு. ஆம், சில தனிமங்கள் தண்ணீர் பட்டாலே பட்டென்று வெடித்து விடும் என்றால் ஆச்சரியம் தானே... பொட்டாசியம், சோடியம், லித்தியம், ரூபிடியம, சீசியம் போன்றவைதான் அவை. இவை தண்ணீர் பட்டால் வெடிக்கும் திறன் கொண்டவை. வெளியில் எடுத்து விட்டால் மிகவும் சமத்தாக அமைதியாக இருந்துவிடும்.

நாளைய உலகம்

இந்த நான்கு கால் ரோபோ நாய்களை போன்றே இருக்கும். இந்த நான்கு கால் ரோபோ நிலநடுக்கத்தின் பொது மீட்பு பணி உதவிகளுக்கு பயன்படுத்த உள்ளனர்.இந்த ரோபோக்கள் இயற்கை பேரழிவுகளுக்கு குறிப்பாக பின்வரும் தேடல் மற்றும் மீட்பு பணிகளுக்கு உதவுவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இது அழகாக இருந்தாலும் இந்த ரோபோக்கள் ஒரு நாள் மனித உயிர்களை காப்பாற்றும் என நம்பப்படுகிறது.

நீர்மூழ்கி கப்பல்களுக்கு கருப்பு வர்ணம் பூசப்படுவது ஏன்?

நீர்மூழ்கி கப்பல்கள் பெரும்பாலும் கருப்பு (Black) நிறத்தில் நிறத்தில்தான் இருக்கும். நீர்மூழ்கி கப்பல்களின் உடற்பகுதி சாம்பல் நிறத்திலும், அடுக்குகள் கருப்பு நிறத்தில் வர்ணம் பூசப்பட்டன. ஆனால் 1930களில் ஒரு பிரச்னை தெரியவந்தது. இந்த வகையில் வர்ணம் பூசப்பட்ட நீர்மூழ்கி கப்பல்கள், நீருக்கு அடியில் ஆழமாக செல்லாவிட்டால், மேலே பறக்கும் விமானங்கள் மூலமாக எளிதில் கண்டுபிடிக்கப்படும் என்பதுதான். மீண்டும் பல்வேறு சோதனைகளை அமெரிக்கா நடத்தியது. இறுதியில் அடர் நீல நிறம்தான் நீர்மூழ்கி கப்பல்களுக்கு பாதுகாப்பானது என முடிவு செய்யப்பட்டது.  ஆனால் இந்த அடர் நீல நிறம் எளிதில் மங்க கூடியதாக இருந்தது. இதன் காரணமாக நீரில் மூழ்கி இருக்கும்போது, நீர்மூழ்கி கப்பல்களை எதிரிகள் எளிதில் கண்டறியும் சூழல் உருவானது. இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளை தொடர்ந்து இறுதியாக தான் நீர்மூழ்கி கப்பல்களுக்கு ஏற்ற நிறமாக கருப்பு முடிவு செய்யப்பட்டது. இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன. முதலாவதாக கருப்பு நிறத்தின் உருமறைப்பு திறன். எதிரிகளின் கண்களுக்கு கருப்பு நிறம் எளிதில் சிக்காது. கருப்பு நிறம் நீடித்து உழைக்கும் என்பது இரண்டாவது காரணம். 

நவீன தொட்டில்

குழந்தைகள் வீட்டில் தூங்குவதை விட, கார் பயணங்களில் இயல்பாகவே உறங்கிவிடும். இந்த வழக்கத்தை வைத்து குழந்தைகளுக்கென நவீன படுக்கை ஒன்றை கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு உருவாக்கியுள்ளது. வீட்டில் எந்தவித தொந்தரவுமின்றி குழந்தைகள் உறங்க இது உதவுகிறது. மேக்ஸ் மேட்டார் ட்ரீம்ஸ் க்ரிப் என்ற பெயரில் அந்நிறுவனம் தயாரித்துள்ள குழந்தைகளுக்கான இந்தத் தொட்டிலில் பல தொழில்நுட்பங்களும் இடம்பெற்றுள்ளன. தெருவிளக்குகள் போன்ற உணர்வை ஏற்படுத்தும் எல்.இ.டி விளக்குகள், காரின் ஒலியை மிமிக் செய்யக்கூடிய அமைப்புகள் இந்த நவீனத் தொட்டிலில் உள்ளன. குழந்தை எதுபோன்ற பயணத்தில் உறக்கத்தை எட்டும் என்பதை பெற்றோர்கள் அறிந்துகொள்ளும் வகையில் செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடவுளின் அவதாரம்

உத்தரப்பிரதேசத்தில் ஹார்லிகுவின் பேபி சிண்ட்ரோம் எனும் மரபியல் நோய் பாதிப்பினால் பெண் குழந்தை ஒன்று ஏலியன் போல் பிறந்துள்ளது. அந்த குழந்தையின் கண்கள் பெரிதாகவும், சிதைக்கப்பட்ட முகம், மிக பெரிய தலை, தலையின் மேல் கட்டி போன்று காணப்படும் உருவத்தை கண்டு அப்பகுதி மக்கள் கடவுளின் அவதாரமாக குழந்தையை பார்கின்றனர்.

சிறிய பாடலை ஆட்களின் பெயராக கொண்ட அதிசய கிராமம் தெரியுமா?

மனிதர்களுக்கு பெயரிடுவதுதான் உலகம் முழுவதும் உள்ள மனித இனத்தின் கலாச்சார அடையாளமாக இன்றைக்கும் திகழ்ந்து வருகிறது. ஒருவரது பெயரை வைத்தே நாடு மொழி தேசம் இனம் கலாச்சாரம் பண்பாடு, வரலாறு உள்ளிட்ட பல்வேறு மனித குல அடையாளங்களையும் கண்டறிந்து விட முடியும். ஒவ்வொரு கலாச்சாரத்துக்கும் என தனித்த பெயரிடல் முறைகளும், பெயர்களும் உள்ளன. அவ்வாறு பெயர் சூட்டுவதற்கென தனி சடங்குகளும், பழக்க வழக்கங்களும் உள்ளன. ஒரு சிறிய சுட்டு விளிப்பாக பெயரிடுவதுதான் பொதுவாக உலக வழக்கு. ஆனால் ஒரு சிறிய பாடலை ஹம்மிங் செய்வது போல பெயரிடும் விசித்திர கிராமம் உள்ளது என்பது தெரியுமா.. அதுவும் அந்த கிராமம் உலகில் வேறு எங்கோ அல்ல.. இந்தியாவில் உள்ள மேகாலயாவில் தான் உள்ளது. காங்தோங் என்றழைக்கப்படும் அழகிய மலைக்கிராமத்தில்தான் ஓவ்வொருவர் பெயரும் அழகிய சிறிய பாடலைப் போன்ற ஹம்மிங்கை கொண்டது. நாலைந்து பேர் சேர்ந்து ஒருவர் பெயரை மற்றொருவர் தொடர்ச்சியாக சொல்லக் கேட்டால் நாம் நிஜமாகவே ஒரு பாடலைத் தான் கேட்கிறோமோ என்ற ஆச்சரியம் ஏற்படும். மேலும் உலகிலேயே சுற்றுலா செல்வதற்கு ஏற்ற தூய்மையான மலைக் கிராமம் என்ற ஐநாவின் பட்டியலிலும் இந்த இந்த ஊர் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு. தாளாதா ஆச்சரியம் தானே..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago